பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
16. அடிமை 10
பலன்சமுதாயத்தில் உயர்ந்த வாழ்வு பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

அடிமை

பாடல் - அடிமை (எழுசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்)

பண் - புறநீர்மை; தேவாரப் பாடல் - மங்கையர்கரசி; iஇராகம் - பூபாளம்; தாளம் - ஆதி

கற்றவர் தொடுத்துக் கனிவுடன் சூட்டுங்
கவித்தொடை யேற்றெழின் மறைதான்
சொற்றிடு கதியை வழங்கருண் மாவிண்
சோதியே சொலற்கருஞ் சுடரே
இற்றைநா ளுன்காற் போதினை யேத்தற்கு
எனதவஞ் செய்திருந் தேனோ
அற்றையெற் கதிர்த்த வணமருள் வானே
யப்பனே யொப்பிலா தவனே.   ..  1

கல்வியங் கடலைக் கடந்துமேன் மிளிருங்
கருத்துடை யெளவைமூ தாட்டி
சொல்வண முலகிற் பழுதறு பொரியோர்
தொண்டரென் றதிர்த்ததே சரதம்
ஒல்கிடா வீரப் பெருந்தகை யுடையோ
யுனதடித் தொழும்புமெற் குறுமோ
அல்கலில் லாதெனை யாண்டுகொள் வானே
யப்பனே யொப்பிலா தவனே.  ..  2

பேயினுங் கடையேன் பிணத்தினுந் தீழ்ப்பேன்
பிறங்குநற் குணமெது மில்லேன்
நாயினுங் கடையே னலனுற வெனநீ
நறுநெறி குயிற்றிய வருளாம்
நேயநல் வரவுக் கொருகர மாறிஇந்
நெடுநிலப் பரப்பிடை யுண்டோ
ஆயுத வயில்வேற் குருபர வெனையா
ளப்பனே யொப்பிலா தவனே.  ..  3

உன்னெறி துறந்தே யுன்னடி மறந்தே
யுஞற்றிடு பெரும்படர்த் தீமை
தன்னையுந் துறந்தே தன்னையு மறந்தே
தன்னையு மறித்துய்யு மாறால்
என்னைநீ கலந்தா ளெம்பெரு மானே
யிணையறு மாசிலா மணியே
அன்னையே யருள்சா லறுமுகச் சிவனே
யப்பனே யொப்பிலா தவனே.   ..  4

சனகனுஞ் சனனி பிதாமகன் பெருமான்
றமயனுஞ் சிவனென நினைத்து
மனைவிநி ராசை மகர்வள ருயிர்கள்
மலரடித் தொழும்பர்க ளுறவோர்
எனமதித் துயுநா ளெந்தநா ளாகு
மெனக்குநீ யருளிய வண்ணம்
அனகனே யருள்கூ ராறெழுத் திறையே
யப்பனே யொப்பிலா தவனே.   ..  5

ஊரெலாஞ் சமைக்குஞ் சோறுய ருணவிவ்
வுலகமெ லாம்விரி பாயல்
ஏருலா முடையெண் கோவண மாமறை
யியம்புவெண் பொடிநறுஞ் சாந்தம்
சீருலா முருத்தி ராக்கமெய் யணிகலன்
செபிப்பது சடக்கர மெனநீ
ஆர்வமொ டெனக்காக் கிடவென்று காண்பே
னப்பனே யொப்பில்லாதவனே.   ..  6

தாளினை பழிச்சு மேழையே னின்றே
சாகினுஞ் சாகுக வினியெந்
நாளுமிங் கிருக்கினு மிருக்குக சுவர்க்கமோ
நரகமோ சோரினுஞ் சேர்க
கோளுறு பிறப்பே யாயினு மாகுக
குறைவறு நின்சரண் மறவா
ஆள்வினை யொன்றை யளித்தருள் யாண்டு
மப்பனே யொப்பிலா தவனே.   ..  7

தாவர நீர்வாழ் வனநகர் வனவிண்
சகுனம்வல் விலங்கெழின் மாந்தர்
தேவரென் றறையேழ் தோற்றமு ளெதனிற்
செனிக்கவுன் னாக்கினை செயினும்
சேவடித் தொழும்பி லிருப்பதே குறைவில்
செல்வமென் றொருதுணி படைந்தேன்
ஆவது புரியாய் சரவணத் தரசே
யப்பனே யொப்பிலா தவனே.  ..  8

கிரியையிற் சாரியை தனில்வளர் யோகிற்
கெழுதகை யறிவினி லுனைவிட்
டாரியப·றவங்க ளாற்றுதல் பயனின்
றாமென வோர்பிடிப் பானேன்
உரிமையொ டுனைநா மழைத்திடு காறு
முணர்வொடிங் கிருவென வுரைத்த
அருமையென் பரனே யழைத்தருள் குகனே
யப்பனே யொப்பிலா தவனே.
  ..  9

மாயமா மளக்கர் வாழ்வினி லுழலு
மடனெனைத் தடுத்தருள் வணந
நேயமுற் றிடினிங் கெனகுறை யெனக்கா
நெறியிதன் மேலெது வருள்கூர்
வேயுறு தோளங் கயற்கணி மதலாய்
விரதர்கள் குருமணி பதினா
றாயிரம் புகழ்ப்பாப் படித்தவற் கருளிய
வப்பனே யொப்பிலா தவனே.   ..  10

கலியுகம் 4995 விஜய (கி.பி.1893) சித்திரை மாதம் 1ஆம் தேதி புதவாரம்