பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம்

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
1. திருவருளடிமைப் பிரார்த்தனை 10
பலன்தெய்வப் பிரார்த்தனை அறிவித்தல்
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருவருளடிமைப் பிரார்த்தனை


பாடல் - திருவருலடிமைப் பிரார்த்தனை

பண் - நட்டபாடை
தேவாரப் பாடல் - வண்டார்குழல் அரிவையொடு
இராகம் - கம்பீரநாட்டை
தாளம் - ரூபகம்

பொய்யாமுகத் தின்வாழ்விற் புகாதுன்னடி யாருய்
மெய்யாமுகத் தினுக்கேவர மிகுமாவலிங் குள்ளேன்
ஐயாரடிக் கமலந்தொழ லானேனரு ளின்றி
உய்யேனினி யுய்யேன்மயி லூரும்பெரு மானே                           ..  1

தண்மாத்தட வாராணசி தனிற்போமுயிர் களுக்கன்
றொண்மாமறை மூலஞ்சொலி யுருவார்கதி நல்கும்
கண்மூன்றுடை யாற்கன்புள கறையில்குரு வான
கண்மாமணி யேயுன்னடி காணாமலுய் யேனே                              ..  2

பாலாழியன் சிவபூசனை பண்ணுந்திறற் காழி
சாலூரம தாய்நல்கிய சசிவேணியன் பொருளென்
றாலோலித முளமாமறை யறையுஞ்சிவ னருண்மேல்
மாலாகியு ளேனின்னருள் வராமலுய் யேனே                                 ..  3

மூன்றாகிய பிணியாற்பசி முனிவாலின்மைப் பிணியால்
தோன்றாநின்ற வஞர்மேவிட றொழுமாதவர்க் குளதோ
ஈன்றாளுட னீன்றானென விலங்குங்கிருபைக் கடலே
தேன்றோடவிழ் தண்ணார்கூச் சிரமாலிகை யோனே.                  ..  4

சங்காழியு ளாற்கன்றொரு தலைவேதனை யுஞ்சீர்
மங்காமறை யோற்கின்னல்செய் வயின்வேதனை யுந்தான்
தங்காதஞர் புரிந்தூர்ந்ததை யங்காண்டமுஞ் சாற்றும்
நுன்காலடி யார்க்காமய நுழையாதயி லோனே                              ..  5

தவநீடுவி யாதன்சகோ தரர்சண்முனி களுமீன்
பவமாறியு னடியேகதி பதியேயெனு மந்நாள்
சிவமானதை யுறுமுன்னருள் சேரும்படி செய்தாய்
நவபேதமு ளான்முன்னிச நவிலும்பெரு மானே                            ..  6

நுன்காலடி தாழ்ந்தேத்திவ னுகர்சூர்தடி யாயேல்
எங்கேயினி யுய்வானுன திதமாமரு ளிதுவோ
கொங்கார்மலர் புனையுஞ்சுரர் கோமான்பணி கொண்ட
செங்காவிரி பாயும்பொழிற் சீகாழியன் மகனே.                              ..  7

ஏரார்பழ நிக்கேகவென் றெணுமென்றணை யிதுநாள்
வாராதிரு வாராயென வருள்வேமன்று வருவாய்
கூராய்விய சனமென்றன்று கூறிச்சென்ற வணமே
ஆராரரு ளென்றோவரு மயில்வேன்முரு கோனே                        ..  8

கண்ணாலிருந் துந்தன்முகங் காணாத்தகு மோகேழ்க்
கண்ணாடியி னாலேயது காணாத்தகு மதுபோல்
தண்ணாருமுன் னருளாலுயிர் தனைநானறி யாதே
பண்ணாநிற்ப தொன்றும்மிலை பரனேகுரு பரனே                        ..  9

தன்னையறி வேனேற்கொளுன் றன்னையறி வேனின்
றென்னையறி யாதேயினிச் செயுமாறென நொடியாய்
மன்னேமயி லேறுங்குரு மணியேகிரி புகழ்ந்த
அன்னேயெனை யாளுந்திரு வருளேதிரு வருளே                        ..  10

கலியுகம் 4995 நந்தன (கி.பி.1893) மாசி மாதம் 26ஆம் தேதி புதவாரம்