நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம்
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
2. | நின்றநிலை விண்ணப்பம் | 10 | |
பலன் | வாழ்க்கையில் நல்ல வழியில் சென்று நற்பெயர் கிடைக்க வேண்டுமா?
|
நின்றநிலை விண்ணப்பம்
பாடல் - நின்றநிலை விண்ணப்பம்
பண் - பழம்பஞ்சுரம்
தேவாரப் பாடல் - ஒற்றுமை சேர்வது
இராகம் - சங்கராபரணம்
தாளம் - ஆதி
நித்த முன்றனைப் பாவித் தோர்ந்தது நிச்ச யம்மென் றுணர்த்தவே
சத்தி யத்தொடு மென்மு னேவந்தென் றாச வாவென நாளெதாய்
நத்து மோவன்று தானன் றோவென்ற னாட்டங் கூடுத லாகுநாள்
முத்த னேமுரு கைய னேபர மோன னேயறி வாயரோ .. 1
மண்ணி னாசை மடங்கி நானந்த விண்ணி னாசையை வெளவுநாள்
எண்ணு கின்ற படிக்கு நீவந் திணக்கி யன்பொ டுரைக்குநாள்
ஒண்ணு மேலருள் பண்ணு மேயென் னுயீஇ¡ரி னுக்குயி ராய்மிளிர்
அண்ண லார்விழி பன்னி ரண்டுடை யண்ண லேயறி வாயரோ .. 2
மாத ராற்றத்தித் தத்தித் தாவு மனக்கு ரங்கென் வசத்திலே
ஏத நீத்துள் ளடங்கு நாளது வீச னீவந் துரைக்குநாள்
பாத நம்பிய தாசன் பாலருள் பண்ண வேண்டுமிந் நேரமே
வேத னேகரு ணால யாவடி வேலை யாவறி வாயரோ .. 3
செய்யும் யோகந் தவறி னாயெனச் செப்பி னாயிரண் டறிகுறி
மையு ளேனொன்றை யேம றந்து மருண்ட துண்டத்தை மீட்டுமென்
ஐய நீயருள் செய்த தாயிலை யாவர் பாலிதை யோதுவேன்
பொய்யி லாவயில் வேல ணாபாரி பூர ணாவாரி வாயரோ .. 4
ஏகு மூச்சை யிழுத்து நானுள் ளிருத்தி யேகட்ட வென்னினும்
தேக மோதிட மில்லை யவ்வழி தேர வும்மிலை யிவ்வுயிர்
போகு நாளென்ன செய்கு வேனின் பொறுப்பி லேயெனை யொப்பித்தேன்
மாகர் போற்றிடு மாம னாசிகி வாக னாவறி வாயரோ .. 5
ஈச னாகவுஞ் சீவ னாகவு மெண்ணின் மாசக மாகவும்
நாச மேது மிலாத தாய்நிற்கு ஞாயத் தீர்வையி னானுமொன்
றேசி லாதெனை யாக்கும் பண்பிங் கெனக்கொன் றேதின் றுனக்குண்டே
பாச நாசகிர் பாநி தீமிளிர் பாவ கீயறி வாயரோ .. 6
என்று முன்றனைக் கண்டு கொண்டடி யேத்தும் பாடு பெறாதவர்
ஒன்றி னுந்திட முற்றி டார்களி துள்ள தேபொது வாகவே
அன்று சொன்ன படிக்கு நீவந் தழைக்கு நாளதி தூரமோ
குன்றி யேமனங் கன்று கின்றது கொள்கு காவறி வாயரோ .. 7
வாக்கிற் பொய்யு மனத்தில் வஞ்சமு மல்கு மென்றென் றொழிலெலாம்
போக்கி நின்பத மேத்தி யுய்வது போது மென்றுணை நம்பினேன்
காக்க வுன்பர மேப ரங்குளக் கண்ணு ளோயிக விண்ணுளோய்
ஆக்க நீடு சடக்க ராசர வாட்டை யாவறி வாயரோ. .. 8
தந்தை தாயுஞ் சகோத ரங்களுந் தார முஞ்சுகு மாரரும்
பந்து வும்மித்ர சொந்த மும்பல் பவுள்சு நின்பத மாகவே
சிந்தை செய்ததைத் தேடி னேனன்றித் தேடி வைத்ததொன்
றில்லையே
கந்த னேயிரும் பாவ லாவள்ளி காவ லாவறி வாயரோ .. 9
ஊரும் பேருரு வுஞ்செல் லாகவென் றூரும் பேருரு வுந்தாரித்
தாருஞ் சொல்லற் கருஞ்சொல் லொன்றை யருள்செய் தங்கிச மாக்கொளுஞ்
சீரு டைக்குரு மூர்த்தி யேயிவன் செய்யும் விண்ணப்ப முய்யவே
சாரு டைப்புகழ் பாடி னோன்கண்ட சண்மு காவறி வாயரோ .. 10