சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
1
இவ்வுலக வாழ்வை உறுதியானது என்று நம்பி, எப்போதும் அலைந்து திரியும் மூடருடைய மனமெல்லாம், கலகம் செய்யும் ஐம்பொறிகள் என்னும் வலைவிடாமல் வளைக்கும்.
சாமி நாத சண்முகா2
நியமம் தேடும் மனமே! சாமிநாதனே! சண்முகா! நீ வந்து மன்மதன் வருத்தும் செயலை என்மேல் ஏவாமல் ஏவாமல் செய் என்பாயாக.
பூசி வா விபூதி நீ3
அன்பான மனமே! குற்றமில்லாத உடம்பின்மீது நாள்தோறும் திருநீற்றைப் பூசி வருவாயாக! அவ்வாறு செய்து வந்தால் குற்றமில்லாத செல்வத்தை மிகுதியாக அடைவாய்.
காறு கெட்ட கந்தனால்4
அளவில்லாத கந்த அருளால் உன் துன்பத்தை ஒழிக்கவுள்ள நீ திருவாறெழுத்தையன்றி வேறு எழுத்தை விரும்பாதே.
சாமம் ஓது மா சதா5
சாம வேதம் கூறும் சதாசிவப் பெருமான் மகனான எமது கடவுள் குகேசனுடைய திருமேனியாகும் ஓங்காரமும் இனிய மந்திரமாகும்.
இறைமுன் இட்டு உணாத ஊண்6
இறைவன் முன்னே படைத்து உண்ணப்படாத உணவு நஞ்சை ஒக்கும். அறிவுடைய தூயன் வேலன் அவனுக்குக் கொடுமையாக உயிரைக் கொன்ற மாமிசத்தை நைவேத்தியம் என்று படைக்காதீர்.
நிலவு மேனி நிருமலப்7
ஒளிபொருந்திய திருமேனியுடைய குற்றமில்லாத புலவனாகிய எம்தந்தை முருகவேளின் ஒப்பற்ற திருவடி மலரை நாள்தோறும் வணங்கினால், எந்த வினையும் விலகிவிடும்!
வடிவு மைந்தன் அடி மலர்8
அழகுடைய மகன் முருகனின் திருவடி மலரின் அழகு கண்டு மகிழ்பவர் அழகுடைய பெண்களின் அழகைக் குறைவுடையதெனக் கூறுவர்.
ஆதி அந்தம் அற்ற சேய்9
முதலும் முடிவும் இல்லாத சேயின் குளிர்ச்சியை வெல்லும் சிவந்த திருவடி மலரைத் தரிசித்த அறிஞர்க்கு உலகப்பற்று ஏது?
இச்சை நோயர் எத்துணைப்10
உள்ளே மூச்சுக்காற்றை இழுக்கும் மனமே! ஆசை என்னும் நோய் பிடித்தவர்கள் எவ்வளவு பசும்பொன் பெற்றாலும், அற்ப ஆசையில் சோர்வடைய மாட்டார்கள்!
வரையிலும் பை வண்டு அறை11
உன்னைச் சரணடைந்த அடியார் மலையிலும் அழகிய வண்டுகள் ஒலிக்கும் காடுகள் செறிந்த இடங்களிலும் தவம் செய்ய வேண்டுமோ?
நிட்டை கூடி நிறுவினும்12
உடம்பின்மீது பற்று வைத்துக்கொண்டு நிட்டையைச் செய்தாலும், சஷ்டித் தலைவரான கந்தவேளின் அருள் இல்லாதவர், அத்துவிதமாக வாழுதற்குரிய ஞானத்தைப் பெறமாட்டார்; விடுதலை கிட்டாது.
முத்தன் ஆன முருகனைப்13
முத்தியாக விளங்கும் முருகப்பெருமானைப் பத்தியுடன் வணங்குவோர் மரணமிலா ஞானத்துடன் இவ்வுலகில் நித்தியமாக வாழ்வார்கள்.
அருணை நாதன் அறிவினால்14
அருணகிரிநாதரின் ஞானத்தால் கூடும் சிவபெருமான் அருள், முருகவேளை முழுவதும் நினைக்க யோக மணம் வீசும்.