பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
29. மெய்ம்மார்க்க விளக்கம் 10
பலன்வாழ்க்கையில் சத்திய நெறி கிடைக்க வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

மெய்ம்மார்க்க விளக்கம்

பாடல் - மெய்ம்மார்க்க விளக்கம்

பண் - கொல்லி
தேவாரப் பாடல் - மண்ணில் நல்ல
இராகம் - நெளரோ
தாளம் - ரூபகம்

நீரகம் பெருகு நாக நிருபனார் சுதைவார்க் கொங்கைப்
பீரகங் குளிர மாந்திப் பிரமனார் சிரசிற் குட்டி
ஏரகத் தமர்ந்த தேவை யிகனிசி சரரைக் காய்ந்த
தீரனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே...  ..  1

மாவளை யாரிக்கு நேமி வழங்கிய தணிகைச் சேயைக்
கோவரர் பதியை ஞானக் குழவியைக் குமர வேளை
ஆவியர் தேவா வானை யறிஞர்க ளகத்திற் றூங்குந்
தேவனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. ..  2

பொய்தபு மயோத்தி ராமன் போற்றிய குருந்தை ஞானச்
சைவனைத் தார கத்தின் சதுர்தனை விளக்கி னானைப்
பையுளில் பரம யோகர் பாரிவினில் வெளியாந் திவ்விய
தெய்வம தன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. ..  3

தன்னிக ரில்லா தானைத் தனிப்பரஞ் சுடரை ஞான்றும்
மன்னுயி ரனைத்து மோம்பி மலரடி யிருத்தம் மானை
என்னக மிருக்கும் வேந்தை யேர்ச்சிகா வளத்தி லேறு
தென்னனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. ..  4

வெறிநுக ரளிகண் மூசு மென்சுருட் குறமின் னேந்து
பொறிமுகை யழுந்து மொய்ம்புப் புனிதனைப் புனிதர் கோனைக்
குறிதிரி பேது மில்லாக் குகனைமஞ் சுமையாள் பங்கன்
சிறுவனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. ..  5

கவலைமா கடலில் வீழ்ந்த கறையனேன் காரிசை நூறி
அவனையே யேத்த வாணை யயர்ந்ததண் கருணை யானை
மவுனிக ளகநி லாவு மாணிக்க மதனை வேற்கைச்
சிவமதை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. ..  6

வல்வினை துமிக்குந் தேவை மறைகளை நொடித்த தேவை
நல்வினை யாளர் நாவி னவின்மனு வினுக்காந் தேவைப்
பல்கணம் வாழ்த்தும் வேளைப் பரமபுங் கவர்க ளேத்துஞ்
செல்வனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. ..  7

காந்திசெய் யரணத் தானைக் கனைகழற் சரணத் தானைச்
சாந்தர்க ளறிவிற் றோன்று சவியுடைச் சுடரை யன்பர்
வேந்தனை விபுதர் கோனை விமலனை விமலர் வாழ்த்துஞ்
சேந்தனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. ..  8

துண்ணெனத் துடிதான் கொட்டி யாடிடு துரையை யூனக்
கண்ணினர் காணாக் கானக் கமலநான் முகன்மா லேத்தும்
விண்ணென விரிந்து ளானை மிளிர்வடி வேல்சூ லேந்து
திண்ணனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. .. ..  9

காய்சரு கருந்து முவ்வோர் கருத்தினுக் கிசைந்து ளானை
ஓய்வறு புகழ்சொன் னோன்சொல் லொருவனைப் புறம்பா மார்க்கப்
பேய்கடா முணராச் சூரைப் பெருஞ்சிவ யோகர் பேணுஞ்
சேய்தனை யன்றி வேறு தெய்வநாம் வழிப டோமே. ..  ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 19ஆம் தேதி மங்களவாரம்