பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
39. திருகொடுமளூர் 10
பலன்திருத்தல தரிசனம் பெற வேண்டுமா? (இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கழுதி வழித் தடத்தில் உள்ளது)
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருகொடுமளூர்

பாடல் - திருகொடுமளூர் (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பண் - சாதாரி
தேவாரப்பண் - வானவர்கள் தானவர்கள்
இராகம் - பந்துவராளி
தாளம் - கண்டசாபு

சிந்துசுல விந்தநிலை தன்னிலும தன்புடையார்
சேவடி புகழ்ந்துதொழவோ
நுந்திரு விரும்புபாரி பக்குவர்கண் மும்மலமு
நூறியருள் செய்யவெனவோ
அந்தமடி யற்றபர மங்கள வகண்டசிவ
மாகவுள நீர்கழனிசூழ்
சுந்தர மலிந்துயர் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே.  ..  1

சத்திய மதர்ப்பதர் நடத்துகிரி யைக்குரிய
சத்தியென நூல்கணுவலும்
புத்தமுத வாய்மையுடை வள்ளிதொழி லெண்ணிநினை
புந்தியர்க ளுக்கருளநீர்
இத்தரைய ரென்கொழுந ரென்றறிய நின்றிடு
மெனச்சொலுரை கொண்டபடியோ
சுத்தமுறு பத்தருய் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. .. 2

வானவரு நாடாரிய ஞானமய மானபெரு
வானென விருக்குமொருநீர்
ஏனலி லிருந்தமட மானினி நலங்கருதி
யேசறு புளிந்தவடிவம்
ஆனவ னறும்புரிவி னானினைவர் நோய்களை
யறுப்பவ னிமாசலசுதை
சூனுவென வோதவொ திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே . ..  3

பூர்த்திபுக லுங்கருணை யங்கட லெனத்தவர்
புகன்றிட விருக்குனொருநீர்
பார்த்திப னருந்தவ நிரம்பிட வுரப்புடைய
பன்றிதொடர் வுற்றபொரிய
மூர்த்திமக னாமிவர் நினைப்பவர்கள் வாழ்வரென
மூவுலகு நன்கறியவோ
தூர்த்தர்க ளிலாவொரு திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே.  ..  4

வானிலவு பானுவென வேயுயிர் ளுள்ளிட
மதிக்குமுத லாகுமுணர்வா
யேநிலவு கின்றவொரு நீர்தமிய னுக்குநிக
ரேழைகள் புரக்கவெனவோ
மீனிலவு கண்ணிமலை மாமக டனக்கினிய
மெய்க்குழவி யாகிவிளைவுச்
சூனிய மிலாதுயர் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே.  ..  5

இப்புடவி யிப்பிறவி வேண்டுகில மென்றுமுள
வீசவுனை யேயடைகுவோம்
எப்படியு மென்றுபணி யுத்தம ரகத்திடை
யெழுந்துலக கானமுலவும்
ஒப்பறு மகந்தைமுத லாமறவர் வெல்லவென
வோதனிமை வாளுழவர்போல்
துப்புடைய கார்மலி திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. ..  6

மாலயனும் வந்தனைசெ யற்புத விலாசபர
மாகவொளிர் கின்றவொருநீர்
மூலமல வாவிகளி னீலமல வாதனை
முருக்கிநினை வுந்திருடுமோர்
சாலமுல கோரவென வோநிமல மானசிவ
சண்முக மறைத்துநெடிய
தூலவுடை நீழலொர் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. ..  7

விற்றிற மியங்கிரவி யுஞ்சசியு மங்கியும்
விளக்குமறி வித்தி டவொணா
முற்றறி வொனாமறை முழக்கவுள நீருயிர்கண்
மொய்வினை முருக்கியருள்வான்
உற்றவுரு வம்பல வுளும்மிதுவு மொன்றென
வுணர்த்தவென வோநிலவளந்
துற்றுமெழின் மிக்குறு திருக்கொடும ளூர்நன
துலங்குகிறி ரெம்மிறைவரே. ..  8

ஓருருவு மீருருவு மூவுருவும் வேறுருவு
மோய்வில்பல தேவருருவும்
பாருருவு நீருருவு மாரல்வளி வானுமறை
பன்னிட விருக்குமெவையும்
பேருருவில் வைத்துளவொர் நீருல குயிர்த்திரள்
பிடிக்கவென வோவுடைமரத்
தூரடியி லேருயர் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே.  ..  9

sசொன்னய மிகுந்தகலை வேண்டுகில மேகலைகொள்
சுந்தாரிக ளாசையுலகம்
பொன்னழி புலைப்புணர்வு வேண்டுகில மெய்யடி
பொருந்தவரு ளென்பவர்களின்
நன்னினை வறிந்தருள வோபுனித சோணகிரி
நாதர்குரு வாயவொருநீர்
தொன்னில வளங்கிளர் திருக்கொடும ளூர்நனி
துலங்குகிறி ரெம்மிறைவரே. ..  10

கலியுகம் 4997 மன்மத (கி.பி.1895)புரட்டாசி மாதம் 16ஆம் தேதி மங்களவாரம்