நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
27. | அங்கப்பேறு | 10 | |
பலன் | பூர்வ புண்ணியம் அடையவும், நம்முடைய உறுப்புகளால் எவ்வாறு புண்ணியம் அடையலாம்.
|
அங்கப்பேறு
பாடல் - அங்கப்பேறு
பண் - நட்டராகம்
தேவாரப் பாடல் - பொன்னார் மேனியனே
இராகம் - பந்துகவராளி
தாளம் - ரூபகம்
ஆதித்த னாம்பாரிதி தலம் யாவும் விளக்குதல்போல்
தீதற்ற மெய்யடியார் சிந்தை தன்னை விளக்கியுண்மை
போதிக்கும் பாவகியே யுனைப் போற்றிப் பழிச்சியென்னாப்
பேதிப் பிலாப்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்ததன்றே.. .. 1
கூரர ணப்படையா யண்ட கோடியெல் லாம்பயக்கும்
ஆரண வற்புதனே யறி வாய்விபு வானவனே
சீருட னாளவந்த திரு மேனியைக் கண்டுகண்கள்
பேருல கிற்பெறும்பே றன்று பெற்றுக் களித்ததனவே .. .. 2
வாச நறுங்கடம்பா வெழில் வாண்மணி யார்சிலம்பா
தாச னெடுத்தவிந்தச் சன னங்கடைத் தேறிடுமா
தேசிக வாக்கியமாச் செப்பக் கேட்டென தஞ்செவிதான்
பேசற் கரும்பேற்றை யிம்பர்ப் பெற்றக் களித்ததன்றே .. .. 3
முன்னைப் பழம்பரமே முழு மூலச் சிவக்கொழுந்தே
என்னுட் கணேயிருந்தே யெனக் கின்பிகைக் கும்பொருளே
கொன்னழ குன்னடியை நனி கூப்பியென் கையிரண்டும்
பின்ன மிலாப்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்தனவே. .. .. 4
மட்டங் குயக்குறத்தி மண வாளனே தாழுநர்தங்
கட்டஞ் செகுப்பவனே கரு ணாகர வேலவனே
வட்டம தாச்சூழ வலம் வந்திரு தாள்களுமே
பெட்டி லரும்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்தனவே. .. .. 5
ஓய்வி லிரும்வெறுக்கை யுள்ள வுத்தம னேயரனார்
சேயெனுஞ் செம்பொருளே சிவ ஞானப் பெருந்தகையே
காய மெலாமுனது கழ லைக்குரங் கிக்குரங்காப்
பேய்கள் பெறாப்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்தனவே. .. .. 6
முத்தர் முதுக்குறைவே சிவ மோன வருட்பரப்பே
எத்திசை யுஞ்செறிந்த விறை யேயெனை யாள்குகனே
நித்தலு நின்சரணை யென்ற னெஞ்சம துள்கியுள்காப்
பித்தர் பெறாப்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்ததன்றே. .. .. 7
மாடுடை யண்டர்பிரா னெனு மாசில் சதாசிவனே
வீடுடை யாய்விமலா விரை வீசு கடம்பணியாய்
தாடரு முன்னிலைமை யைவி சாரித்தென் புத்திகெடாப்
பீடுடை நற்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்ததன்றே. .. .. 8
ஏர்மலி யெம்பரனே யிணை யில்விசும் பானவனே
தார்மலி மொய்ம்பரனே சிவ சண்முக சங்கரனே
சீர்மலி யுன்னருளை யென்றன் சித்தம தெண்ணியெணாப்
பேர்கள்பெறாப் பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்ததன்றே. .. .. 9
தெள்ளறி விற்சிறந்தே யனு பூதி தொரித்தவெந்தை
உள்ளறி விற்கலந்தே யொரு மோதநல் குங்குழகா
பொள்ளற் சடங்கெடுமுன் புரி வுற்றழுங் கென்னையுநீ
கொள்ளும் விதம்பணித்தா னனி கூடிக் களிப்பேனே. .. .. 10