பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
36. மெய்ப்போதகம் 10
பலன்குறைவற்ற வாழ்வு பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

மெய்ப்போதகம்

பாடல் - மெய்ப்போதகம் (நாகரஅவேதுகைக்களை விருத்தம்) திருவிராகம்

பண் - வியாழக்குறிஞ்சி
தேவாரப் பாடல் - பிடியதனுருவுமை / அவ்வினைக்கிவ்வினை
இராகம் - சக்கரவாகம் / செளரா‰டிரம்
தாளம்

ஆனையி னதளாரி யதள்வாரி யதளெலும்
பேன வெயிறுகம டமயிலை யினயனம்
மானணி பசுபதி மகன்மயில் வருபெரு
மானடி களைநினை மலைவிலை மனனே. ..  1

வானவ ரதநிலை யரசல மனுடரும்
ஈன வுயிருமவ னிணையடி யுறவரு
டானரு ளுயர்சர வணபவ னெனுமொரு
கோனடி களைநினை குறைவிலை மனனே. ..  2

ஊனமி லறிவுள ருளநடு வழிபடு
மீனுறழ் ஞெகிழிகண் மிலைமல ரிணையடி
யானெழில் வயவாரி யடிமுனி பணிகுகன்
ஓனட வடிநினை யுலைவிலை மனனே. ..  3

வானவர் தொழுதிடு மகிமையை யுளபெரு
மானிவ னெனநனி மருவமு னெணியவொர்
கானவர் மகளது களிநுகர் வுறவெதிர்
போனவ னடிநினை புகாரிலை மனனே. ..  4

மானமி லரனடி மலர்களை யெணிவெளி
யானவ ரஞருழி யபயமி டுசமயம்
ஏனென வருமரு ளெழின்மழ மயிலிவர்
கோனடி நினையொரு குறையிலை மனனே.  ..  5

ஊனுக ருணர்வில ருறவற வொழியுயர்
தேனுக ருணர்வுளர் திருமலி யுளமெனும்
வானுழி யவிரருண் மணியெனு மயிலிறை
ஆனகை யடிநினை யலலிலை மனனே. ..  6

கூனில வனநுதன் மடவரல் குலமணி
ஏனமி லிறையவ ரிடமுறை யுமையவள்
சூனுவெ னுமமுத சுகமுத வொருகுரு
கானடி களைநினை கறையிலை மனனே. ..  7

ஆனுகொல் கலுடமொ ரளவற வுளவனும்
ஞானநெ டியவயி னணுகுகை யிறையடி
யேனுமு னபயமெ னினஙன மடிமைகொள்
வானவ னடிநினை மமாரிலை மனனே.  ..  8

நானென தெனுமக நலிவுற வனுதினம்
மேனிலை கருதியுய் வியன்றி வுடையருள்
ஞானிக ளகநடு நடமிடு மொருபக
வானவ னடிநினை வழுவிலை மனனே. ..  9

மோனர்கள் புகழருண் மொழியரு ணகி¡ரியன்
வானவ ரினுமதி யமுத மதியையுற
ஏனமி லருளரு ளினகுக னெனுமபி
தான னடிகணினை தளையிலை மனனே. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 28ஆம் தேதி குருவாரம்