பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
11. பலகிரி 10
பலன்முருகனின் கருணையை சீக்கிரம் பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

பலகிரி

பாடல் - பலகிரி (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பண் - பஞ்சமம்
தேவாரப் பாடல் - தானெனை முன் படைத்தான்
இராகம் - ஆகிரி
தாளம் - ரூபகம்

கனைகழ னிலவிடு சததள விணையடி கருதிடு தவமுடையோர்
மனவெளி தனினட மிடுமர †ரசிவ வடிவுடை யயிலரசே
பனிமலி யிதழவிழ் தொடைய லணிபெரும பலகிரி யுறைமுருகா
இனிமைசெய் புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ.   ..  1

களிகிளர் முசுமுக னெனநிரு பனாரிய கடவுளர் கதியினுமேற்
கொளவரு ளினனென வழிபடும் விபுதர்கள் குலவுற வுளசிவனே
பளக வதரவுமை கரம்வள ரழகிய பலகிரி யுறைமுருகா
இளைமலி புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ  ..  2

அருமறை புகழ்நிறை குருபர மிதுவெனு மழைவொடு தினமுணர்வாய்ச்
சரவண பவகுக வெனவழி படுபவர் சனன மரணமறவே
பாரிவுட னடிமைகொ ளகணித பசுபதி பலகிரி யுறைமுருகா
இருசுறு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ.   ..  3

துணிசெ யிரவிகுல வரச னொருவனுயர் சுசியொடு தபசுசெயாத்
திணிமணி மதுரையி னரனது தொழினனி செயவென நசைஇயவா
பணிய குமரகுரு பிரணவ வுருவொளிர் பலகிரி யுறைமுருகா
இணையுறு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ   ..  4

இலகு கயனயன வுமையனு தினம்வள ரிளைமலி மணி மதுரைப்
புலவர்க கடலைவனை யறுமுக வருணெறி புகவரு ளியபரனே
பலநவ மணிநிறை வளமுட னுயாரிய பலகிரி யுறைமுருகா
இலவச வளியுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ   ..  5

நடமயின் மிசையொரு சுடர்மணி யெனவரு நவசபை களின்முதல்வா
தடவிடின் னிசைமுனி பகிரத னடிமைகொள் சமரச நிலையிறைவா
படமுடை மணியர வணிபவர் மனமகிழ் பலகிரி யுறைமுருகா
இடரறு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ.  ..  6

சகல கலைகளையு முணர்வுறு வலிமலி தவமிகு குறுமுனியைச்
சுகுர்த வடிமைமுறி கொளுமொரு குருபர சுருதிகள் புகழ்சிவனே
பசுநிறை சரவண பவமறை யவர்புகழ் பலகிரி யுறைமுருகா
இகழ்வறு புரிவுட னெனையு மடிமை கொள விதுநல தருணமரோ.  ..  7

புதுமல ரளக வனிதையரும் விழைவுகொள் பொருவறு குறமயிலாள்
அதிமது ரவரவ ரசநுகர் தலைவவொள் ளமுதவி புதர்பரனே
பதும நனைநிரைக ளவிழும் வளமொழுகு பலகிரி யுறைமுருகா
இதமிகு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ.  ..  8

வியனென வெயில்விரி விமலர் கயிலைமலை மிசைநிறை கொலுவுடையோய்
மயறெறு கவுணியன் விடமமு தெனநுகர் வலியுள னழகுடையான்
பயிறமி ழணிபுனை பசுபதி யுடன்மொழி பலகிரி யுறைமுருகா
இயல்புறு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ   ..  9

முரணறு புகழ்சொன வருண கிரியைநிƒ முடிபுடை யறிஞனெனத்
தரணிய ருவணையர் புகழ வருளினவொர் தகரவெ ளியிறைவனே
பரவரு நெடுவள மலிய முகில்கள்கவி பலகிரி யுறைமுருகா
இரிபறு புரிவுட னெனையு மடிமைகொள விதுநல தருணமரோ.   ..  10

கலியுகம் 4995 நந்தன (கி.பி.1893) பங்குனி மாதம் 21ஆம் தேதி மந்தவாரம்