பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம்

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
3. அருண்மாட்சிமை 10
பலன்முருகனின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

அருண்மாட்சிமை

பாடல் - அருண்மாட்சிமை

பண் - நட்டராகம்
தேவாரப் பாடல் - பொன்னார் மேனியனே
இராகம் - பந்துவராளி
தாளம் - ரூபகம்

ஆரொண் கங்கைபுனை யர னாருடை வான்பொருளே
ஊரும் பொன்மயிலில் வந் தொளிர்சிவ ரத்தினமே
தேருந் தொன்மறையின் பொருள் சேரருண் முத்தேநின்
காருண் யம்மிலையேற் கணப் போதினி யுய்யேனே ..  1

விண்ணா டுய்பவர்கள் விரை வெண்மல ராற்புசிதம்
பண்ணா நின்றவுன்றன் றிருப் பாதம் வழிபடுவோர்
நண்ணார் சன்மவுவ ரயி னாயக னேயுனருட்
கண்ணோக் கில்லையெனிற் கணப் போதினி யுய்யேனே ..  2

விண்ணோர் தம்பதியே மிளிர் விண்மணி யின்மணியே
அண்ணா வென்னுயிரே யறு மாமுக ரத்தினமே
பண்ணார் பொக்கி„மே யெங்கள் பாக்கிய வைப்பேநின்
தண்ணீ ரம்மிலையேற் சணப் போதினி யுய்யேனே ..  3

பூக்கும் வெண்பொடிதான் மிகப் பொலிசெம் மேனியனே
தூக்கங் குண்டலங்க டுணி துதைய வெண்டிசையும்
தேக்கச் சாரிவருஞ் சிகித் தேருடை யண்ணாவுன்
நோக்கொன் றில்லையெனி னொடிப் போதினி யுய்யேனே ..  4

மின்னார் வேற்படையாய் விரை வீசுநற் றண்கதம்பா
பொன்னேர் கொள்சிலம்பா புரி மூன்றுடைப் பொன்மார்பா
மன்னார் தெய்வானை வள்ளி மாணிக்க மேயுனருள்
இன்னே யில்லையெனி னிமைப் போதினி யுய்யேனே ..  5

நல்லார் போற்றுசிதஞ் செறி நாவி லெழும்பொருளே
பொல்லா நித்திலமே புரை போகா ரத்தினமே
கல்லா வெற்கருள வந்த கண்மணி யேயுனருள்
இல்லா தேயொழியி னிமைப் போதினி யுய்யேனே ..  6

ஐயங் கோள்கடியப் பன்னு மாரண வாரியனே
தெய்வங் கட்கரிய வொரு தெய்வமே சின்மயமே
பையார் கோபதியே பர பாவகி யேயருணீ
செய்யா யேலிங்கியான் றினைப் போதினி யுய்யேனே ..  7

பொய்யா வாழ்வுடையாய் புர மூன்றெரித் தோர்புதல்வா
ஐயார் தென்பொதியப் பதி யமர்மு னிக்கினிய
மெய்யா பொன்பழநித் துரை வேலா வெற்கினருள்
செய்யா யேலிங்கியான் றினைப் போதினி யுய்யேனே ..  8

இன்பார் சாகரமே யென தின்ப மனோரதமே
பொன்பூ மேனியனே பரி பூரண வானவனே
என்பூ சைச்சிவனே வெயிலேறயிற் கையாவுன்
அன்பே யில்லையெனி னணுப் போதினி யுய்யேனே ..  9

வாளா ரியெழில் வளர் வள்ளி மனோகரமே
நீளா திக்கமெனுஞ் சிவ நேசகிர் பாகரமே
கோளீ னங்குறுகாப் புகழ் கூறின வன்பரனே
ஆளா தேபோனா லணுப் போதினி யுய்யேனே ..  10

கலியுகம் 4995 நந்தன (கி.பி.1893) மாசி மாதம் 26ஆம் தேதி புதவாரம்