பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
21. பூரணம் விழைந்திரங்கல் 10
பலன்உள்ளம் கசிந்து உருகி கண்ணீர் மல்கித் துதிக்க முருகனின் அருள் கைமேல் கிடைக்க வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

பூரணம் விழைந்திரங்கல்

பண் - இந்தளம்
தேவாரப் பாடல் - பித்தா பிறைசூடி
இராகம் - நாதநாமக்ரியா
தாளம் - ஆதி

பொன்கொண் மாமயி லூருயர் புண்ணிய மூர்த்தீ
உன்கண் ணீரமின் றிங்கிவ னுய்வது முண்டோ
புன்கண் மாய்த்தருள் புரிகிலை யேலுனை நம்பும்
என்கண் ணீரினை யேதுடைப் பவாரினி யெவரே. .. ..  1

ஞான்று நந்தலில் சத்தையுஞ் சித்தையு நீங்கா
ஆன்ற வின்பசொ ரூபம தாயவி ருன்னைப்
போன்ற தெய்வமுண் டோவெனைப் புணர்கிலை யாயின்
தோன்று மென்விழி நீரினைத் துடைக்குந ரெவரே. .. ..  2

தீதில் சத்தெனுந் தாதையுஞ் சித்தெனுந் தாயும்
ஆதி யந்தமி லானந்தக் குழவியு மாமென்
ஆதி யாமடி கேளெனை விரவிக்கொ ளாயேல்
வீதி தோறும்மென் விழிப்புன றுடைக்குந ரெவரே. .. ..  3

பெற்று ளோர்பிறந் தோர்மனை மகர்தமர் பிறரும்
சற்று நம்முற வலவென வுன்னியுன் சரட்கன்
புற்று ளேனெனைப் புறம்பெனக் கழிக்கினின் புரிவிங்
கற்று நானிருந் தழும்புன றுடைக்குந ரெவரே. .. ..  4

அன்பர் தங்கருத் தேயுணர்ந் தருள்புரி யருளால்
என்புன் னெஞ்சுணர்ந் துரைத்தவள் ளயிற்கர விறையே
இன்பி னின்னமு மிடையறப் புணர்ந்துகொளாயேல்
துன்பி னானழும் விழிப்புன றுடைக்குந ரெவரே. .. ..  5

நுதற்க ணாறுடை நூனமி லறுமுகங் கரந்தன்
றிதத்தை யேபுகன் மானுட வுருவென வென்முன்
புதித்து மெய்ம்மொழி யுரைத்தனை முழுதுங்கொ ளாயேல்
பதத்தை யேநினைந் தழும்புன லெவர்துடைப் பவரே...  ..  6

வோரி யங்கடம் பணிபுயத் தோய்வினை மேவும்
பூரி யோர்புகு மிருணில மின்னமும் புகுதா
தோரி யங்கடி யுறநினை யென்னைநீ கழிக்கின்
மாரி போன்முகம் வடிப்பது துடைக்குந ரெவரே. .. ..  7

பொய்யை யோர்பவர் பொருந்துமிப் பூதல வாழ்வை
மெய்யை யோர்பவர் சேர்வர்கொன் மெய்ப்பொரு ளாமுன்
செய்ய பாதநம் பியவெனைச் சேர்த்துக்கொ ளாயேல்
உய்யு மாறெனக் கருள்பவ ருலகினி லெவரே. .. ..  8

கோல வாரணங் கூறொரு பரம்பொரு ணீயென்
றாலு மங்கழற் பரமனு மருளின னதுபோல்
சீல வுன்சரண் சிந்தைசெ யெனைக்கொளு கிலையேல்
தால மீதெனக் குன்னடி தருபவ ரெவரே. ..  ..  9

அரிய விண்ணவர் புன்கணை வீட்டிநல் லருண
கிரியி ருந்தவற் கருளிய கிருபைவள் ளாலுன்
உரிமை கொண்டுனக் கடைக்கலம் புகுந்துள நாயேன்
பாரிவு கண்டரு ளாவிடி னெவரருள் பவரே. .. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆடி மாதம் 31ஆம் தேதி புதவாரம்