பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
15. திருவாவினன் குடி 10
பலன்நாம் செய்யக் கூடிய பிழைகளையும், குற்றங்களையும் மன்னிக்க இறைவனிடம் எவ்வாறு வேண்டுவது?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருவாவினன் குடி

பாடல் - திருவாவினன் குடி (என்சீர்க்கஜிநெடி லடியாசிரிய விருத்தம்)

பண் - பழம்பஞ்சுரம்; தேவாரப் பாடல் - ஊற்றுமை
இராகம் - சங்கராபரணம்

அண்டர் யாவரு மறியொ ணாப்பொரு
ளாதி யந்தரந் தொரியொ ணாப்பொருள்
பண்டை நூலெலாம் பகரொ ணாப்பொருள்
பார மார்த்திக ஞான வான்பொருள்
எண்ட கைப்பொரு ளாகு நீதடி
யேந்து கின்றசன் னாசி போன்றதென்
தொண்ட னேனையிங் காண்டு கொள்வண
தூண்டு மாவினன் குடிச்சு ரேசனே.   ..  1

நோரி லாவுய ராக்க வெள்வரை
நிலய முட்சிவ கணங்க ளேத்திடப்
பீரி லாக்கொலு விருந்த நின்பதம்
பெறவ ருந்திரு வடிய வர்க்கருள்
சூரி லாச்சைவ தெய்வ நீயொரு
துறவி போற்றனி நிற்ப தென்னதி
தூர மின்றெனை யாண்டு கொள்வணந்
தூண்டு மாவினன் குடிச்சு ரேசனே.   ..  2

பாரிதி பல்லொளி சுடர்கி ¡£டமும்
பதும பாதவம் பாரிபு ரங்களும்
மிருது மல்கெழின் மடியு டுக்கையு
மிறையி லொண்செவி யணிக ளுந்தன
தருகி னல்லிரு தேவி யும்மிலா
தாண்டி வேடம தான தென்னதி
துரித மாவெனை யாண்டு கொள்வணந்
  ..  3

..  3

அடல்கொள் பூதரும் வீர வாகுவொ
டமரும் வீரரு மோரி லக்கரும்
புடைசெ றிந்திடச் சரண மஞ்ஞையிற்
பொருவி லாதெழு தருப ராபரம்
தடவி சும்புயர் வரையி லேயொரு
தனிமை யாநனி நிற்ப தென்னுனைத்
தொடரு மென்றனை யாண்டு கொள்வணந்
தூண்டு மாவினன் குடிச்சு ரேசனே.   ..  4

உலகி லேயுனைப் பாடுந் தொண்டுள
ருய்ய வோதவ ருய்ய வோமனச்
சலமில் யோகிக ளுய்ய வோநிகழ்
சருவ சீவருந் தவத்தி னுய்யவோ
தலையிற் பின்சிகை யரையிற் கோவணந்
தண்ட மங்கையிற் கொண்டு நின்றுளை
தொலைவி டாதெனை யாண்டு கொள்வணந்
தூண்டு மாவினன் குடிச்சு ரேசனே.   ..  5

பொய்யு ளேனுயிர்க் கொலையு ளேன்பெரும்
புலையு ளேனெடுங் களவு ளேனிதம்
மையி டுங்கணி மயலு ளேன்மட
மருளு ளேன்பட ரிருளு ளேனிஙன்
உய்யு மாறருள் கூர்ந்து வந்தென்மு
னோது நின்னொர்த யாள மென்சொலத்
துய்ய னேயெனை யாண்டு கொள்வணந்
தூண்டு மாவினன் குடிச்சு ரேசனே.   ..  6

செப்பொ ணாதவைம் பாச சாகரச்
செதும்பு ளேகிடந் தழுங்கி நன்னெறி
ஒப்பு றாவிழி நாய னேனிங
னுய்வ னோதிரு வருளி லாது மெய்
அப்ப னீயென மைந்த னானென
வாமொர் தொன்முறை காட்டி னாயிவண்
துப்ப னாயெனை யாண்டு கொள்வணந்
தூண்டு மாவினன் குடிச்சு ரேசனே.   ..  7

கழுதை யிற்கடை யாய நானுனைக்
கருத நன்னெறி கழறி னாய்நொடிப்
பொழுது நின்மறந் திருப்ப னோவினிப்
புகழ்சொ லாமொழி படிப்ப னோவுனை
முழுது மென்னக மாக்கி டாதினு
முளைப்ப னோமணிற் பதத்தை யல்லது
தொழுவ னோவெனை யாண்டு கொள்வணந்
தூண்டு மாவினன் குடிச்சு ரேசனே.   ..  8

மாக நின்றுளை தீயி னின்றுளை
வளியி னின்றுளை மழையி னின்றுளை
போக நந்திரும் புவியி னின்றுளை
புகாரின் மாமதி யிரவி நின்றுளை
ஆக நின்றிடு முயிரி னின்றுளை
யடிய னேனய லாவ தெங்ஙனம்
சோகம் வென்றெனை யாண்டு கொள்வணந்
தூண்டு மாவினன் குடிச்சு ரேசனே.   ..  9

லமி லாதவன் றலமி லாதவன்
குகோளி லாதவ னாளி லாதவன்
மலமி லாதவ னாகு நீநெடு
மலையி லேறிய மார்க்க மென்கொலொர்
சலமி லாப்புகழ் பாடி னோனகந்
தாண்ட வம்புரிந் தாண்ட தேவெனைச்
சுலப மாகவிங் காண்டு கொள்வணந்
தூண்டு மாவினன் குடிச்சு ரேசனே.   ..  10

கலியுகம் 4995 நந்தன (கி.பி.1893) பங்குனி மாதம் 30ஆம் தேதி சோமவாரம்