நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
28. | உள்வைப்பு | 10 | |
பலன் | உள்ளத்தினால் வழிபாடு செய்தல் எப்படி?
|
உள்வைப்பு
பாடல் - உள்வைப்பு(அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பண் - பழம்பஞ்சுரம்
தேவாரப் பாடல் - உற்றுமை
இராகம் - சங்கராபரணம்
தாளம் - ரூபகம்
உலகம் யாவும் படைத்தவனை யுகந்தெவ் வுலகும் புரப்பவனை
இலகு முயிருட் கலந்தவனை யெங்கு நீப்பின் றிருப்பவனை
நிலவு மயிலைப் பிடித்தவனை நிகாரில் சிகண்டி யூர்பவனை
உலவா வெங்க ளுத்தமனை யுள்ளத் துள்ளே வைத்தேனே. .. 1
காதற் கியைந்த காதலனைக் கருணைக் கடலைக் கண்மணியைச்
சீதப் பாலைத் தேங்கனியைத் தெவிட்டா வின்பத் தீஞ்சுவையை
ஆதிப் பெருமா னாயவனை யாறு முகத்துச் செம்மணியை
ஓதற் காரிய வெம்மானை யுள்ளத் துள்ளே வைத்தேனே. .. 2
அம்பொற் சிலம்பா ரடியழகை யடியா ரகத்தி னாரமுதைப்
பைம்பொற் கவலை காத்தவளின் பாரிவுக் குவந்த கட்டிமுத்தைச்
செம்பொற் சோதிச் செழுங்குருந்தைத் திகழ்மாணிக்கத் திருவரையை
உம்பர்க் கருளெம் பெருமானை யுள்ளத் துள்ளே வைத்தேனே. .. 3
தேனிற் சிறந்த மொழியானைத் திருவிற் சிறந்த வுருவானை
வானிற் சிறந்த பதியானை மதியிற் சிறந்த பொரியானை
மானிற் சிறந்த விழியாளம் மலைமா தேந்தும் பைங்கிளியை
ஊனிற் போருயி ரெம்மானை யுள்ளத் துள்ளே வைத்தேனே. .. 4
அன்னைக் கனையா யுள்ளானை யயனக் கயனா யிருப்பபானைத்
தன்னைப் போலொன் றில்லானைச் சாவில் பிறப்பி னில்லானை
முன்னைப் பின்னைப் பிறழானை மூவா முருகப் பெருமானை
உன்னற் காரிய வெம்மானை யுள்ளத் துள்ளே வைத்தேனே. .. 5
மெய்யின் மெய்யாய் நிற்பவனை விரியு மகண்ட வெளியானைப்
பொய்யில் வேதப் பொறையாளர் போற்று மபேத வுணர்வானைச்
செய்ய கோழிக் கொடியானைச் சிறந்த ஞானத் திருவானை
உய்யு மாறெம் முத்தமனை யுள்ளத் துள்ளே வைத்தேனே .. 6
செச்சைத் தாரார் மொய்ம்பானைத் திருமான் மருமா னென்பானை
இச்சைக் கலிக்கு ளாழ்ந்தோரை யெடுத்துக் கரையேற் றிகலானைப்
பிச்சைத் தலைவன் பிள்ளைதனைப் பிரமா பேணும் பேழ்மறையின்
உச்சிப் பொருளா மெம்மானை யுள்ளத் துள்ளே வைத்தேனே. .. 7
ஏட்டின் மொழிக ளளவின்றி யியம்பி யியம்பி முடிபுரையாத்
தாட்டி கந்தா னுடையானைச் சகல கலாவல் லோனையுயிர்
நாட்டி யஞ்செய் பவனையணு நடுவா னவனை நலிவிலருள்
ஊட்டி யெனையிங் காள்பவனை யுள்ளத் துள்ளே வைத்தேனே. .. 8
அரிய மாலிற் காரியானை யயனைச் சிறையிட் டருள்கோனை
நாரியைப் பாரியா வயர்ந்தவனை நமவென் றிறைஞ்ச விதித்தவனைப்
பொரியர்க் கருளும் பொரியானைப் பிறங்குங் கழுகு மலையானை
உரிமைப் படுமெம் பெருமானை யுள்ளத் துள்ளே வைத்தேனே. .. 9
வெள்ளிக் கயிலை மலைவாழ்வை வியனார் மோன ரகக்கழையைக்
கள்ளிற் பொரிய திருப்புகழைக் கழறி யிரியா வாக்கமுற்ற
வள்ளற் குள்ளங் குளிர்வித்த மழையா முகிலை வான்மணியை
உள்ளற் காரிய வெம்மானை யுள்ளத் துள்ளே வைத்தேனே. .. 10