பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
18. திருத்தோத்திரம் 10
பலன்உங்களுடைய பிறவி நீங்கவும் உயர்ந்த முக்தி பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருத்தோத்திரம்

பாடல் - திருத்தோத்திரம்

பண் - பஞ்சமம்;
தேவாரப் பாடல் - தானெனை முன்படைத்தான்
இராகம் - ஆகிரி; தாளம் - ரூபகம்

திருமலி முதுமறை நுவல்பொருளுந்
தினசைவ முறைமுறை யிடுபொருளும்
பொருண்மலி மிருதிகள் புகல்பொருளும்
புகாரில்பு ராதன சாரிதமறை
அருமுறை பலநவில் கிறபொருளும்
அறிஞர்க ளறைதரு மொருபொருளும்
தெருண்மலி குகனென மொழிபொருளுஞ்
சிவசிவ சிவசிவ சிவசிவவே.   ..  1

இறுதியி லியல்பரு ளதுபிரியா
விணையிலி யாமொரு பதியெனவும்
குறுகிய வறிவுடை யுயிர்களிடங்
குறியற மருவிய பொருளெனவும்
அறிவுறு பொருளினை யுயிருருவாய்
அமைவுற வனைகிற விறையெனவும்
சிறுகில்கு கனெனவு நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே.   ..  2

தடமிகு பிருதிவி யாதிசிவ
தத்துவம் வரைதிரி தசமாறும்
மடலவிழ் பதுமமெ னாவரனூன்
மறைசொலு மேயதி லேபுவன
விடயமும் விடய வதீதமுமே
மேம்பட வதிதரு பொரியபொருள்
திடமலி குகனென நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே.   ..  3

மகளினு தரமுறை குழவியென
மலரொரு மாயையின் மிகுதுயரோ
டகமற வேகிடந் துளவெளிய
அணுக்களை வேதனை யறவிறக்கிப்
பகரரு மயனமு முயர்திதியும்
பண்ணிடு மிறையவ னீடழகு
திகழ்முரு கோனென நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே.   ..  4

மலவிரு ளுறையுயிர் பதியுறவே
வனையுமொ ரைந்தொழில் களையுடைய
நலவிறை யெனவு மனேகமத
நவில்வரை யறையினில் லாவிபுவாய்
இலகிடு மொருபொரு ளெனவுமெனை
யிதமுட னடிமைகொண் முருகெனவும்
செலல்வர வறுநிலை நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே.   ..  5

பாதல மேழையு மேதள்ளிப்
பரவொரு நிலையிலே திருவடிகள்
ஓதவொ ணாநிலை தனின்முடிதா னுடையவ னடியவ ருளநோவ
வேதனை தருபவர் பானமனாய்
மேவியி தம்புரி வோர்பாலிற்
சீதள முருகென நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே.   ..  6

பாரிவுடை யடியவர் திருவடிவாம்
படிவம துகழிவு றாதபடி
அரியமெய் யருள்வலி யாலதனை
யரனுரு வாமொரு திருவுருவாய்
உரிமை யொடுபணுசன் மார்க்கநெறி
யோதிறை யருண்முரு கோனெனவே
திரிபுற வனுதின நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே.   ..  7

பொன்மய வானவ ருறுமஞரும்
பூதல மானுட ருறுமஞரும்
நன்மையி னரகர்க ளுறுமஞரு
நலியவு மளவறு பொரியவருள்
இன்மய மாகவு மருள்வடிவம்
இதவொடு கொள்குரு பரமசிவ
சின்மய முருகென நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே.   ..  8

உனையல தொருகதி யிலையெனவே
யுனிவழி படுமடி யவர்கருமத்
துனிவலி கடியவு மனமருளாற்
சொலும்வழு வையுநசை கிளர்நினைவால்
இனியில் வினைகள்புரி வழுவையுமே
யிரிய வருளிறைவன் முருகனெனுந்
தினகர னெனநனி நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே.   ..  9

கயல்விழி மறிமகள் கணவனெனக்
கருதியிவ் வகிலமு ளேதமிழிற்
பயில்புகழ் சோடச நூறுதசம்
பன்னிய வறிஞனை யாளடிமை
தயவொடு கொண்டது போலெனையுந்
தடையறக் கொண்டிடு குருமுதன்மைச்
செயலுடை முருகென நிலவுவது
சிவசிவ சிவசிவ சிவசிவவே.   ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆடி மாதம் 21ஆம் தேதி ஆதிவாரம்