நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம்
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
3. | அருண்மாட்சிமை | 10 | |
பலன் | முருகனின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டுமா?
|
அருண்மாட்சிமை
பாடல் - அருண்மாட்சிமை
பண் - நட்டராகம்
தேவாரப் பாடல் - பொன்னார் மேனியனே
இராகம் - பந்துவராளி
தாளம் - ரூபகம்
ஆரொண் கங்கைபுனை யர னாருடை வான்பொருளே
ஊரும் பொன்மயிலில் வந் தொளிர்சிவ ரத்தினமே
தேருந் தொன்மறையின் பொருள் சேரருண் முத்தேநின்
காருண் யம்மிலையேற் கணப் போதினி யுய்யேனே .. 1
விண்ணா டுய்பவர்கள் விரை வெண்மல ராற்புசிதம்
பண்ணா நின்றவுன்றன் றிருப் பாதம் வழிபடுவோர்
நண்ணார் சன்மவுவ ரயி னாயக னேயுனருட்
கண்ணோக் கில்லையெனிற் கணப் போதினி யுய்யேனே .. 2
விண்ணோர் தம்பதியே மிளிர் விண்மணி யின்மணியே
அண்ணா வென்னுயிரே யறு மாமுக ரத்தினமே
பண்ணார் பொக்கிமே யெங்கள் பாக்கிய வைப்பேநின்
தண்ணீ ரம்மிலையேற் சணப் போதினி யுய்யேனே .. 3
பூக்கும் வெண்பொடிதான் மிகப் பொலிசெம் மேனியனே
தூக்கங் குண்டலங்க டுணி துதைய வெண்டிசையும்
தேக்கச் சாரிவருஞ் சிகித் தேருடை யண்ணாவுன்
நோக்கொன் றில்லையெனி னொடிப் போதினி யுய்யேனே .. 4
மின்னார் வேற்படையாய் விரை வீசுநற் றண்கதம்பா
பொன்னேர் கொள்சிலம்பா புரி மூன்றுடைப் பொன்மார்பா
மன்னார் தெய்வானை வள்ளி மாணிக்க மேயுனருள்
இன்னே யில்லையெனி னிமைப் போதினி யுய்யேனே .. 5
நல்லார் போற்றுசிதஞ் செறி நாவி லெழும்பொருளே
பொல்லா நித்திலமே புரை போகா ரத்தினமே
கல்லா வெற்கருள வந்த கண்மணி யேயுனருள்
இல்லா தேயொழியி னிமைப் போதினி யுய்யேனே .. 6
ஐயங் கோள்கடியப் பன்னு மாரண வாரியனே
தெய்வங் கட்கரிய வொரு தெய்வமே சின்மயமே
பையார் கோபதியே பர பாவகி யேயருணீ
செய்யா யேலிங்கியான் றினைப் போதினி யுய்யேனே .. 7
பொய்யா வாழ்வுடையாய் புர மூன்றெரித் தோர்புதல்வா
ஐயார் தென்பொதியப் பதி யமர்மு னிக்கினிய
மெய்யா பொன்பழநித் துரை வேலா வெற்கினருள்
செய்யா யேலிங்கியான் றினைப் போதினி யுய்யேனே .. 8
இன்பார் சாகரமே யென தின்ப மனோரதமே
பொன்பூ மேனியனே பரி பூரண வானவனே
என்பூ சைச்சிவனே வெயிலேறயிற் கையாவுன்
அன்பே யில்லையெனி னணுப் போதினி யுய்யேனே .. 9
வாளா ரியெழில் வளர் வள்ளி மனோகரமே
நீளா திக்கமெனுஞ் சிவ நேசகிர் பாகரமே
கோளீ னங்குறுகாப் புகழ் கூறின வன்பரனே
ஆளா தேபோனா லணுப் போதினி யுய்யேனே .. 10