சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
1
அப்பனே! உனக்கு அடைக்கலம். எங்களுடைய ஆதி கடவுளாக உள்ளவனே உனக்கு அடைக்கலம். தூய்மையான அறிவானவனே உனக்கு அடைக்கலம். சைவசமயத் தெய்வமாக விளங்கும் உனக்கு அடைக்கலம், ஞானமும் முத்தியுமானவனே உனக்கு அடைக்கலம். மெளன முனிவனாக உள்ளவனே உனக்கு அடைக்கலம். வேதங்களை அளித்த அறிவானவனே உனக்கு அடைக்கலம். என்னை நன்கு அறிந்துகொள்ளும்படி காட்டியருள்வாயாக.
காட்டிய உலகு யாவும் காக்கு நின் அருளில் என்னைக்2
நீ தோற்றுவித்த உலகங்கள் யாவும் காக்கும் உன் அருளில் என்னைச் சேர்த்து அடிமைகொள்ளும் எம் அரசனே! குமரனே! அடைக்கலம். கடம்ப மாலையை அணியும் அகன்ற திருமார்புடையவனே! உள்ளத் தூய்மையுடையவனே! மோட்ச வீட்டை ஆள்பவனே! அந்த வீடுபேற்றை எனக்கு ஆக்கியருள் வாயாக.
ஆக்கை பொய் உறவு ஆம் என்று உன் அடைக்கலம் புகுந்த என்னைக்3
இந்த உடம்பு பொய்யான உறவாகும் என்றுணர்ந்து உனக்கு அடைக்கலமான என்னைக் காக்க, இந்நாளில் உன் பக்கம் இழுத்துக்கொண்ட கருத்தனே உனக்கு அடைக்கலம். திருமேனியில் திருநீற்றுப் பொலிவுடைய ஆதாரமான கடவுளே! புண்ணியனே! அடைக்கலம். வேதவாக்கினை அளித்த கடவுளான நீ என்னை அடிமைகொள்ள வருவது இக்காலமேயாகும்.
தருணமும் அறிந்து எனது தன்மையும் உணர்ந்து நல்ல4
தக்க காலமும் அறிந்து எனது பக்குவ நிலையும் அறிந்து, நல்ல அருளான நன்மையை அளிக்கும் எங்கள் தலைவனே அடைக்கலம். வேதவடிவானவனே அடைக்கலம். ஆதியான ஒருவனே அடைக்கலம். தினமும் முருகனே உனக்கு அடைக்கலம் மெளன முனிவனே அடைக்கலம்.
சரணம் நின் சரணம்நானே சரவணபவனே சன்ம5
அரசே! உனக்கு நான் அடைக்கலம். சரவணபவனே பிறப்பும் இறப்பும் அளவுமற்ற இளையோனே அடைக்கலம். ஆதியான பிரணவ மந்திரத்தை அருளிய மூலப்பிரமமே அடைக்கலம். ஆறு குணங்களும் பொருந்திய பொருளே! என்னை மனமகிழ்வுடன் அடிமை கொண்டருள்வாயாக.
கொள்ள என்று அகத்தியற்கும் குயிற்று அரும் புகழால் சீர்த்தி6
ஞானத்தைக் கொள்ள வேண்டுமென்று அகத்திய மா முனிவருக்கும், சொல்லற்கரிய திருப்புகழால் கீர்த்தியை அள்ள வந்தவரான அருணகிரிநாதருக்கும், ஞானத்தை ஓதிய தலைவனே! உனக்கு அடைக்கலம். எங்கள் தற்பயன் கருதாத வள்ளலே அடைக்கலம். மூல வேதியனே! அடைக்கலம். என் குற்றமான பிழைகளைப் பொறுத்து என்னைப் புறக்கணித்துவிடாமல் அடிமை கொண்டருள்வாயாக.
பிழை பொறுத்து ஆளற்கு ஆய பெற்றியே சரணம் நட்பை7
என் குற்றங்களை மன்னித்து அடிமை கொள்ளும் தன்மையனே அடைக்கலம். நட்பை மழைபோலப் பொழியும் அழகிய வானமே அடைக்கலம். என்னிடம் அறிவுச் செறிவாய் உயரும் நுண்மையே அடைக்கலம். அழகிய தோகையுடைய மயில் வாகனத்தில் செல்லும் சண்முகனே நான் அடைக்கலம்.
நான் எனது எனல் தாம் ஓய நல் அருள் காட்டும் இன்ப8
நான் என்னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் ஒழியும்படி, நல்ல அருளை வழங்கும் வடிவான விண்ணுலகத் தலைவனே உன்னுடைய மலர்போலும் திருவடிக்கு அடைக்கலம். மனம் வாடி இழிவான பெரிய தீயவழிகளில் நான் சென்றால், முன்னின்று அவ்வாறு செல்லாமல் தடுத்து அடிமை கொள்வதற்கான சேயே அடைக்கலம். குற்றமிலா அழகிய திருக்கண் உடையவனே அடைக்கலம்.
காணும் என் தந்தாய் வேதகதி நெறிக் கந்தா ஏமப்9
என்மீது திருக்கண்ணோக்கம் செய்யும் எனது தந்தையே! வேதம் கூறும் யோக வழிக்குரிய கந்தவேளே! திருநீறெனும் அணிகலத்தையும் செங்குவளை மலர் மாலையையும் அணிந்த திருத்தோள்கள் உடையவனே உனக்கு நான் அடைக்கலம். அழகுடைய ஒளி பொருந்திய நெற்றியுடைய வள்ளியம்மையாகிய எம்முடைய அன்னையின் மணவாளனே உனக்கு நான் அடைக்கலம். என்னை நீ பாதுகாக்கும்படி மனத்தில் நினைத்து நான்இவ்வாறெல்லாம் பிதற்றி நிற்கின்றேன்.
நிற்கும் என் உருவைக் காட்டி ஞேயமோடு அருளில் கூட்டிச்10
உன் முன்னால் அடிமையாக நிற்கும் என் ஆன்மா இன்ன உருவெனக் காண்பித்து, அன்புடன் உன் திருவருளைப் பதியச் செய்து அறிவான பரப்பிரமத்தை அளித்தருள்வாயாக. தேவர்களுக்கெல்லாம் மேலான தேவனே உனக்கு அடைக்கலம். நாள்தோறும் உன்னுடைய அழகிய திருவடிகளை விரும்பும் அடியார்களைக் காத்தருளும் புண்ணியனே உனக்கு அடைக்கலம். அற்புதமான திருவருணையைத் தம் பெயராகக் கொண்ட அருணகிரிநாதப் பெருமானாகிய எம் தெய்வத்திற்கு அப்பனே உனக்கு அடைக்கலம்.