நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
22. | மெய்ப்பற்று | 10 | |
பலன் | உண்மையான பக்தி பெற்று பெருவாழ்வு பெற வேண்டுமா?
|
மெய்ப்பற்று
இசை –மெய்ப்பற்று (கலி விருத்தம்);
பண் - தக்கேசி
தேவாரப் பாடல் - மடையில் வா¨
இராகம் - காம்போதி
தாளம் -
சொல்லு யர்ந்தமறை சொன்முடி வாமோர்
சொல்லி யம்புதுரை யாவரு முருகா
இல்லி டப்புரிவை விடநினை வேன்கோள்
வெல்லு முன்புரிவை விடநினை யேனே. .. .. 1
சரண நம்பினவர் சததமு முய்ய
அருளு மன்புடைய வயிலவ யாணர்
இரத மூர்புரிவை விடநினை வேனுள்
விரவு முன்புரிவை விடநினை யேனே. .. .. 2
தேவ தேவனெனுஞ் சிற்சபை முருகா
ஆவி போலுமுள வார்வலர் மகவோ
டேவ லார்புரிவை விடநினை வேனுள்
மேவு முன்புரிவை விடநினை யேனே. .. .. 3
தஞ்ச மென்பவர்கள் சார்சர ணாவென்
நெஞ்சு ணின்றுணர்வை நீட்டொரு குகனே
வஞ்சி யின்புரிவை யேவிட வலிப்பேன்
விஞ்சு முன்புரிவை விடநினை யேனே. .. .. 4
அமல வந்தணர்கள் பழிச்சிடு மயில்வேற்
குமர சம்பிரம குருபர கேட்டி
தமர்க டம்புரிவை யேவிட நினைவேன்
விமல வுன்புரிவை விடநினை யேனே. .. .. 5
மாசில் குங்கும பயோதர வள்ளி
பேசு மின்சொலமு துண்செவிப் பொரியோய்
நாசி யின்புரிவை நான்விட நினைவேன்
நேச நின்புரிவை விடநினை யேனே. .. .. 6
அரனொர் பங்குடைய வங்கயல் விழியாள்
முருக வென்கவிகொண் முழுமுத லடிகேள்
இரத நாப்புரிவை யேவிட நினைவேன்
விரத வுன்புரிவை விடநினை யேனே. .. .. 7
சீத விந்துள வலங்கல்கொள் சேயோய்
ஓத ரும்பாரிவ ருளத்தவி சுறைவோய்
ஏதில் கட்புரிவை யேவிட நினைவேன்
வேத வுன்புரிவை விடநினை யேனே. .. .. 8
மாலு மந்தணனும் வழிபடு முதல்வா
கால மெல்லைவினை கடந்த வதீதா
தூல மெய்ப்புரிவை துறந்திட நினைவேன்
வேல வுன்புரிவை விடநினை யேனே. .. .. 9
துய்ய நின்றகவி னாற்புகழ் சொன்னோன்
ஐய கேட்டிசெவி யகக்கர ணங்கள்
உய்யொ ணாமனனி யுறங்கிட நினைவேன்
மெய்ய னுன்புரிவை விடநினை யேனே. .. .. 10