பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

திரும்பி போக


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
31. நமன்றமர் நணுகாநெறி 10
பலன்எம பயம் நீங்க வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

நமன்றமர் நணுகாநெறி

  பாடல் - நமன்றமர் நணுகாநெறி

பண் - நட்டபாடை
தேவாரப் பாடல் - உண்ணாமலை
இராகம் - கம்பீரநாட்டை
தாளம் - ரூபகம்

ஆதித்தரெ னச்சொல்சுரர் களினீள்பகை யறுத்த
சோதிச்சுடர் வடிவேலவர் சுகுர்தத்திரு நாமம்
ஒதிப்புவி மீதேநித முவந்தாரரு ணாடிச்
சாதித்திடு வோர்பானமன் றமர்தாநணு காரே.  ..  1

என்பார்தசை செந்நீர்நரம் பெனவேய்ந்தபொய் யாக்கை
துன்பாலழி முனமேசிவ சுதனான குகேசன்
அன்பாவதை யன்போடெண்ணி யன்பிற்படி யுமவன்
தன்கானினை வோர்பானமன் றமர்தாநணு காரே.   ..  2

பாளைச்சுருண் மீதஞ்சிறை யளிதானளி பருக
வாளைப்பொரு தத்தாரைக ளிலகும்வன மகளார்
தோளைத்தழு வுங்காமாரி லுழல்சேயிரு தூய
தாளைப்புகழ் வோர்பானமன் றமர்நணு காரே.   ..  3

மரணஞ்சன னஞ்சூழ்கவன் மருளேதுமி லாவோர்
புரணந்தனை யுடையாரடை பொருளாவிக ளுள்வாழ்
கரணன்மர கதரூப கலாபச்சிகி யூர்வோன்
சரணந்தொழு வோர்பானமன் றமர்தாநணு காரே.   ..  4

நிதம்வந்தனை புரிவோரக நிகழுங்கிரு பாளு
மதவங்கய முகனாரிள வலெனுங்கும ரேச
பதபங்கய வியன்மான்மிய மொழிசீரிய பாடல்
சததஞ்சொலு வோர்பானமன் றமர்தாநணு காரே.   ..  5

மனைபன்னிய ருஞ்சேயுற வோடேவிரி மண்ணில்
வினைபண்ணியு ழல்வோருளு மிளிர்வேன்முரு §
பினையுன்னடி யார்க்கேகளி பெருகும்படி தொண்டு
தனையேபு¡ரி வோர்பானமன் றமர்தாநணு காரே.  ..  6

பலிக்கப்பரை கொண்டேமறு கூடின்னிசை பாடிப்
புலிப்பொற்புரி யரையாத்தொரு பூவெண்கிரி யுறைவோர்
வலிக்கொப்புறு குகதேவுயர் சாரிதங்களை மனமே
சலிக்கப்படிப் போர்பானமன் றமர்தாநணு காரே. ..  7

அவமாமதி பாவம்பல வயர்ந்தோர்குழு வுள்ளும்
நவமாமணி முடியும்பர்க ணாளுஞ்சலி யாமற்
சிவமேயென நினைகின்றவொர் செவ்வேளடி நேடித்
தவமேபுரி வோர்பானமன் றமர்தாநணு காரே.   ..  8

மதங்கட்டிய மருப்புக்காரி யைப்பாய்முகை மகடூஉ
நிதம்பப்புழை வீழாவொரு நெறிநின்றறு முகவேள்
பதஞ்சிக்கிட விலையேயென பணுவோமென விழிநீர்
ததும்பத்திரி வோர்பானமன் றமர்தாநணு காரே.  ..  9

தேர்ந்தோர்துதி செய்யுந்திருப் புகழ்சொன்னவ னெஞ்சம்
ஓர்ந்தேயருள் புரிந்தோனெனு முமையாள்சுத னடிக்கண்
வார்ந்தோடுநன் மதுநச்சிடு வாரிபோலவ னன்பிற்
சார்ந்தேயிருப் போர்பானமன் றமர்தாநணு காரே.  ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 22ஆம் தேதி சுக்கிரவாரம்