பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
13. திருப்பழநி(1) 10

திருப்பழநி (1)

பாடல் - திருப்பழநி (1)

பண் - நட்டராகம்
தேவாரப் பாடல் - பொன்னார் மேனியனே
இராகம் - பந்துகவராளி
தாளம் - ரூபகம்

சிங்கா நன்குதவுந் திரு வாறெ ழுத்தாளா
கங்கா ளன்குருவே நினை யேக ருத்தில்வைத்தேன்
மங்கா வாழ்வுடையா யெனை வாவென் றேயழையாய்
தெங்கார் தென்பழநித் திருக்கோவி லுள்ளாயே   ..  1

எல்லா ருந்தொழுது நல மேற்க வென்றிலறம்
இல்லா மாதுறவா யில காறெ ழுத்திறைவா
வல்லார் வானவனே யெனை வாவென் றேயழையாய்
செல்வா தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே.   ..  2

நாயே னுய்யவென்று நவில் வேன்வ ருகவென்று
நேயா நீவரலா நிƒ மாநம் பென்றுசொன்ன
வாயா வெம்பரனே யெனை வாவென் றேயழையாய்
சீயார் தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே.   ..  3

என்னா வின்றுதியை யினி தேற்றெ னக்காக
நன்னா வையசைத்து நல மேயு ரைத்தெனையாள்
மன்னார் சின்மயனே யெனை வாவென் றேயழையாய்
இதென்னார் தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே.   ..  4

சூடே னின்னடியை யன்றித் துதித்து நானெதையும்
பாடே னெம்மானே பர மார்த்த சன்யாசீ
வாடா விண்மலரே யெனை வாவென் றேயழையாய்
சேடார் தென்பழநித் திருக்கோவி லுள்ளாயே. .  ..  5

தந்தார் சித்தர்களுந் தனி ஞான விற்பனரும்
வந்தே தாள்பணிய நிற்கும் வரத மாமுனியே
மந்தா ரத்திருவே யெனை வாவென் றேயழையாய்
செந்தார்த் தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே.   ..  6

மின்னார் கெளபீனந் தனை வீக்கி மஞ்சழகார்
சன்னா சக்குருப்போற் றனி யாக நிற்குமருள்
மன்னே மாமுனியே யெனை வாவென் றேயழையாய்
தென்னார் தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே.   ..  7

நானா சாதிகுல முரு நாமம் பாராமல்
ஊனார் சீவனெலா மரு ளுயிரென் றேமதிக்கும்
வானோர் தேசிகனே யெனை வாவென் றேயழையாய்
தேனார் தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே.   ..  8

சத்தா நீறணிந்து கையிற் றண்ட மொன்றுடைய
கத்தா வாயெவர்க்கும் பர கதிநல் கையபது
மத்தார் பூணழகா வெனை வாவென் றேயழையாய்
சித்தா தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே.  ..  9

மண்ணார் சீவனொலா மினு மாண்டெ ழாதவகை
பண்ணா நிற்குமருட் பர மேயண் ணாமலையான்
அண்ணா வென்னுயிரே யெனை வாவென் றேயழையாய்
தெண்ணார் தென்பழநித் திருத் கோவி லுள்ளாயே.  ..  10

கலியுகம் 4995 நந்தன (கி.பி.1893) பங்குனி மாதம் 24ஆம் தேதி மங்களவாரம்