பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
32. வழிபாட்டின் மாட்சி 10
பலன்நிகரற்ற சாயுச்சம் எனும் பூரண நிலையை அடைய வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

வழிபாட்டின் மாட்சி

பாடல் - வழிபாட்டின் மாட்சி

பண் - இந்தளம்
தேவாரப் பாடல் - சடையாய்எனுமால்

காரியுரி போர்த்தவர் காதல னாய
விரிகதிர் வேலுடை யாயுனை வேண்டித்
திரிபவ ருலகினிற் றீதடை வாரோ
பாரிவுடை யின்னருட் பாடடை யாதே.  ..  1

வானத்துய் வோரிறை யோனெனு மாண்பு
ஞானப்பொன் வேலுடை யாயுனை நாடி
யேனிற்கு மேசில ரிழிவடை வாரோ
தேனிற்கு மேலுயர் சேணடை யாதே. ..  2

பொய்யுரை சீத்தருள் புரிகுரு நாதா
தொய்யலில் வேலுடை யாயுனைத் தொழுவோர்
வையமு ளேகடி மடியடை வாரோ
மெய்யதி மேதக வீறடை யாதே. ..  3

செறிசிறு கிங்கிணி சேர்சர ணாதூய்
அறிவுடை வேலுடை யாயுனை வாழ்த்தும்
பொறியுடை யோர்மறு புதையடை வாரோ
வறிதறு வாழ்வினை யேயடை யாதே. ..  4

நுண்ணிடைச் சசிமகள் பதியெனு நுதலார்
கண்ணுடை வேலுடை யாயுனைக் கருதி
மண்ணிடைத் திரிபவர் மருளடை வாரோ
விண்ணிடை நிறுவொரு வீடடை யாதே. ..  5

சகலச ராசர தாரக தேவா
இகலயில் வேலுடை யாயுனை யெண்ணிப்
புகலிலை யென்பவர் புலவடை வாரோ
நிகரறு பூரண நிலையடை யாதே. ..  6

அறைமறை யாறங்க நெறியின ரேத்தும்
பொறையுடை வேலுடை யாயுனைப் போற்றும்
குறையில ரோகையில் குறைவடை வாரோ
நிறைவெனு மின்புறை நிலையடை யாதே. ..  7

துவிதமி லாதவத் துவிதமெய்ஞ் ஞானச்
சவியுடை வேலுடை யாயுனைத் தாழ்ந்து
கவிகுயில் வோர்கலுழ் கறையடை வாரோ
விவிதமி லாவிப வம்மடை யாதே. .. 8

தேட்டமொ டன்றறு வருக்குயர் தேற்ற
நீட்டிய வேலுடை யாயுனை நீங்கா
நாட்டமிக் குடையவர் நலிவடை வாரோ
ஆட டுமுன் னோடிரண் டறவடை யாதே  ..  9

திருப்புகழ் நாவலன் றிருப்புக ழணிக்கு
விருப்புடை வேலுடை யாயுனை மறவாக்
கருத்துளர் பிறிதொரு கருப்புகு வாரோ
உருக்கிய வுடம்புட னுனையடை யாதே. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 23ஆம் தேதி சுக்கிரவாரம் மந்தவாரம்