நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
34. | திருக்கருணைப் பிணக்கம் | 10 | |
பலன் | முருனை இடைவிடாது நெருங்கவும் அவனது திருவடியை பற்ற வேண்டுமா?
|
திருக்கருணைப் பிணக்கம்
பாடல் - திருக்கருணைப் பிணக்கம்
பண் - பழம்பஞ்சுரம்
தேவாரப் பாடல் - ஒற்றுமை சேர்வது
இராகம் - சங்கராபரணம்
தாளம் - ஆத
மண்டலம் விண்டல மேத்த மாதர் மயலே கொளுங்குறத்தி
கொண்ட மணாள ரரும்பொன் வேலர் குறள்கள் பலகோடி
தெண்ட னிடுஞ்சிகி யீசர் நல்கு திருவிற் சிறிதுகொளின்
பிண்ட முடையநம் மோடு சிறிது பிணங்கிக் கொள்வாரே. .. 1
ஆச்சாரி யத்திருக் கூத்தி னாலய னங்காப் பீறுதிரை
ஏச்சி லனுக்கிரக மென்னு மைந்து மிழைக்கு மயூரேசர்
பூச்சர மொய்ம்பவிர் செவ்வே ணல்கு பொறியிற் சிறிதுகொளின்
பேச்சடங் காதநம் மோடு சிறிது பிணங்கிக் கொள்வாரே. .. 2
சீரிய மாதர்க ளொன்று கூடிச் சிலம்பணி தாள்வணங்கிக்
கோரிய மோவுற வாண்டு கொண்ட குமார குருபரனார்
பாரினி லேயருள் கூர்ந்து நல்கு பவுள்சிற் சிறிதுகொளின்
பேரறி வற்றநம் மோடு சிறிது பிணங்கிக் கொள்வாரே. .. 3
காழடி மேலெழிற் றண்டை வீரக் கழல்க ளோலிடமா
மாழைகொள் கேகய மீது சாரி வருங்கு மாரகுரு
ஊழிக லோயவுள் ளுள்ளி யீயு முவப்பிற் சிறிதுகொளின்
பேழறி வற்றநம் மோடு சிறிது பிணங்கிக் கொள்வாரே. .. 4
ஆறிளஞ் சந்திரன் கொக்கி னிறைகொ ளலங்கா ரத்தலையோ
டேறு நடத்திடுஞ் சம்பு மைந்த ரிருஞ்சே வற்கொடியார்
ஈறறு பேரரு ளானல் கமுத வின்பிற் சிறிதுகொளின்
பேறடை யாதநம் மோடு சிறிது பிணங்கிக் கொள்வாரே. .. 5
செத்தவர் சோரிடஞ் சென்றி டாது சிவானந் தம்பெறுவோர்க்
கத்த னருட்டிரு மேனி கொண்டரு ளாறு மாமுகவேள்
சித்த மகிழ்ந்தளிக் கின்ற தெய்வத் திருவிற் சிறிதுகொளின்
பெத்த முடையநம் மோடு சிறிது பிணங்கிக் கொள்வாரே. .. 6
சீதரன் பங்கய னீரைஞ் று திட்டி யன்சசிவீ
சாதவன் மண்மகன் மந்தன் பொன்னு மகிக ளாரிபுகருங்
காதலி னேத்திடு கந்த வேள்செய் களிப்பிற் சிறிதுகொளின்
பேத மறாதநம் மோடு சிறிது பிணங்கிக் கொள்வாரே. .. 7
விரிதிரை வாரிதி சூழ்கி டக்கு நிலத்தில் வேதநெறி
திரிபு படாவகை செய்த யோகர் தினமுந் தொழுதணைந்த
பாரிவுடைச் சண்முக நாதர் நல்கு பவுள்சிற் சிறிதுகொளின்
பெருமை பெறாதநம் மோடு சிறிது பிணங்கிக் கொள்வாரே. .. 8
சாதி குணம்பெயர் குட்டை நெட்டை சனிப்பு நாப்பணந்தம்
ஆதி யவத்தையி லாம லுள்ள வகண்ட குமாரேசர்
போத மகிழ்ந்தளிக் கின்ற தெய்வப் பொறியிற் சிறிதுகொளின்
பீதி விடாதநம் மோடு சிறிது பிணங்கிக் கொள்வாரே. .. 9
மறந்தாரிப் புற்றுளிர் தேடி நாடி மருவி யிப்புவியில்
இறந்துதிக் கின்றதை நீத்தி ருமினென் றேசில் புகழ்பாடிச்
சிறந்தவன் றம்பிரா னான கந்தர் திருவிற் சிறிதுகொளின்
பிறந்தலுத் திட்டநம் மோடு சிறிது பிணங்கிக் கொள்வாரே. .. 10