நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
24. | அடியாரகம் | 10 | |
பலன் | வினைகள், தீவினைகள், ஊழ்வினைகள் நீங்க வேண்டுமா?
|
அடியாரகம்
பாடல் - அடியாரகம்
பண் - சாதாரி
தேவாரப் பாடல் - வானவர்கள் தானவர்கள்
இராகம் - பந்துவராளி
தாளம் -
மாமணிமு டிச்சுரர்கள் கோனெனும்வ னப்புடைய
மாமயிலி ருந்தசுரர்கோன்
பேமுறவெ திர்த்துநெடு வேல்கொடவ னீளுடல்
பிளந்திறவ யர்ந்தவிறலோய்
ஆமய மிலாதுபர வோமயம தாகவடி
யாரகமி ருக்குமுருகா
போமுனம ணைத்திரிபி லாதநிலை யானபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 1
பாதலம னைத்தையு நடத்தடல்கொ ளாடகரும்
பாரநர கங்களெவையும்
மாதிதி புரிந்திடுகூர் மாண்டருமண் ணாயபிர
மாண்டமதை நீண்டகாவல்கொண்
டாதாரித் திருப்பவரு மேத்துமுத லாகியடி
யாரகமி ருக்குமுருகா
போதவொளி யைப்பெருக்கி யாசினிலை யானபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 2
துங்கமெய்ச் சதருத்திர ருங்ககனே சாதிகளுந்
துன்றுமண்ட லாதிபர்களும்
பங்கமற்ற வெளடு வடுநமா வுஞ்சுவாகா
பட்சுதா வெனப்பகருமே
ழங்கமுள்ள சத்தகொடி மந்திரரு மெச்சவடி
யாரகமி ருக்குமுருகா
பொங்கிரு ளறுத்தருள்வி ளங்குநிலை யானபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 3
சுந்தாமல் கண்டநிரை யத்தனையு முச்சியிற்
சுமந்திடுமா தாரசத்தியும்
அந்தவொரு சத்தியுட னார்ந்தசுத்த மாயையை
யனாரதந டத்தனந்தரும்
அந்தமுயர் சூக்குமரு மேனையரு மெச்சவடி
யாரகமி ருக்குமுருகா
புந்தியைய கண்டவெளி யாகநனி செய்துபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 4
சீர்த்தியுள்ள பிரணவர்தே சேசாரிறை காலரஞ்சு
தீர்த்தரெழில் கொண்டசுசிவர்
கீர்த்திகொள்சா தாக்கியர்நற் சூக்குமரொண் காரணரெ
னக்கிளத்து கின்றவொர்தச
மூர்த்திக ளனாரதம னந்தமுறை மெச்சவடி
யாரகமி ருக்குமுருகா
பூர்த்தியெனுஞ் சிற்பர வெளிக்குளே யடங்குபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 5
வித்தைபெரு காடகரென் மூர்த்திக்கதிட் டானராம்
வியாபகர்கூர் மாண்டமூர்த்தியின்
உத்திக்கதிட் டானரென்வி யோமருயர் குண்டலியென்
றோதிடுமா தாரசத்திமேல்
அத்தனெனக் கூறவுள னாதாரிவர் மெச்சவடி
யாரகமி ருக்குமுருகா
பொத்தையுடல் விட்டிடுமுன் முற்றுநிலை யாகுபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 6
ஏசறுவி யாபகரும் வியோமவடி வோரனந்த
ரென்பவரு மன்பனாதரும்
நேசமொடு நாற்புடைய மேத்தநடு வேயமர்ந்து
நீடழக னந்தரைநடாத்
தாசிலிறை யாயவிர னாசிருத ராயுமடி
யாரகமி ருக்குமுருகா
பூசுரர்பு கழ்ந்திடுமொர் வாழ்வெனு மகண்டபாரி
பூரண மெனக்கருடியே... .. 7
மிக்கநெறி யத்திரியின் கண்ணயன் சிருட்டிபெரு
விண்டுநெஞ்சு வெங்கனன்முகம்
சொக்கவமு தக்கடலெ னும்புலங்க ளில்விரிந்து
தோன்றினதெ னச்சொன்மதியை
எக்கலையுந் தோன்றவணி வோன்குமர னாகியடி
யாரகமி ருக்குமுருகா
பொக்கமில்சு வர்க்கர்புகழ் சிற்சுகவ கண்டபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 8
மண்ணுலகும் வி ண்ணுலகு நண்ணிநண்ணி யுன்னவொரு
மன்னெனவி ருந்துமொருவர்
எண்ணிடவும் பன்னிடவு முள்ளகுறி யொன்றுமின்றி
யெவ்வுயிர்த்தி ரட்குமுயிராம்
அண்ணலெனும் விண்ணெனநி லாவியுள்ள சோதியடி
யாரகமி ருக்குமுருகா
புண்ணியர்வி ரும்புசுக சின்மய வகண்டபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 9
நீச்சுநிலை யற்றசன னக்கடலை நின்றனரு
ளென்றபுணை கொண்டுகடந்து
பேச்சொடு பிணக்கில்சுக மேவியவெட் டாதமலைப்
பேரனிறை யானதுரையே
ஆச்சாரிய வாயிரம் பெயர்ப்பிரம மாகியடி
யாரகமி ருக்குமுருகா
பூச்சியமி லாதவொரு பூச்சிய வகண்டபாரி
பூரண மெனக்கருடியே. .. .. 10