பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
28. உள்வைப்பு 10
பலன்உள்ளத்தினால் வழிபாடு செய்தல் எப்படி?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

உள்வைப்பு

பாடல் - உள்வைப்பு(அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பண் - பழம்பஞ்சுரம்
தேவாரப் பாடல் - உற்றுமை
இராகம் - சங்கராபரணம்
தாளம் - ரூபகம்

உலகம் யாவும் படைத்தவனை யுகந்தெவ் வுலகும் புரப்பவனை
இலகு முயிருட் கலந்தவனை யெங்கு நீப்பின் றிருப்பவனை
நிலவு மயிலைப் பிடித்தவனை நிகாரில் சிகண்டி யூர்பவனை
உலவா வெங்க ளுத்தமனை யுள்ளத் துள்ளே வைத்தேனே. ..  1

காதற் கியைந்த காதலனைக் கருணைக் கடலைக் கண்மணியைச்
சீதப் பாலைத் தேங்கனியைத் தெவிட்டா வின்பத் தீஞ்சுவையை
ஆதிப் பெருமா னாயவனை யாறு முகத்துச் செம்மணியை
ஓதற் காரிய வெம்மானை யுள்ளத் துள்ளே வைத்தேனே.  ..  2

அம்பொற் சிலம்பா ரடியழகை யடியா ரகத்தி னாரமுதைப்
பைம்பொற் கவலை காத்தவளின் பாரிவுக் குவந்த கட்டிமுத்தைச்
செம்பொற் சோதிச் செழுங்குருந்தைத் திகழ்மாணிக்கத் திருவரையை
உம்பர்க் கருளெம் பெருமானை யுள்ளத் துள்ளே வைத்தேனே. ..  3

தேனிற் சிறந்த மொழியானைத் திருவிற் சிறந்த வுருவானை
வானிற் சிறந்த பதியானை மதியிற் சிறந்த பொரியானை
மானிற் சிறந்த விழியாளம் மலைமா தேந்தும் பைங்கிளியை
ஊனிற் போருயி ரெம்மானை யுள்ளத் துள்ளே வைத்தேனே.   ..  4

அன்னைக் கனையா யுள்ளானை யயனக் கயனா யிருப்பபானைத்
தன்னைப் போலொன் றில்லானைச் சாவில் பிறப்பி னில்லானை
முன்னைப் பின்னைப் பிறழானை மூவா முருகப் பெருமானை
உன்னற் காரிய வெம்மானை யுள்ளத் துள்ளே வைத்தேனே.  ..  5

மெய்யின் மெய்யாய் நிற்பவனை விரியு மகண்ட வெளியானைப்
பொய்யில் வேதப் பொறையாளர் போற்று மபேத வுணர்வானைச்
செய்ய கோழிக் கொடியானைச் சிறந்த ஞானத் திருவானை
உய்யு மாறெம் முத்தமனை யுள்ளத் துள்ளே வைத்தேனே   ..  6

செச்சைத் தாரார் மொய்ம்பானைத் திருமான் மருமா னென்பானை
இச்சைக் கலிக்கு ளாழ்ந்தோரை யெடுத்துக் கரையேற் றிகலானைப்
பிச்சைத் தலைவன் பிள்ளைதனைப் பிரமா பேணும் பேழ்மறையின்
உச்சிப் பொருளா மெம்மானை யுள்ளத் துள்ளே வைத்தேனே. ..  7

ஏட்டின் மொழிக ளளவின்றி யியம்பி யியம்பி முடிபுரையாத்
தாட்டி கந்தா னுடையானைச் சகல கலாவல் லோனையுயிர்
நாட்டி யஞ்செய் பவனையணு நடுவா னவனை நலிவிலருள்
ஊட்டி யெனையிங் காள்பவனை யுள்ளத் துள்ளே வைத்தேனே.  ..  8

அரிய மாலிற் காரியானை யயனைச் சிறையிட் டருள்கோனை
நாரியைப் பாரியா வயர்ந்தவனை நமவென் றிறைஞ்ச விதித்தவனைப்
பொரியர்க் கருளும் பொரியானைப் பிறங்குங் கழுகு மலையானை
உரிமைப் படுமெம் பெருமானை யுள்ளத் துள்ளே வைத்தேனே.  ..  9

வெள்ளிக் கயிலை மலைவாழ்வை வியனார் மோன ரகக்கழையைக்
கள்ளிற் பொரிய திருப்புகழைக் கழறி யிரியா வாக்கமுற்ற
வள்ளற் குள்ளங் குளிர்வித்த மழையா முகிலை வான்மணியை
உள்ளற் காரிய வெம்மானை யுள்ளத் துள்ளே வைத்தேனே. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 18ஆம் தேதி சோமவாரம்