பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
17. திருக்குன்றக்குடி 10
பலன்சகல செல்வ யோக மிக்க பெறு வாழ்வு உங்களுக்கு வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருக்குன்றக்குடி

பாடல் - திருக்குன்றக்குடி

பண் - காந்தாரம்
தேவாரப் பாடல் - மந்திரமாவது நீறு
இராகம் - நெளரோ
தாளம் - ரூபகம்

பூமுடி விண்ணவர் வாழ்வும் பூதல மன்னவர் வாழ்வும்
தூமுடி நாகர்கள் வாழ்வுஞ் சுந்தர நின்னடி யார்கள்
தாமுறு வாழ்வினுக் கேயோர் சற்றுநே ராகுமோ நாகர்
கோமுனி வோர்தொழுங் கோவே குன்றக் குடியுறை தேவே.   ..  1

ஆறுச மயங்க ளெங்கு மானந்த மாய்விளை யாடி
ஈறுமு தனடு வேது மிலாதவி ருன்னடி நேடி
நீறணி தொண்டர்கள் வாழ்வே நித்திய மென்றொரு வாய்மை
கூறும றைபுகழ் கோவே குன்றக் குடியுறை தேவே.  ..  2

நாசமில் லாவுயி ரெல்லா நற்கதி சேரவென் றேயோர்
மாசிலு ருக்கொண்டங் கங்கு மன்னுதி ருக்கோவில் கொண்டு
தேசிக னாயவி ரன்பைச் சிந்தையில் வைத்துள்ள வென்றன்
கூசல றுத்தருள் கோவே குன்றக் குடியுறை தேவே.   ..  3

ஆதிய னாதியு நீயா யண்டகோ டியெங்கு நீயாய்த்
தீதிலு யிர்க்குயிர் நீயாய்த் திகழொரு பூரணந் தன்னை
மேதினி மீதுள்கு வோரே விஞ்சறி வாக்கமுள் ளோர்கள்
கோதில்வெ யிலயிற் கோவே குன்றக் குடியுறை தேவே.   ..  4

மாவலர்க் கொந்தள வள்ளி மையலிற் சிக்கிய மாயக்
காவல வுன்னடி யாரைக் கண்டவர்க் குந்துயர் தீரும்
தாவில கங்குளிர் கொள்ளுஞ் கத்திய கேவலம் விள்ளும்
கூவிய ழுங்குமென் கோவே குன்றக் குடியுறை தேவே.   ..  5

எட்டுருத் தெய்வமு நீயே யெட்டுக்க தீதமு மாயே
தட்டுப்ப டாதவ தீத சாமியு நீயென வோர்வார்
முட்டுப்ப டாமல்வந் தென்று முற்றுச்செ யுமருட் பொன்னைக்
கொட்டிக்கொ டுக்கின்ற கோவே குன்றக் குடியுறை தேவே.   ..  6

பாட்டினு னைப்புகழ்ந் தேமண் பாட்டையொ ழித்துள்ள வன்பர்
நாட்டிலி ருக்கினுங் காட்டை நண்ணியி ருக்கினு மன்றே
கேட்டதெல் லாமளித் தென்றுங் கேடில ரும்பொரு டன்னைக்
கூட்டிக்கொ டுத்திடுங் கோவே குன்றக் குடியுறை தேவே.   ..  7

ஈடிலி ணைமலர்த் தாள்க ளெண்ணுவ துங்கழ லன்பர்
தேடொரு ஞானமு நல்லோர் சேர்க்கையு மேநிலை யாமென்
றோடிழி சிந்தையை வாங்கி யுன்னும காசிவ யோகிற்
கூடிய ளாவொரு கோவே குன்றக் குடியுறை தேவே.   ..  8

சுக்கில வாக்கையி னுள்ளே சூழும லவிரு ளுள்ளே
பக்குவ மின்றியெந் நாளும் பந்தப்பட் டேயுள்ள வென்னைச்
சிக்கென வேபற்ற வந்து திருத்திய வுன்பத மீதி
குக்குட கேதனக் கோவே குன்றக் குடியுறை தேவே ..  9

  ..  9

நற்றமிழ் பாடுநக் கீரன் ஞானவெ ளியனு பூதி
சொற்றவ னேத்தரு ளோனே தோகைம யிற்பா¢ யானே
இற்றையெ னக்கருள் வோனே யெங்கள் சிவபெ ருமானே
குற்றமி லாமறைக் கோவே குன்றக் குடியுறை தேவே.  ..  10

கலியுகம் 4997 விஜய (கி.பி.1895) ஆடி மாதம் 3ஆம் தேதி புதவாரம்