நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
12. | திருச்சோலைமலை | 10 |
திருச்சோலைமலை
பாடல் - திருச்சோலைமலை (நாகரஅவேதுகைக் கலிநிலைத்துறை)
பண் - இந்தளம்
தேவாரப் பாடல் - பித்தா பிறைசூடி
இராகம் - நாதநாமக்கிய
தாளம் - ரூபகம்
நின்னையே சிவமா யறுமுனி வருந்துதி நிகழ்த்திப்
பன்னொணா நலமே படைத்துய்ய வருளிய பரனே
மன்னுமா சோலை மலைமனா வுன்பதம் வணங்கற்
கென்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநற் றலையே. .. 1
சென்னிநா லுடையா னனுதினம் பழிச்சிடு தெய்வம்
என்னவே துலங்கிப் பவளத்தின் றிரளென வியங்கும்
நென்னடைச் சோலை மலைமனா நின்மொழி கேட்க
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநற் செவியே. .. 2
வன்னிசேர் நுதற்கண் ணாறுடை யோய்கதிர் வடிவேல்
மின்னுபூங் கரனே வானவ ரேத்தருள் விதுரா
பன்னமார் சோலை மலைமனா நின்னிலை பார்க்க
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநல் விழியே. .. 3
அன்னையா யயனா யனுதினம் வழிபடு மடியேன்
தன்னுளே யுணர்வாய்ச் சுடர்பொரு ளாயுள்ள சாமீ
முன்னைசேர் சோலை மலைமனா நின்சரண் முகக்க
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநன் மூக்கே. .. 4
மின்னுவா னவர்மன் மயிலென வரவதன் மேலே
உன்னியே றிமகா நிசிசர ருயிர்தொலைத் துள்ளோய்
மன்னுமா சோலை மலைமனா நின்னடி வாழ்த்தற்
கென னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநன் னாவே .. 5
பின்னைகேள் வனயன் பிறங்கெழின் முனிவரர் பிறரும்
உன்னியே கணித்தற் கமைவறு பெருந்தகை யுடையோய்
துன்னுமா சோலை மலைமனா நின்சரண் டொழமுன்
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநற் கரமே. .. 6
தென்னிலா வொளிவிஞ் சறுமுகத் திளமையந் தேவாய்ச்
சொன்னநீ ளயிற்கை யிலகடி கேண்மனத் தூயோர்
மின்னிவாழ் சோலை மலைமனா நின்றல மிதிக்க
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநற் காலே. .. 7
முன்னைநா ளாரியவ தாரவல் லேனத்தின் முரணார்
சென்னிகே டுறவொண் மருப்பினைப் பறித்தவொர் திறலோய்
அன்னமூர் சோலை மலைமனா நின்பொடி யணிய
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநல் லுடம்பே. .. 8
அன்னவா கனனை யருஞ்சிறைப் படுத்திமெய் யறிவால்
பன்னகா பரணற் கோமுதற் பொருடனைப் பகர்ந்தோய்
கன்னல்சூழ் சோலை மலைமனா நின்கழல் கருதற்
கென்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநன் மனமே. .. 9
பன்னொணாப் புகழ்தான் படித்தவன் றனைத்திருப் பாரிவால்
இன்னீனத் திருக்க வுரைத்தசின் மயதின வெழிறான்
மின்னுமா சோலை மலைமனா நின்னருள் வேண்டற்
கென்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநன் னெஞ்சே. .. 10