நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
38. | திருக்கன்னிநாடு | 10 | |
பலன் | உறுதியான மனம், உறுதியான வழிபாடு பெற வணங்கும் வழி தெரிய வேண்டுமா?
|
திருக்கன்னிநாடு
பாடல் - திருக்கன்னிநாடு (களிநிளைத்துரை)
பண் - இந்தளம்
தேவாரப்பண் - பித்தாபிறைசூடி
இராகம் - நாதநாமக்ரியா
தாளம் - ரூபகம்
சீருளா ரேத்துஞ் சீருடை நஞ்சிவ பெருமான்
கூருலாம் வேற்கை யோடன வரதமுங் குறைவில்
பாரெலா மேத்துங் கன்னிநா டுறைதரு பாங்கை
ஓரெலா வார்ப்பு மொருங்கியுய் வாயென துளமே. .. 1
வாக்குவன் மனதான் மதிக்கரு நஞ்சிவ பெருமான்
நோக்கொரு பனிரண் டிலகொரு நூனமி லுருவாய்ப்
பாக்குகு பொழிலார் கன்னிநா டுறைதரு பாங்கை
ஊக்கமொ டுணாரின் வாழ்குவை நாளுமெ னுளமே. .. 2
ஞானிகள் விழையொண் பொருளெனு நஞ்சிவ பெருமான்
மேனிலை விழைவோர்க் கருளவெ னாமயின் மீது
பானிற வனம்வாழ் கன்னிநா டுறைதரு பாங்கை
நீநினை வாயே னிதநனி யுங்குவை நெஞ்சே. .. 3
நந்தலின் மறைகள் பழிச்சிடு நஞ்சிவ பெருமான்
செந்திரு முகமா றவிரரு ளுருவொடு தீமைப்
பந்தரைப் புரப்பான் கன்னிநா டுறைதரு பாங்கைச்
சிந்தைசெய் வாயேன் மனமினி துய்வது திடமே. .. 4
மாதவ னளித்த மதிப்பொரு ணஞ்சிவ பெருமான்
ஏதமி லடியர்க் கருளவெ னாமுரு கெனமா
பாதகந் தீர்த்த கன்னிநா டுறைதரு பாங்கை
நீதொரி வாயேன் மருடபுத் துய்குவை நெஞ்சே. .. 5
எக்குணங் குறியு மிலாமுத னஞ்சிவ பெருமான்
பக்குவர்க் கருளும் பாரிவொடு தேவிய ருபய
பக்கமும் விளங்கக் கன்னிநா டுறைதரு பாங்கைச்
சிக்குடை நெஞ்சே கருதிடிற் சார்வது சிவமே. .. 6
பூவினில் வெறிபோற் பொருந்திய நஞ்சிவ பெருமான்
கோவிலி னிலவோர் வடிவொடு குகப்பெயர் பூண்டு
பாவிகள் பழிதீர் கன்னிநா டுறைதரு பாங்கைத்
தாவிளை நெஞ்சே கருதிடி னிலைநமன் றமரே. .. 7
எங்கணு நிறைவா யிருந்துள நஞ்சிவ பெருமான்
சங்கரன் மகவாய்ச் சரவண பவப்பெயர் சார்ந்து
பங்கமி னதிபாய் கன்னிநா டுறைதரு பாங்கை
இங்குழ னெஞ்சே நினைவுறின் மறலுனக் கிலையே. .. 8
அழிவுதிப் பணவா வறிவெனு நஞ்சிவ பெருமான்
இழிமனச் சீவர்க் கருள்வண மயின்மிசை யிந்த்ரன்
பழிதனை நூறுங் கன்னிநா டுறைதரு பாங்கை
எழிலொடு நெஞ்சே நினைவுறின் வருபிறப் பிறுமே. .. 9
தத்துவா தீதத் தனிப்பொரு ணஞ்சிவ பெருமான்
வித்தைசால் புகழ்பா டியமுனி பாத்தொடை விரும்பிப்
பத்தர்பா டிடவே கன்னிநா டுறைதரு பாங்கைச்
சித்தமே நீயுள் கிடிலடை வதுவிழுச் சிவமே. .. 10