நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
36. | மெய்ப்போதகம் | 10 | |
பலன் | குறைவற்ற வாழ்வு பெற வேண்டுமா?
|
மெய்ப்போதகம்
பாடல் - மெய்ப்போதகம் (நாகரஅவேதுகைக்களை விருத்தம்) திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
தேவாரப் பாடல் - பிடியதனுருவுமை / அவ்வினைக்கிவ்வினை
இராகம் - சக்கரவாகம் / செளராடிரம்
தாளம்
ஆனையி னதளாரி யதள்வாரி யதளெலும்
பேன வெயிறுகம டமயிலை யினயனம்
மானணி பசுபதி மகன்மயில் வருபெரு
மானடி களைநினை மலைவிலை மனனே. .. 1
வானவ ரதநிலை யரசல மனுடரும்
ஈன வுயிருமவ னிணையடி யுறவரு
டானரு ளுயர்சர வணபவ னெனுமொரு
கோனடி களைநினை குறைவிலை மனனே. .. 2
ஊனமி லறிவுள ருளநடு வழிபடு
மீனுறழ் ஞெகிழிகண் மிலைமல ரிணையடி
யானெழில் வயவாரி யடிமுனி பணிகுகன்
ஓனட வடிநினை யுலைவிலை மனனே. .. 3
வானவர் தொழுதிடு மகிமையை யுளபெரு
மானிவ னெனநனி மருவமு னெணியவொர்
கானவர் மகளது களிநுகர் வுறவெதிர்
போனவ னடிநினை புகாரிலை மனனே. .. 4
மானமி லரனடி மலர்களை யெணிவெளி
யானவ ரஞருழி யபயமி டுசமயம்
ஏனென வருமரு ளெழின்மழ மயிலிவர்
கோனடி நினையொரு குறையிலை மனனே. .. 5
ஊனுக ருணர்வில ருறவற வொழியுயர்
தேனுக ருணர்வுளர் திருமலி யுளமெனும்
வானுழி யவிரருண் மணியெனு மயிலிறை
ஆனகை யடிநினை யலலிலை மனனே. .. 6
கூனில வனநுதன் மடவரல் குலமணி
ஏனமி லிறையவ ரிடமுறை யுமையவள்
சூனுவெ னுமமுத சுகமுத வொருகுரு
கானடி களைநினை கறையிலை மனனே. .. 7
ஆனுகொல் கலுடமொ ரளவற வுளவனும்
ஞானநெ டியவயி னணுகுகை யிறையடி
யேனுமு னபயமெ னினஙன மடிமைகொள்
வானவ னடிநினை மமாரிலை மனனே. .. 8
நானென தெனுமக நலிவுற வனுதினம்
மேனிலை கருதியுய் வியன்றி வுடையருள்
ஞானிக ளகநடு நடமிடு மொருபக
வானவ னடிநினை வழுவிலை மனனே. .. 9
மோனர்கள் புகழருண் மொழியரு ணகி¡ரியன்
வானவ ரினுமதி யமுத மதியையுற
ஏனமி லருளரு ளினகுக னெனுமபி
தான னடிகணினை தளையிலை மனனே. .. 10