நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
40. | திருப்போற்றி | 10 | |
பலன் | அறிவுக் கூர்மை பெற வேண்டுமா?
|
திருப்போற்றி
பாடல் - திருப்போற்றி (திருத்தாண்டகம்)
இராகம் - ரிகாம்போதி
அவனிதனி லன்னைகர்ப்ப மமைந்த வன்றே
யருநலமுந் தீமையுமுண் டென்று மான்மா
நவமாகச் செயப்பட்ட தாலே முன்போர்
ஞான்றுமது விருந்ததிலை யென்றுஞ் சீவன்
புவியின்மிசை மாரித்தபினு மிருக்கு மென்றும்
பூருவமு மியைபுமின்றிப் புலம்பு மார்க்கம்
அவமெனவே யென்னறிவி லுணர்த்தி யந்த
வறிவாக நிற்குமரு ளரசே போற்றி. .. 1
அதிர்த்தபடி நலந்தீதோ டமைந்த வான்மா
வயர்பாவ வினைக்குநர கெய்து மென்றும்
விதித்தவனி யாயவழி தனிலே செல்லும்
வியனுணர்வி லார்பின்னுந் தாதை யன்னை
மதத்துவலி கொடுசெய்த வினைக்கே பிள்ளை
மடமாக வந்ததென்று வழுத்தும் வார்த்தை
முதற்சிருட்டி யோடுலகை முடிக்கு மென்றே
முழுஞாய மெற்குணர்த்து முதலே போற்றி. .. 2
தாதையன்னை யிழைத்திட்ட தீமைக் காகச்
சந்ததிதான் கெட்டதெனிற் றாதை தாய்க்கும்
ஓதலினச் சந்ததிக்கு முடம்பு நெஞ்ச
மொன்றாக விருக்கினவர் சுகதுக் கங்கள்
பேதமின்றித் தோன்றிடும்வே றெனினோ விந்தப்
பேச்சிறையு மொவ்வாதென் றெனதுள் ளூகப்
போதமதி லுணர்த்தியநல் லருளே நீதிப்
பூரணமே யானந்தப் பொருளே போற்றி. .. 3
மக்களையே யன்னைதந்தை வஞ்சித் தாலு
மகத்தான வவரையவர் வஞ்சித் தாலும்
தக்கபடி யரையருமே தண்டிப் பார்க
டகையுடைய புத்தேளு மதுபோற் செய்யும்
அக்கமுள ரறநூலு மிதுபோ லோது
மாக்கைநடு வுள்ளவுயி ரறிநீர் மைத்தாற்
பொக்கமுறு சடமன்று சித்தே யென்றென்
புந்தியினன் னூலுணர்வைத் தந்தோய் போற்றி. .. 4
நித்தியமா யுளவான்மா வைச்ச டம்போ
னிருமித்த தாய்நிகழ்த்து மனீத மார்க்கம்
செத்தவரை யுலகமுடி வினில்வி சாரஞ்
செய்தவதாய்ப் பிதற்றுவது பிசகே யென்ன
இத்தரையி லிஞ்ஞான்று செய்த தீங்கிற்
கிசையநடு வரசர்புரி தண்டத் தோடு
கத்தனுயர் தண்டமெனும் பிணியுள் வாதை
காண்பதுமுண் டெனவுணர்த்துங் கருத்தே போற்றி. .. 5
என்றுமுள்ள கடவுளுடை நீதி யென்று
மியங்குவதல் லாதிடையி லிறுவ தில்லை
தொன்றுவினைப் பிராரத்த மனுப விக்கத்
தோன்றுகன்ம வுயிர்புதிது மிழைத்துத் தூலம்
பொன்றியதன் பின்கடவு ணீதிக் குள்ளாய்ப்
புதிதிலெஞ்சி யுளகரும மனுப வித்துப்
பின்றூலஞ் சஞ்சிதத்தா லெடுக்கு மென்றே
பேசுநிச நூலுணர்வெற் களித்தோய் போற்றி. .. 6
சொற்றவுரை தனைநம்பிச் சாவி ரேனீர்
சுவர்க்கநிலை யடைகுவீ ரென்னு மார்க்கம்
உற்றவரு மதிசயிக்க வருளிற் கூடி
யுள்ளுக்குண் மறைந்திருக்கு முயிரைக் கொண்டு
செற்றமிலா வாதார விறையைக் கண்டு
செனிப்புடனே யிறப்பறுத்துத் திகழு மார்க்கம்
குற்றமிலா நெறியெனவெற் குணர்த்து ஞானக்
குருந்தேயென் னுயிர்க்குயிராங் குகனே போற்றி; .. 7
மோக்கமெனல் வெறுஞ்சூன்ய மதனை வேண்டி
முயலுவதி லென்பயனிவ் வுடம்போ டென்றும்
போக்கியத்திற் காம்புவனந் தனிலே யுய்தல்
புரைதணந்த வின்பமெனப் புகல்வோர் போக்குத்
தேக்கெறியுங் கலவியின்ப மறியாக் கன்னி
தீழ்ப்பாக வதைப்பேசு தரம்போ லாமென்
றாக்கமலி யறிவாள ருரைக்கு ஞாய
மதையெனக்கு முணர்த்தியவென் னரனே போற்றி. .. 8
கருவிசில வடங்கியநித் திரையின் கண்ணே
காணுமொரு சுகம்போலக் கரணா தீதம்
மருவுசிவ யோகதிலுந் திரீசை யோக
மல்குமொரு சுகம்போலச் சீவ போதம்
அருவினுயர் சிவபோதத் தடங்கி நிற்கு
மைக்கியத்து மெனவெணலா மவைக ளற்பம்
பொருவில்சிவ யோகவின்பு மோக்க வின்பும்
புகலாரிதா மென்றுணர விதித்தோய் போற்றி. .. 9
எரிந்தபுரி யைப்போல வுடம்பி ருந்து
மில்லாத வோங்கார சீவன் முத்தன்
பாரிந்தவனு பவமதுதா னறையி னுள்ளே
பயில்கூத்தை யொக்குமந்த வுடம்பு நீங்கி
அரந்தையடு சிவத்தையடை விதேக முத்த
னனுபவமம் பலக்கூத்தை யொக்கு மென்றுள்
இருந்தறிவித் திட்டவரு ளறிவே சந்த
மியம்பியநல் லருணகிரி யிறையே போற்றி. .. 10