நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
46. | அருளானந்த லகரி | 10 | |
பலன் | 16 வகை செல்வங்களை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமா?
|
அருளானந்த லகரி
பாடல் - அருளானந்த லகரி
பண் - பியந்தைக்காந்தாரம்
தேவாரப்பண் - வேயுறுதோளிபங்கன்
இராகம் - நெளரோ
தாளம் - ரூபகம்
சீரியர் பேணும் வேதஞ் சிறந்தசற்
பெருமானென் றோது முரைகண்
டாரிய ரேத்தி யுன்ற னழிவற்ற திவ்ய
வடிதன்னை யெய்தி மகிழ்ந்தார்
பூரியர் கேண்மை யுற்றுப் புரையாய பொய்வாழ்
வதிலேச தாநா னுழன்றேன்
வோரியந் நீபத் தார்கொள் புயவெந்தாய் மேலுன்
வியனீரத் தாலுய் குவலே. .. 1
தடங்கணி யெங்க ளம்மை யெனுந்தேவ சேனை
தழுவுந் திருத்தோ ளுடையோய்
மடங்கலின் றோலை மேலே கவினப்பூண் போர்தம்
மகனாமெய் யின்ப மழவே
அடங்கிடா மோக முள்ள வடியேனை யும்மோர்
தொழும்பாக்க வந்த கிருபை
விடங்கமே யுன்னா லுய்ந்தே னினமுநா னேத்துன்
வியனீரத் தாலுய் குவலே. .. 2
கற்பதுங் கேட்பதுஞ்சூ ழுனையன்றி யுண்டோ
கவினேறு வேடர் குலமான்
சொற்படி செய்யும் பெற்றி யுடையென்றன் சிந்தைச்
சுவதந்திர நட்பே தனுசர்
துற்செய லெல்லா மோயப் பெருஞ்சண்டை செய்த
சுடர்ஞாங்கர் வீரா வெளியேன்
விற்பன வுன்னா லுய்ந்தே னினமுநா னேத்துன்
வியனீரத் தாலுய் குவலே. .. 3
ஐம்முகத் தெய்வம் வேறே யறுதுண்டத் தெய்வ
மதுவேறென் றோதும் விகற்பு
மைம்மனத் தோர்கட் கந்தோ விரண்டாகத் தோற்றி
மயக்கத்தை யுண்டு செயுமப்
பொய்ம்மருள் வீட்டி யெற்குப் புரையற்ற பாலின்
றரம்போல் விளக்கி யவொரு
மெய்ம்மணி வேலின் மன்னே யினியீடி லாவுன்
வியனீரத் தாலுய் குவலே. .. 4
பேருரு வூரொன் றின்றிப் பிரிவற்ற சோதிப்
பெருக்கா நிலாவு நினையே
பேருரு வூரிங் குள்ளோர் பிறந்தீற டைந்தே
யுழலா துணர்த்த வெனவே
பேருரு வூருங் கொண்டு பிரகாசிக் கின்ற
பெருமானென் றோர்ந்தேன் கருணை
மேருநல் லெந்தாய் நாயே னினியீடி லாவுன்
வியனீரத் தாலுய் குவலே. .. 5
எள்ளினுள் ளெண்ணெய் போல விடையேது மின்றி
யிருக்கின்ற வுன்னை யுணராக்
கள்ளுள முள்ளோர் போலக் கணக்கில்லாக் காலங்
கழித்திட்ட வென்மேற் கருணை
உள்ளநீ தந்த நெஞ்சா லுணர்ந்தேனின் னீர்மை
யொளிசால் சிகண்டி யுகைப்போய்
வெள்ளியங் குன்ற வாழ்வே யினியீடி லாவுன்
வியனீரத் தாலுய் குவலே. .. 6
சுத்தசன் மார்க்க முக்கிய சுகானந்த வாழ்வுச்
சுவதந்திர னீயென் றறிந்த
முத்தரெல் லாம டைந்த முழுநன்மை நாடி
யுளநாள் கழிக்க விஙனே
வைத்தநின் னட்புக் கேநா னளப்பில்லாத் தண்டம்
வழங்கும்பண் புக்கும் வலனோ
வித்தகச் சேயே யெந்தா யினியீடி லாவுன்
வியனீரத் தாலுய் குவலே. .. 7
எண்ணிலா யாக்கை பெற்றே யழிதந்த பாழ்த்த
விழிநெஞ்ச னேனை யொருநீ
நண்ணிவந் தன்று சொற்ற நலம்போல வின்னு
நறுநன்மை யெல்லா மருளும்
அண்ணலா யுள்ள திவ்விய வருட்கொண்ட லேமும்
மலச்சேற்றி லாழ்ந்த வெனதுள்
விண்ணினுள் ளன்பா மன்பே யினியீடி லாவுன்
வியனீரத் தாலுய் குவலே. .. 8
தேவருங் கானி னோன்பு செயுமைய ருங்காஒன்பா னவ
ரைத்தொழு துய்வீரர்
ணருஞ்சோதி யாய வுனைநான்
பாவினா லேத்த விந்நாண் முனரென்ன புண்யம்
பாரிவிற்செய் தேனோ வறியேன்
ஆவியா யுள்ள வென்ற னானந்த வெள்ள
வமுதே யனாதிப் பொருளே
வீவறு கந்த சாமி யினியீடி லாவுன்
வியனீரத் தாலுய் குவலே. .. 9
மட்டறு பத்தி கொண்டு புகழ்சொன்ன நாதன்
மனம்போல வாக்க மளி த்தோய்
சட்டியினோன்பை முன்னாட் டவறாது செய்து
சயங்கொண்ட கோனுள் ளிறையே
தட்டறு மெங்க டேவே யடிநாடு வோரைத்
தயவாக நோக்கு முனையே
விட்டுவ டாம னன்கு பிடித்துக்கொண் டேனுன்
வியனீரத் தாலுய் குவலே. .. 10