பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
27. அங்கப்பேறு 10
பலன்பூர்வ புண்ணியம் அடையவும், நம்முடைய உறுப்புகளால் எவ்வாறு புண்ணியம் அடையலாம்.
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

அங்கப்பேறு

பாடல் - அங்கப்பேறு

பண் - நட்டராகம்
தேவாரப் பாடல் - பொன்னார் மேனியனே
இராகம் - பந்துகவராளி
தாளம் - ரூபகம்

ஆதித்த னாம்பாரிதி தலம் யாவும் விளக்குதல்போல்
தீதற்ற மெய்யடியார் சிந்தை தன்னை விளக்கியுண்மை
போதிக்கும் பாவகியே யுனைப் போற்றிப் பழிச்சியென்னாப்
பேதிப் பிலாப்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்ததன்றே..  ..  1

கூரர ணப்படையா யண்ட கோடியெல் லாம்பயக்கும்
ஆரண வற்புதனே யறி வாய்விபு வானவனே
சீருட னாளவந்த திரு மேனியைக் கண்டுகண்கள்
பேருல கிற்பெறும்பே றன்று பெற்றுக் களித்ததனவே .. ..  2

வாச நறுங்கடம்பா வெழில் வாண்மணி யார்சிலம்பா
தாச னெடுத்தவிந்தச் சன னங்கடைத் தேறிடுமா
தேசிக வாக்கியமாச் செப்பக் கேட்டென தஞ்செவிதான்
பேசற் கரும்பேற்றை யிம்பர்ப் பெற்றக் களித்ததன்றே .. ..  3

முன்னைப் பழம்பரமே முழு மூலச் சிவக்கொழுந்தே
என்னுட் கணேயிருந்தே யெனக் கின்பிகைக் கும்பொருளே
கொன்னழ குன்னடியை நனி கூப்பியென் கையிரண்டும்
பின்ன மிலாப்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்தனவே. .. ..  4

மட்டங் குயக்குறத்தி மண வாளனே தாழுநர்தங்
கட்டஞ் செகுப்பவனே கரு ணாகர வேலவனே
வட்டம தாச்சூழ வலம் வந்திரு தாள்களுமே
பெட்டி லரும்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்தனவே. .. ..  5

ஓய்வி லிரும்வெறுக்கை யுள்ள வுத்தம னேயரனார்
சேயெனுஞ் செம்பொருளே சிவ ஞானப் பெருந்தகையே
காய மெலாமுனது கழ லைக்குரங் கிக்குரங்காப்
பேய்கள் பெறாப்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்தனவே. .. ..  6

முத்தர் முதுக்குறைவே சிவ மோன வருட்பரப்பே
எத்திசை யுஞ்செறிந்த விறை யேயெனை யாள்குகனே
நித்தலு நின்சரணை யென்ற னெஞ்சம துள்கியுள்காப்
பித்தர் பெறாப்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்ததன்றே. .. ..  7

மாடுடை யண்டர்பிரா னெனு மாசில் சதாசிவனே
வீடுடை யாய்விமலா விரை வீசு கடம்பணியாய்
தாடரு முன்னிலைமை யைவி சாரித்தென் புத்திகெடாப்
பீடுடை நற்பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்ததன்றே. .. ..  8

ஏர்மலி யெம்பரனே யிணை யில்விசும் பானவனே
தார்மலி மொய்ம்பரனே சிவ சண்முக சங்கரனே
சீர்மலி யுன்னருளை யென்றன் சித்தம தெண்ணியெணாப்
பேர்கள்பெறாப் பேற்றை யிம்பர்ப் பெற்றுக் களித்ததன்றே. .. ..  9

தெள்ளறி விற்சிறந்தே யனு பூதி தொரித்தவெந்தை
உள்ளறி விற்கலந்தே யொரு மோதநல் குங்குழகா
பொள்ளற் சடங்கெடுமுன் புரி வுற்றழுங் கென்னையுநீ
கொள்ளும் விதம்பணித்தா னனி கூடிக் களிப்பேனே. .. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 16ஆம் தேதி மந்தவாரம்