பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
48. திருத்தேவை 10
பலன்போலிச் சாமியார் உறவு பற்றாமல் இருக்க வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருத்தேவை

  பாடல் - திருத்தேவை

பண் - கெளசிகம்
தேவாரப்பண் - வீடலால வாயிலாய் இராகம் - பைரவி
தாளம் - ரூபகம்

கார்கொள்வான நீர்கொள்வேலை கானலாரந் தெள்ளிடு
நீர்கொளோதம் வீசநாளு நீலஞால மெக்கணும்
நார்கொளன்பர் வந்துவந்து நன்குபோற்ற வுள்ளமாச்
சீர்கொணல்ல தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.   ..  1

தேர்ந்தகல்வி யாளருஞ்சி வாகமங்கொள் செல்வருங்
கூர்ந்தபுந்தி யோருமுண்மை கூறும்வேத நாதமே
ஓர்ந்தபேர்க ளும்பொன்வாகை யோருமீட்ட மீ ட்டமாச்
சேர்ந்துபோற்று தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.   ..  2

சைவமாவ ணோக்கநல்கு தாழ்வின்ஞான மாம்பழம்
கையிலேற்ற ருந்தலேக ளங்கநீத்த வின்பமென்
றையம்வென்ற ணைந்துய்வோர்க ளாவலோ டிறைஞ்சுநல்
தெய்வமான தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.   ..  3

தீம்பழங்கை வாங்கிநன்கு தின்னும்வேலை யின்பமும்
தீம்பழந்தி னாதபோத· தின்மையுந்தி ளைத்தல்போல்
மேம்படுஞ்சி வானுபோக மென்றுதேர்வி வேகிகாண்
தேம்பிறங்கு தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.   ..  4

ஆதிமுன்ன னாதியாம னாதியெங்கு முள்ளதென்
றேதநீத்த நெஞ்சிலேயி ருப்பதுண்மை யாகுமேற்
பாதகங்கள் செய்வதேது பந்தமேதென் போரவாம்
தீதிலாத தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.   ..  5

துன்புவந்த போதெம்மாதி சோதிசாமி யென்பதும்
துன்புதீர்ந்த போதுகாசு சோறுதெய்வ மென்பதும்
அன்பிலாவு லோகர்கொள்கை யன்புளோர்வி டாரவர்
தென்பராவு தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.   ..  6

பண்ணுமீச பூசைகண்டு பாரிமைந்தர் மெச்சவென்
றெண்ணல்வீணர் செய்கையந்த வீசனந்த ரந்தொரிந்
தெண்ணிலாத யாணர்நல்கு மீசனென்ற தைச்செயுந்
திண்ணரேத்து தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.   ..  7

அசபைமந்தி ரக்குருத்த றிந்தனார தஞ்செபித்
துசிதனோடு கூடுமோன வுண்மைகண்டு கொண்டவர்
விசனமூசு பூவும்வீவு மேவிடாரன் னோர்களெத்
திசையுமேத்து தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.   ..  8

ஒத்தபூமி மேலுறங்க லேசன்மார்க்க யோகமாம்
முத்தர்சொற்ற நூலெலாமவ் வாறெனாவுண் முன்னுவோர்
இத்தலத்து வாஞ்சைநீத்தி ருக்கவேய வர்க்கொரு
சித்தநல்கு தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.  ..  9

கல்வியம்ப ரப்பினெல்லை காண்கினும்விண் வேந்தெனச்
சொல்விளங்கி னுந்தனுண்மை காணொணாது சோதியீ
நல்விவேக ம·தைநல்கு மென்றுசூழ்பு கழ்க்கவிச்
செல்வனேத்து தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.   ..  10

கலியுகம் 4998 மன்மத (கி..பி. 1896) மாசி மாதம் 21ஆம் தேதி சோமவாரம்