நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
49. | திருப்புலியூர் | 10 | |
பலன் | உங்களிடம் உள்ள மூட பக்தி விலக வேண்டுமா?
|
திருப்புலியூர்
பாடல் - திருப்புலியூர்
பண் - நட்டபாடை
தேவாரப்பண் - உண்ணாமுலை
இராகம் - கம்பீரநாட்டை
தாளம் - ரூபகம்
முத்த மன்னநகை மங்கைய ராடவர் மூழ்கி விளையாடுஞ்
சுத்த மன்னுசர சுக்களுஞ் சோலையுஞ் சூழ வனப்பேறும்
அத்த மின்னுமணி மன்று விளங்க வலங்கு புலியூரில்
நித்த மின்னுகுக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே. .. 1
மாசறு வானவர் மானவ ரேத்திட மங்கை சிவகாமி
ஏசறு தூவுள நன்கு களிக்க வியங்கு கரம்வீசி
ஆசறு மோர்சிவ னாரரு ணாடக மாடும் புலியூரில்
நேச மகாகுக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே. .. 2
மாய மதர்ப்பின் மயங்குநர் காணரு மாண்பு பெருகீசர்
தூய வனற்கையர் மாலொடு நான்முகன் சூழுந் திருப்பாதர்
ஆய மதிச்சடை யாரரு ணாடக மாடும் புலியூரில்
நேய முடைக்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே. .. 3
கோளி லருந்தவ மோங்கு பதஞ்சலி கூர்த்த புலிக்காலன்
நாளு மகிழ்ந்திட ஞான மணங்கமழ் நாத ருயர்வேள்வி
யாளர் புகழ்ந்திடச் சங்கரர் நாடக மாடும் புலியூரில்
நீள வயிற்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே. .. 4
விற்கர மன்னருங் கண்டு களிக்க வியன்கொள் பொருளீயும்
நற்கர மைந்தர்க ணாளு மவாமரு ணம்பர் திருப்பாதம்
பொற்கர மின்சடை யாடம காநடம் பொங்கு புலியூரில்
நிற்கிற வொண்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே. .. 5
காண்ட னினைத்தலின் றொண்பொரு ளோடு கலாவு மறிவாளர்
ஆண்டவ னைத்துணை வேண்டுநர் யாவரு மன்பி னினிதோங்கத்
தாண்டவ நித்தலுஞ் செய்பர மேசுரர் தங்கு புலியூரில்
நீண்ட வயிற்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே. .. 6
மட்டில் சிதம்பரந் தில்லைபொ னம்பல மன்று நடக்கோயில்
தட்டி னறும்புண்ட ரீகபு ரந்தக ராலய மாவிதயம்
இ ட்டர் தொழும்பிர மப்புரஞ் சிற்சபை யென்னும் புலியூ¡ரில்
நிட்டை தருங்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே. .. 7
தகர மணக்கு நெடுங்குழன் மாதருஞ் சந்த மணிமார்புக்
குமரர் குழுக்களுங் கந்தசு வாமி குகேச வெனக்கூவிச்
சிகரம் வளைத்துவந் திக்கு நறுந்தொழில் சேரும் புலியூ¡ரில்
நிகாரி லருட்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே. .. 8
பலமுய ரச்சுதன் பங்கய னத்திரம் பங்க முறவுண்டே
உலவிய வச்சிர வேலர சேமிடி யோட்டி யெமையாளும்
வலமுயர் முத்தைய காவென வேத்துநர் மல்கு புலியூரில்
நிலவு மயிற்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே. .. 9
பொன்றிக ழுங்குய மான்மகள் வான்மகள் புந்தி களிகூர
என்று மியங்குமெம் மான்புகழ்க் கோனிறை யென்று துதிபாடு
கின்றவர் வெங்கவ னீங்கி நலங்கொளக் கேடில் புலியூரில்
செல்வனேத்து தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே. .. 10