நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
13. | திருப்பழநி(1) | 10 |
திருப்பழநி (1)
பாடல் - திருப்பழநி (1)
பண் - நட்டராகம்
தேவாரப் பாடல் - பொன்னார் மேனியனே
இராகம் - பந்துகவராளி
தாளம் - ரூபகம்
சிங்கா நன்குதவுந் திரு வாறெ ழுத்தாளா
கங்கா ளன்குருவே நினை யேக ருத்தில்வைத்தேன்
மங்கா வாழ்வுடையா யெனை வாவென் றேயழையாய்
தெங்கார் தென்பழநித் திருக்கோவி லுள்ளாயே .. 1
எல்லா ருந்தொழுது நல மேற்க வென்றிலறம்
இல்லா மாதுறவா யில காறெ ழுத்திறைவா
வல்லார் வானவனே யெனை வாவென் றேயழையாய்
செல்வா தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே. .. 2
நாயே னுய்யவென்று நவில் வேன்வ ருகவென்று
நேயா நீவரலா நி மாநம் பென்றுசொன்ன
வாயா வெம்பரனே யெனை வாவென் றேயழையாய்
சீயார் தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே. .. 3
என்னா வின்றுதியை யினி தேற்றெ னக்காக
நன்னா வையசைத்து நல மேயு ரைத்தெனையாள்
மன்னார் சின்மயனே யெனை வாவென் றேயழையாய்
இதென்னார் தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே. .. 4
சூடே னின்னடியை யன்றித் துதித்து நானெதையும்
பாடே னெம்மானே பர மார்த்த சன்யாசீ
வாடா விண்மலரே யெனை வாவென் றேயழையாய்
சேடார் தென்பழநித் திருக்கோவி லுள்ளாயே. . .. 5
தந்தார் சித்தர்களுந் தனி ஞான விற்பனரும்
வந்தே தாள்பணிய நிற்கும் வரத மாமுனியே
மந்தா ரத்திருவே யெனை வாவென் றேயழையாய்
செந்தார்த் தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே. .. 6
மின்னார் கெளபீனந் தனை வீக்கி மஞ்சழகார்
சன்னா சக்குருப்போற் றனி யாக நிற்குமருள்
மன்னே மாமுனியே யெனை வாவென் றேயழையாய்
தென்னார் தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே. .. 7
நானா சாதிகுல முரு நாமம் பாராமல்
ஊனார் சீவனெலா மரு ளுயிரென் றேமதிக்கும்
வானோர் தேசிகனே யெனை வாவென் றேயழையாய்
தேனார் தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே. .. 8
சத்தா நீறணிந்து கையிற் றண்ட மொன்றுடைய
கத்தா வாயெவர்க்கும் பர கதிநல் கையபது
மத்தார் பூணழகா வெனை வாவென் றேயழையாய்
சித்தா தென்பழநித் திருக் கோவி லுள்ளாயே. .. 9
மண்ணார் சீவனொலா மினு மாண்டெ ழாதவகை
பண்ணா நிற்குமருட் பர மேயண் ணாமலையான்
அண்ணா வென்னுயிரே யெனை வாவென் றேயழையாய்
தெண்ணார் தென்பழநித் திருத் கோவி லுள்ளாயே. .. 10