நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
திரும்பி போக
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
31. | நமன்றமர் நணுகாநெறி | 10 | |
பலன் | எம பயம் நீங்க வேண்டுமா?
|
நமன்றமர் நணுகாநெறி
பாடல் - நமன்றமர் நணுகாநெறி
பண் - நட்டபாடை
தேவாரப் பாடல் - உண்ணாமலை
இராகம் - கம்பீரநாட்டை
தாளம் - ரூபகம்
ஆதித்தரெ னச்சொல்சுரர் களினீள்பகை யறுத்த
சோதிச்சுடர் வடிவேலவர் சுகுர்தத்திரு நாமம்
ஒதிப்புவி மீதேநித முவந்தாரரு ணாடிச்
சாதித்திடு வோர்பானமன் றமர்தாநணு காரே. .. 1
என்பார்தசை செந்நீர்நரம் பெனவேய்ந்தபொய் யாக்கை
துன்பாலழி முனமேசிவ சுதனான குகேசன்
அன்பாவதை யன்போடெண்ணி யன்பிற்படி யுமவன்
தன்கானினை வோர்பானமன் றமர்தாநணு காரே. .. 2
பாளைச்சுருண் மீதஞ்சிறை யளிதானளி பருக
வாளைப்பொரு தத்தாரைக ளிலகும்வன மகளார்
தோளைத்தழு வுங்காமாரி லுழல்சேயிரு தூய
தாளைப்புகழ் வோர்பானமன் றமர்நணு காரே. .. 3
மரணஞ்சன னஞ்சூழ்கவன் மருளேதுமி லாவோர்
புரணந்தனை யுடையாரடை பொருளாவிக ளுள்வாழ்
கரணன்மர கதரூப கலாபச்சிகி யூர்வோன்
சரணந்தொழு வோர்பானமன் றமர்தாநணு காரே. .. 4
நிதம்வந்தனை புரிவோரக நிகழுங்கிரு பாளு
மதவங்கய முகனாரிள வலெனுங்கும ரேச
பதபங்கய வியன்மான்மிய மொழிசீரிய பாடல்
சததஞ்சொலு வோர்பானமன் றமர்தாநணு காரே. .. 5
மனைபன்னிய ருஞ்சேயுற வோடேவிரி மண்ணில்
வினைபண்ணியு ழல்வோருளு மிளிர்வேன்முரு §
பினையுன்னடி யார்க்கேகளி பெருகும்படி தொண்டு
தனையேபு¡ரி வோர்பானமன் றமர்தாநணு காரே. .. 6
பலிக்கப்பரை கொண்டேமறு கூடின்னிசை பாடிப்
புலிப்பொற்புரி யரையாத்தொரு பூவெண்கிரி யுறைவோர்
வலிக்கொப்புறு குகதேவுயர் சாரிதங்களை மனமே
சலிக்கப்படிப் போர்பானமன் றமர்தாநணு காரே. .. 7
அவமாமதி பாவம்பல வயர்ந்தோர்குழு வுள்ளும்
நவமாமணி முடியும்பர்க ணாளுஞ்சலி யாமற்
சிவமேயென நினைகின்றவொர் செவ்வேளடி நேடித்
தவமேபுரி வோர்பானமன் றமர்தாநணு காரே. .. 8
மதங்கட்டிய மருப்புக்காரி யைப்பாய்முகை மகடூஉ
நிதம்பப்புழை வீழாவொரு நெறிநின்றறு முகவேள்
பதஞ்சிக்கிட விலையேயென பணுவோமென விழிநீர்
ததும்பத்திரி வோர்பானமன் றமர்தாநணு காரே. .. 9
தேர்ந்தோர்துதி செய்யுந்திருப் புகழ்சொன்னவ னெஞ்சம்
ஓர்ந்தேயருள் புரிந்தோனெனு முமையாள்சுத னடிக்கண்
வார்ந்தோடுநன் மதுநச்சிடு வாரிபோலவ னன்பிற்
சார்ந்தேயிருப் போர்பானமன் றமர்தாநணு காரே. .. 10