பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
25. திருச்சிந்துபுரம் 10
பலன்வழக்கிலிருந்து நீங்கள் வெற்றி பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருச்சிந்துபுரம்

பாடல் - திருச்சிந்துபுரம்

பண் - நட்டராகம்
தேவாரப் பாடல் - பொன்னார் மேனியனே
இராகம் - பந்துவராளி
தாளம் - ரூபகம்

கார்முகி றான்பொழியு மிந்தக் காசினி மீதெனெதிர்
நார்முனி யென்னவந்தே யொரு நாட்டத்தில் வைத்ததுபோல்
ஆர்மதி யுந்தருவோ ருனை யன்றி யெவருளரே
சீர்பெற வாட்படுவர்க் கருள் சிந்து புரத்தானே. .. ..  1

பொய்கொலை குத்திரங்கள் செய்து பூரித்த புன்மையினேன்
உய்வண மாதவர்போல் வந்தவ் வுண்மைசொன் னாயினமும்
ஐயவிங் கெற்கருள்வோ ருணை யன்றி யெவருளரே
தெய்வமென் றாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. ..  ..  2

கொள்ளு நிலைவிளக்கிச் சிறு கோவணத் தோடிருந்தே
உள்ளென வைத்தவனே யென துள்ளத்து ளேமருவி
எள்ளிடா திங்கருள்வோ ருணை யன்றி யெவருளரே
தெள்ளிதி னாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. ..  ..  3

காரண மாயையிருந் தெழு காரிய மாமுடம்பைப்
பூரண மாயளித்திங் குனைப் போற்ற விதித்தவருள்
ஆரிய வெற்கருள்வோ ருணை யன்றி யெவருளரே
சீருட னாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. .. ..  4

ஆசைகொள் பொய்யுலகப் பட ரானதை நச்சியுழல்
பாசர் வழியையொரு சற்றும் பற்ற விடாதுசெய்தோய்
ஆசையொ டெற்கருள்வோ ருனை யன்றி யெவருளரே
தேசுட னாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. .. ..  5

இந்த வுடம்பெடுத்தே யிவ ணேற்றபொல் லாங்கனைத்தும்
வந்த புலந்தொரியா தற மாய்த்தவ னேயினுமென்
அந்தர மோர்ந்தருள்வோ ருனை யன்றி யெவருளரே
சிந்தைசெய் தாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. .. ..  6

புன்மன தைப்பொரிதாப் பணிப் புன்றொழி லத்தைனையும்
என்மன திற்படியா திறச் செய்தவ னேயினமும்
அன்னம னைத்தடுப்போ ருனை யன்றி யெவருளரே
தென்னுட னாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. ..  ..  7

பெற்றவ ரும்மறப்பார் பிறந் தார்மக ரும்மறப்பார்
உற்றவ ளும்மறப்பா ளொரு காலமு நீமறவாய்
அற்ற மறுத்தருள்வோ ருனை யன்றி யெவருளரே
தெற்றென வாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே .. ..  8

மண்ணினும் விண்ணினும்நான் கென மல்கு திசைகளினும்
அண்ணிய வுன்னடியா ருடை யன்பிலுள் ளோயெனதுள்
எண்ண மறிந்தருள்வோ ருனை யன்றி யெவருளரே
தெண்ணர லைக்குரைசா றிருச் சிந்து புரத்தானே. .. ..  9

துப்புறழ் வாய்க்குறமா னினி தோடழு வுங்குகனே
அப்பனே யின்பநுகர்ந் தனு பூதிசொன் னோன்குரவா
ஒப்புட னெற்கருள்வோ ருனை யன்றி யெவருளரே
செப்பமொ டாட்படுவார்க் கருள் சிந்து புரத்தானே. ..  ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 9ஆம் தேதி மந்தவாரம்