பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
22. மெய்ப்பற்று 10
பலன்உண்மையான பக்தி பெற்று பெருவாழ்வு பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

மெய்ப்பற்று

இசை –மெய்ப்பற்று (கலி விருத்தம்);

பண் - தக்கேசி
தேவாரப் பாடல் - மடையில் வா¨
இராகம் - காம்போதி தாளம் -

சொல்லு யர்ந்தமறை சொன்முடி வாமோர்
சொல்லி யம்புதுரை யாவரு முருகா
இல்லி டப்புரிவை விடநினை வேன்கோள்
வெல்லு முன்புரிவை விடநினை யேனே. .. ..  1

சரண நம்பினவர் சததமு முய்ய
அருளு மன்புடைய வயிலவ யாணர்
இரத மூர்புரிவை விடநினை வேனுள்
விரவு முன்புரிவை விடநினை யேனே. .. ..  2

தேவ தேவனெனுஞ் சிற்சபை முருகா
ஆவி போலுமுள வார்வலர் மகவோ
டேவ லார்புரிவை விடநினை வேனுள்
மேவு முன்புரிவை விடநினை யேனே. .. ..  3

தஞ்ச மென்பவர்கள் சார்சர ணாவென்
நெஞ்சு ணின்றுணர்வை நீட்டொரு குகனே
வஞ்சி யின்புரிவை யேவிட வலிப்பேன்
விஞ்சு முன்புரிவை விடநினை யேனே. .. ..  4

அமல வந்தணர்கள் பழிச்சிடு மயில்வேற்
குமர சம்பிரம குருபர கேட்டி
தமர்க டம்புரிவை யேவிட நினைவேன்
விமல வுன்புரிவை விடநினை யேனே. .. ..  5

மாசில் குங்கும பயோதர வள்ளி
பேசு மின்சொலமு துண்செவிப் பொரியோய்
நாசி யின்புரிவை நான்விட நினைவேன்
நேச நின்புரிவை விடநினை யேனே. .. ..  6

அரனொர் பங்குடைய வங்கயல் விழியாள்
முருக வென்கவிகொண் முழுமுத லடிகேள்
இரத நாப்புரிவை யேவிட நினைவேன்
விரத வுன்புரிவை விடநினை யேனே. .. ..  7

சீத விந்துள வலங்கல்கொள் சேயோய்
ஓத ரும்பாரிவ ருளத்தவி சுறைவோய்
ஏதில் கட்புரிவை யேவிட நினைவேன்
வேத வுன்புரிவை விடநினை யேனே. .. ..  8

மாலு மந்தணனும் வழிபடு முதல்வா
கால மெல்லைவினை கடந்த வதீதா
தூல மெய்ப்புரிவை துறந்திட நினைவேன்
வேல வுன்புரிவை விடநினை யேனே. .. ..  9

துய்ய நின்றகவி னாற்புகழ் சொன்னோன்
ஐய கேட்டிசெவி யகக்கர ணங்கள்
உய்யொ ணாமனனி யுறங்கிட நினைவேன்
மெய்ய னுன்புரிவை விடநினை யேனே. .. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 1ஆம் தேதி சுக்கிரவாரம்