பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » இசை »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
23. பொய்ம்மார்க்க நீக்கம் 10
பலன்தவறான பாதையில் செல்லாதிருக்க வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

பொய்ம்மார்க்க நீக்கம்

'பாம்பன்' ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
திருவலங்க திரட்டு - முதற்கண்டம்* -
இசைத்தமிழ் (இரண்டாம் மண்டலம்)
பாடல் - பொய்ம்மார்க்க நீக்கம்

பாடல் - பொய்ம்மார்க்க நீக்கம்

பண் - தக்கேசி
தேவாரப் பாடல் - ஆலந்தான் உகந்து
இராகம் - காம்போதி
தாளம் -

திருமி னாமகள் பூமக ளேத்தச்
      சிறந்த நீரர மகளிரம் பணிபல்
புரிய வடியவர் துதிசெய மாண்பு
      பூத்த விண்கஜ நாயகி காந்தா
பொருவி லாவுனை யேநினை யாதார்
      புடவி மீதனு தினமல முண்ணுங்
கிருமிக் குங்குடை யாகுவ ரவரைக்
      கிஞ்சித் தும்மதி யேன்மித யேனே. ..  1

பழதி லாரண நூலளப் பின்றிப்
      பரிந்து சொன்னிலை களிலு மடங்கா
முழுவி யோமசம் பூரண முருகா
      முனிவ ரந்தணர் குரங்குமெம் மானே
தொழுநல் லார்க்கரு ளுனையிலை யென்றே
      சொல்லு வோர்கள்வண் ணான்பொதி சுமக்குங்
கழுதைக் குங்கடை யாகுவ ரவரைக்
      கனவிலும்மதி யேன்மதி யேனே. ..  2

பரந்த மாயையின் பாசமுட் கிடந்து
      பதைத்து நொந்தரு ணாடிடு பசுக்கள்
தரங்கண் டருள்செய நீநனி கொள்ளுந்
      தாவில் பதியுரு வைப்பழி பகரத்
திரங்கொள் வோரெனை யாண்முரு காநற்
      றிருவி லாது சதாமுகஞ் சுரித்த
குரங்குக் குங்கடை யாகுவ ரவர்சொல்
      கூற்றை நான்மதி யேன்மதி யேனே. ..  3

தாய்க்குந் தந்தைக்கு மேதந்தை தாயாய்த்
      தனக்கொர் தந்தையுந் தாயு மிலாமல்
மாய்க்கு மிச்சையை வென்னுணி யோர்க்கு
      வாய்க்குஞ் சிவக்கொழுந் தாய்ச்சுக மாங்காய்
காய்க்குங் கற்பக மாமுனைத் தீழ்ப்பாக்
      கழறு வோர்க ளனாரத நக்கும்
நாய்க்கு மேகடை யாகுவ ரவர்வீ
      றாப்பை நான்மதி யேன்மதி யேனே. ..  4

பெருமை யிற்பெரும் பெருமைகொள் பொருளாய்ப்
      பிறங்கி யைந்தொழி லாலுல கெங்கும்
அருமை யாநடு வாணையைப் பிரோ¢த்
      தறிஞ ருண்மரைப் பீடிகை யுறங்கும்
உரிமை யொண்குக னேயுனைப் பரமென்
      றுள்கி டாதவர் தாமதி வரண்ட
எருமைக் குங்கடை யாகுவ ரவரை
      யென்று நான்மதி யேன்மதி யேனே. ..  5

வீயு திப்பு விகாரமில் சுயம்பு
      விமல மாயசஞ் சலவிபு வாய்நல்
தூய நான்மறை யின்சிரப் பொருளாய்த்
      துவித சூனிய பூரண வெளியாய்
ஆயு மனர்க்கிறை யாயுள்ள வடிவே
      லைய வுனைப்பணி யாதவ ரீனப்
பேயி னுங்கடை யாகுவ ரன்னோர்
      பெருமை நான்மதி யேன்மதி யேனே. ..  6

என்று நீக்கமின் றெங்கணு மிருந்து
      மெவருங் காணவொ ணாப்பர சிவத்தில்
நின்று தோன்றொரு சேயெனு நினது
      நீட ருட்டிற மதைவிடுத் துயிரைக்
கொன்று தின்றுடல் வளர்த்திடு வோர்பல்
      கோடி வித்தக ரென்னினு மலமுண்
பன்றிக் குங்கடை யாகுவ ரன்னோர்
      பரிவை நான்மதி யேன்மதி யேனே. ..  7

பாரிற் பாடுறு பசுக்களி னிமித்தம்
      பரம னானநின் பரிவது விளங்கச்
சூரி றிருவுருக் கொண்டறி வுறுத்துஞ்
      சுதந்தி ரத்தையு முன்னடி யாரிப்
பாரிற் கொள்சிவ சின்னங்க டமையும்
      பழிக்கு மடரழுக் கார்புழைத் தூம்பின்
நீரிற் குங்கடை யாகுவ ரன்னோர்
      நெறியை நான்மதி யேன்மதி யேனே. ..  8

குலத்தை நீத்துயர் குடியினை நீத்துக்
      குணத்தை நீத்துயிர்க் கூற்றினை நீத்துப்
பலத்த தவமிழைப் போர்களு முனது
      பரம நாமமுச் சரிப்பதுண் டதனை
வலத்தி டாதவர் திருக்குழ காகேண்
      மதியி லாது புலானுகர் புலையன்
மலத்திற் குங்கடை யாகுவ ரன்னோர்
      மதியை நான்மதி யேன்மதி யேனே. ..  9

விருப்புற் றுன்புகழ் பாடியு னருளை
      மேவி யேதமி லமுதமுற் றோற்கன்
றிருப்புச் சொல்லிய வெம்பெரு மானே
      யிணையில் பூரணத் திருமுரு காவல்
மருப்புப் பன்றியை மாய்த்தவல் லோயுன்
      மார்க்க மேகரு தார்சித டன்காற்
செருப்புக் குங்கடை யாகுவ ரன்னோர்
      செருக்கை நான்மதி யேன்மதி யேனே. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 4ஆம் தேதி சோமவாரம்