நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
25. | திருச்சிந்துபுரம் | 10 | |
பலன் | வழக்கிலிருந்து நீங்கள் வெற்றி பெற வேண்டுமா?
|
திருச்சிந்துபுரம்
பாடல் - திருச்சிந்துபுரம்
பண் - நட்டராகம்
தேவாரப் பாடல் - பொன்னார் மேனியனே
இராகம் - பந்துவராளி
தாளம் - ரூபகம்
கார்முகி றான்பொழியு மிந்தக் காசினி மீதெனெதிர்
நார்முனி யென்னவந்தே யொரு நாட்டத்தில் வைத்ததுபோல்
ஆர்மதி யுந்தருவோ ருனை யன்றி யெவருளரே
சீர்பெற வாட்படுவர்க் கருள் சிந்து புரத்தானே. .. .. 1
பொய்கொலை குத்திரங்கள் செய்து பூரித்த புன்மையினேன்
உய்வண மாதவர்போல் வந்தவ் வுண்மைசொன் னாயினமும்
ஐயவிங் கெற்கருள்வோ ருணை யன்றி யெவருளரே
தெய்வமென் றாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. .. .. 2
கொள்ளு நிலைவிளக்கிச் சிறு கோவணத் தோடிருந்தே
உள்ளென வைத்தவனே யென துள்ளத்து ளேமருவி
எள்ளிடா திங்கருள்வோ ருணை யன்றி யெவருளரே
தெள்ளிதி னாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. .. .. 3
காரண மாயையிருந் தெழு காரிய மாமுடம்பைப்
பூரண மாயளித்திங் குனைப் போற்ற விதித்தவருள்
ஆரிய வெற்கருள்வோ ருணை யன்றி யெவருளரே
சீருட னாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. .. .. 4
ஆசைகொள் பொய்யுலகப் பட ரானதை நச்சியுழல்
பாசர் வழியையொரு சற்றும் பற்ற விடாதுசெய்தோய்
ஆசையொ டெற்கருள்வோ ருனை யன்றி யெவருளரே
தேசுட னாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. .. .. 5
இந்த வுடம்பெடுத்தே யிவ ணேற்றபொல் லாங்கனைத்தும்
வந்த புலந்தொரியா தற மாய்த்தவ னேயினுமென்
அந்தர மோர்ந்தருள்வோ ருனை யன்றி யெவருளரே
சிந்தைசெய் தாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. .. .. 6
புன்மன தைப்பொரிதாப் பணிப் புன்றொழி லத்தைனையும்
என்மன திற்படியா திறச் செய்தவ னேயினமும்
அன்னம னைத்தடுப்போ ருனை யன்றி யெவருளரே
தென்னுட னாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. .. .. 7
பெற்றவ ரும்மறப்பார் பிறந் தார்மக ரும்மறப்பார்
உற்றவ ளும்மறப்பா ளொரு காலமு நீமறவாய்
அற்ற மறுத்தருள்வோ ருனை யன்றி யெவருளரே
தெற்றென வாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே .. .. 8
மண்ணினும் விண்ணினும்நான் கென மல்கு திசைகளினும்
அண்ணிய வுன்னடியா ருடை யன்பிலுள் ளோயெனதுள்
எண்ண மறிந்தருள்வோ ருனை யன்றி யெவருளரே
தெண்ணர லைக்குரைசா றிருச் சிந்து புரத்தானே. .. .. 9
துப்புறழ் வாய்க்குறமா னினி தோடழு வுங்குகனே
அப்பனே யின்பநுகர்ந் தனு பூதிசொன் னோன்குரவா
ஒப்புட னெற்கருள்வோ ருனை யன்றி யெவருளரே
செப்பமொ டாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. .. .. 10