நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
32. | வழிபாட்டின் மாட்சி | 10 | |
பலன் | நிகரற்ற சாயுச்சம் எனும் பூரண நிலையை அடைய வேண்டுமா?
|
வழிபாட்டின் மாட்சி
பாடல் - வழிபாட்டின் மாட்சி
பண் - இந்தளம்
தேவாரப் பாடல் - சடையாய்எனுமால்
காரியுரி போர்த்தவர் காதல னாய
விரிகதிர் வேலுடை யாயுனை வேண்டித்
திரிபவ ருலகினிற் றீதடை வாரோ
பாரிவுடை யின்னருட் பாடடை யாதே. .. 1
வானத்துய் வோரிறை யோனெனு மாண்பு
ஞானப்பொன் வேலுடை யாயுனை நாடி
யேனிற்கு மேசில ரிழிவடை வாரோ
தேனிற்கு மேலுயர் சேணடை யாதே. .. 2
பொய்யுரை சீத்தருள் புரிகுரு நாதா
தொய்யலில் வேலுடை யாயுனைத் தொழுவோர்
வையமு ளேகடி மடியடை வாரோ
மெய்யதி மேதக வீறடை யாதே. .. 3
செறிசிறு கிங்கிணி சேர்சர ணாதூய்
அறிவுடை வேலுடை யாயுனை வாழ்த்தும்
பொறியுடை யோர்மறு புதையடை வாரோ
வறிதறு வாழ்வினை யேயடை யாதே. .. 4
நுண்ணிடைச் சசிமகள் பதியெனு நுதலார்
கண்ணுடை வேலுடை யாயுனைக் கருதி
மண்ணிடைத் திரிபவர் மருளடை வாரோ
விண்ணிடை நிறுவொரு வீடடை யாதே. .. 5
சகலச ராசர தாரக தேவா
இகலயில் வேலுடை யாயுனை யெண்ணிப்
புகலிலை யென்பவர் புலவடை வாரோ
நிகரறு பூரண நிலையடை யாதே. .. 6
அறைமறை யாறங்க நெறியின ரேத்தும்
பொறையுடை வேலுடை யாயுனைப் போற்றும்
குறையில ரோகையில் குறைவடை வாரோ
நிறைவெனு மின்புறை நிலையடை யாதே. .. 7
துவிதமி லாதவத் துவிதமெய்ஞ் ஞானச்
சவியுடை வேலுடை யாயுனைத் தாழ்ந்து
கவிகுயில் வோர்கலுழ் கறையடை வாரோ
விவிதமி லாவிப வம்மடை யாதே. .. 8
தேட்டமொ டன்றறு வருக்குயர் தேற்ற
நீட்டிய வேலுடை யாயுனை நீங்கா
நாட்டமிக் குடையவர் நலிவடை வாரோ
ஆட டுமுன் னோடிரண் டறவடை யாதே .. 9
திருப்புகழ் நாவலன் றிருப்புக ழணிக்கு
விருப்புடை வேலுடை யாயுனை மறவாக்
கருத்துளர் பிறிதொரு கருப்புகு வாரோ
உருக்கிய வுடம்புட னுனையடை யாதே. .. 10