பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
37. திருவாலவாய் 10
பலன்மூவாசையும் நீங்கி பக்குவம் அடைய வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருவாலவாய்

பாடல் - திருவாலவாய் (அருனை விசிந்திரங்கள்)

பண் - கெளசிகம்
தேவாரப் பாடல் - காதலாகி கசிந்து
இராகம் - பைரவி
தாளம் - ஆதி

பொன்னைப் பூமியைப் புன்புல வாக்கையை
மின்னை நாடி யுழன்றுள்ள வீணனேன்
தன்னை யாண்டவொர் தன்மையென் னாலவாய்
அன்னை யேயரு ளேகுகப் பிரமமே. ..  1

கட்டு மாடை கழற்றினை கந்தனை
மொட்டை யிட்டனை மோக மறுத்தனை
எட்டி நீமறைந் திட்டதென் னாலவாய்ச்
செட்டி யேயருள் செய்குகப் பிரமமே.  ..  2

புண்ணி யந்தொரி யாவெறும் பொக்கனேன்
எண்ண மோர் ந்தரு ளெந்தையிங் கேயுனை
நண்ணி னேன்சுக நல்கருட் காலவாய்
அண்ண லேயெனை யாள்குகப் பிரமமே. ..  3

ஆக மோடென தாவியு முன்றனக்
கேகொ டுத்துய்ய வெண்ணிய வென்னகத்
தேகு ளிர்ந்தரு ளீயெழி லாலவாய்
ஏக னேயெனை யாள்குகப் பிரமமே. ..  4

எட்ட நில்லென நீயென்னை யேதள்
சிட்ட னானபின் ஞாயஞ் செலுங்கொலோ
நட்ட மின்றரு ணல்குதி யாலவாய்
இட்ட னேயெனை யாள்குகப் பிரமமே. ..  5

பருதி முன்னிரு ணிற்குங்கொல் பக்கமாம்
அருளின் முன்மல நிற்குங்கொ லவ்வருட்
பொருளைத் தந்தொரு பூர்த்திசெய் யாலவாய்ப்
பெருமை யேயெனை யாள்குகப் பிரமமே. ..  6

நித்த லுங்கழ னெஞ்சக மாக்கியால்
எத்த லத்துமு னேணருள் காத்திடச்
சித்தம் வைத்தருள் சீருய ராலவாய்
அத்த னேயெனை யாள்குகப் பிரமமே.  ..  7

பாச மும்பசு வுந்திறம் பாவொளி
வீசு நின்னரு ளின்றிவி ளங்குமோ
ஆசை யாயின னேயதற் காலவாய்
ஈச னேயெனை யாள்குகப் பிரமமே. ..  8

என்ன கப்புல மென்று மிருக்குநீ
என்னை யின்னுமி ரண்டறக் கோடலின்
றன்னி யஞ்செய னீதிகொ லாலவாய்
மன்னெ னத்திகழ் மாகுகப் பிரமமே.  ..  9

குற்றம் யாவும்பொ றுத்தருள் கூர்தியால்
அற்ற மற்றலங் காரம திர்த்துளோன்
முற்றும் வாழ்த்திய மூர்த்திநல் லாலவாய்
உற்ற வொப்பில ருட்குகப் பிரமமே. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895) ஆவணி மாதம் 2ஆம் தேதி புதவாரம்