நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
39. | திருகொடுமளூர் | 10 | |
பலன் | திருத்தல தரிசனம் பெற வேண்டுமா? (இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கழுதி வழித் தடத்தில் உள்ளது)
|
திருகொடுமளூர்
பாடல் - திருகொடுமளூர் (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பண் - சாதாரி
தேவாரப்பண் - வானவர்கள் தானவர்கள்
இராகம் - பந்துவராளி
தாளம் - கண்டசாபு
சிந்துசுல விந்தநிலை தன்னிலும தன்புடையார்
சேவடி புகழ்ந்துதொழவோ
நுந்திரு விரும்புபாரி பக்குவர்கண் மும்மலமு
நூறியருள் செய்யவெனவோ
அந்தமடி யற்றபர மங்கள வகண்டசிவ
மாகவுள நீர்கழனிசூழ்
சுந்தர மலிந்துயர் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. .. 1
சத்திய மதர்ப்பதர் நடத்துகிரி யைக்குரிய
சத்தியென நூல்கணுவலும்
புத்தமுத வாய்மையுடை வள்ளிதொழி லெண்ணிநினை
புந்தியர்க ளுக்கருளநீர்
இத்தரைய ரென்கொழுந ரென்றறிய நின்றிடு
மெனச்சொலுரை கொண்டபடியோ
சுத்தமுறு பத்தருய் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. .. 2
வானவரு நாடாரிய ஞானமய மானபெரு
வானென விருக்குமொருநீர்
ஏனலி லிருந்தமட மானினி நலங்கருதி
யேசறு புளிந்தவடிவம்
ஆனவ னறும்புரிவி னானினைவர் நோய்களை
யறுப்பவ னிமாசலசுதை
சூனுவென வோதவொ திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே . .. 3
பூர்த்திபுக லுங்கருணை யங்கட லெனத்தவர்
புகன்றிட விருக்குனொருநீர்
பார்த்திப னருந்தவ நிரம்பிட வுரப்புடைய
பன்றிதொடர் வுற்றபொரிய
மூர்த்திமக னாமிவர் நினைப்பவர்கள் வாழ்வரென
மூவுலகு நன்கறியவோ
தூர்த்தர்க ளிலாவொரு திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. .. 4
வானிலவு பானுவென வேயுயிர் ளுள்ளிட
மதிக்குமுத லாகுமுணர்வா
யேநிலவு கின்றவொரு நீர்தமிய னுக்குநிக
ரேழைகள் புரக்கவெனவோ
மீனிலவு கண்ணிமலை மாமக டனக்கினிய
மெய்க்குழவி யாகிவிளைவுச்
சூனிய மிலாதுயர் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. .. 5
இப்புடவி யிப்பிறவி வேண்டுகில மென்றுமுள
வீசவுனை யேயடைகுவோம்
எப்படியு மென்றுபணி யுத்தம ரகத்திடை
யெழுந்துலக கானமுலவும்
ஒப்பறு மகந்தைமுத லாமறவர் வெல்லவென
வோதனிமை வாளுழவர்போல்
துப்புடைய கார்மலி திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. .. 6
மாலயனும் வந்தனைசெ யற்புத விலாசபர
மாகவொளிர் கின்றவொருநீர்
மூலமல வாவிகளி னீலமல வாதனை
முருக்கிநினை வுந்திருடுமோர்
சாலமுல கோரவென வோநிமல மானசிவ
சண்முக மறைத்துநெடிய
தூலவுடை நீழலொர் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. .. 7
விற்றிற மியங்கிரவி யுஞ்சசியு மங்கியும்
விளக்குமறி வித்தி டவொணா
முற்றறி வொனாமறை முழக்கவுள நீருயிர்கண்
மொய்வினை முருக்கியருள்வான்
உற்றவுரு வம்பல வுளும்மிதுவு மொன்றென
வுணர்த்தவென வோநிலவளந்
துற்றுமெழின் மிக்குறு திருக்கொடும ளூர்நன
துலங்குகிறி ரெம்மிறைவரே. .. 8
ஓருருவு மீருருவு மூவுருவும் வேறுருவு
மோய்வில்பல தேவருருவும்
பாருருவு நீருருவு மாரல்வளி வானுமறை
பன்னிட விருக்குமெவையும்
பேருருவில் வைத்துளவொர் நீருல குயிர்த்திரள்
பிடிக்கவென வோவுடைமரத்
தூரடியி லேருயர் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. .. 9
sசொன்னய மிகுந்தகலை வேண்டுகில மேகலைகொள்
சுந்தாரிக ளாசையுலகம்
பொன்னழி புலைப்புணர்வு வேண்டுகில மெய்யடி
பொருந்தவரு ளென்பவர்களின்
நன்னினை வறிந்தருள வோபுனித சோணகிரி
நாதர்குரு வாயவொருநீர்
தொன்னில வளங்கிளர் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. .. 10