நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம்
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
1. | திருவருளடிமைப் பிரார்த்தனை | 10 | |
பலன் | தெய்வப் பிரார்த்தனை அறிவித்தல்
|
திருவருளடிமைப் பிரார்த்தனை
பாடல் - திருவருலடிமைப் பிரார்த்தனை
பண் - நட்டபாடை
தேவாரப் பாடல் - வண்டார்குழல் அரிவையொடு
இராகம் - கம்பீரநாட்டை
தாளம் - ரூபகம்
பொய்யாமுகத் தின்வாழ்விற் புகாதுன்னடி யாருய்
மெய்யாமுகத் தினுக்கேவர மிகுமாவலிங் குள்ளேன்
ஐயாரடிக் கமலந்தொழ லானேனரு ளின்றி
உய்யேனினி யுய்யேன்மயி லூரும்பெரு மானே .. 1
தண்மாத்தட வாராணசி தனிற்போமுயிர் களுக்கன்
றொண்மாமறை மூலஞ்சொலி யுருவார்கதி நல்கும்
கண்மூன்றுடை யாற்கன்புள கறையில்குரு வான
கண்மாமணி யேயுன்னடி காணாமலுய் யேனே .. 2
பாலாழியன் சிவபூசனை பண்ணுந்திறற் காழி
சாலூரம தாய்நல்கிய சசிவேணியன் பொருளென்
றாலோலித முளமாமறை யறையுஞ்சிவ னருண்மேல்
மாலாகியு ளேனின்னருள் வராமலுய் யேனே .. 3
மூன்றாகிய பிணியாற்பசி முனிவாலின்மைப் பிணியால்
தோன்றாநின்ற வஞர்மேவிட றொழுமாதவர்க் குளதோ
ஈன்றாளுட னீன்றானென விலங்குங்கிருபைக் கடலே
தேன்றோடவிழ் தண்ணார்கூச் சிரமாலிகை யோனே. .. 4
சங்காழியு ளாற்கன்றொரு தலைவேதனை யுஞ்சீர்
மங்காமறை யோற்கின்னல்செய் வயின்வேதனை யுந்தான்
தங்காதஞர் புரிந்தூர்ந்ததை யங்காண்டமுஞ் சாற்றும்
நுன்காலடி யார்க்காமய நுழையாதயி லோனே .. 5
தவநீடுவி யாதன்சகோ தரர்சண்முனி களுமீன்
பவமாறியு னடியேகதி பதியேயெனு மந்நாள்
சிவமானதை யுறுமுன்னருள் சேரும்படி செய்தாய்
நவபேதமு ளான்முன்னிச நவிலும்பெரு மானே .. 6
நுன்காலடி தாழ்ந்தேத்திவ னுகர்சூர்தடி யாயேல்
எங்கேயினி யுய்வானுன திதமாமரு ளிதுவோ
கொங்கார்மலர் புனையுஞ்சுரர் கோமான்பணி கொண்ட
செங்காவிரி பாயும்பொழிற் சீகாழியன் மகனே. .. 7
ஏரார்பழ நிக்கேகவென் றெணுமென்றணை யிதுநாள்
வாராதிரு வாராயென வருள்வேமன்று வருவாய்
கூராய்விய சனமென்றன்று கூறிச்சென்ற வணமே
ஆராரரு ளென்றோவரு மயில்வேன்முரு கோனே .. 8
கண்ணாலிருந் துந்தன்முகங் காணாத்தகு மோகேழ்க்
கண்ணாடியி னாலேயது காணாத்தகு மதுபோல்
தண்ணாருமுன் னருளாலுயிர் தனைநானறி யாதே
பண்ணாநிற்ப தொன்றும்மிலை பரனேகுரு பரனே .. 9
தன்னையறி வேனேற்கொளுன் றன்னையறி வேனின்
றென்னையறி யாதேயினிச் செயுமாறென நொடியாய்
மன்னேமயி லேறுங்குரு மணியேகிரி புகழ்ந்த
அன்னேயெனை யாளுந்திரு வருளேதிரு வருளே .. 10