பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
49. திருப்புலியூர் 10
பலன்உங்களிடம் உள்ள மூட பக்தி விலக வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருப்புலியூர்

  பாடல் - திருப்புலியூர்

பண் - நட்டபாடை
தேவாரப்பண் - உண்ணாமுலை
இராகம் - கம்பீரநாட்டை
தாளம் - ரூபகம்

முத்த மன்னநகை மங்கைய ராடவர் மூழ்கி விளையாடுஞ்
சுத்த மன்னுசர சுக்களுஞ் சோலையுஞ் சூழ வனப்பேறும்
அத்த மின்னுமணி மன்று விளங்க வலங்கு புலியூரில்
நித்த மின்னுகுக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே.  ..  1

மாசறு வானவர் மானவ ரேத்திட மங்கை சிவகாமி
ஏசறு தூவுள நன்கு களிக்க வியங்கு கரம்வீசி
ஆசறு மோர்சிவ னாரரு ணாடக மாடும் புலியூரில்
நேச மகாகுக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே.   ..  2

மாய மதர்ப்பின் மயங்குநர் காணரு மாண்பு பெருகீசர்
தூய வனற்கையர் மாலொடு நான்முகன் சூழுந் திருப்பாதர்
ஆய மதிச்சடை யாரரு ணாடக மாடும் புலியூரில்
நேய முடைக்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே.   ..  3

கோளி லருந்தவ மோங்கு பதஞ்சலி கூர்த்த புலிக்காலன்
நாளு மகிழ்ந்திட ஞான மணங்கமழ் நாத ருயர்வேள்வி
யாளர் புகழ்ந்திடச் சங்கரர் நாடக மாடும் புலியூரில்
நீள வயிற்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே.   ..  4

விற்கர மன்னருங் கண்டு களிக்க வியன்கொள் பொருளீயும்
நற்கர மைந்தர்க ணாளு மவாமரு ணம்பர் திருப்பாதம்
பொற்கர மின்சடை யாடம காநடம் பொங்கு புலியூரில்
நிற்கிற வொண்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே.   ..  5

காண்ட னினைத்தலின் றொண்பொரு ளோடு கலாவு மறிவாளர்
ஆண்டவ னைத்துணை வேண்டுநர் யாவரு மன்பி னினிதோங்கத்
தாண்டவ நித்தலுஞ் செய்பர மேசுரர் தங்கு புலியூரில்
நீண்ட வயிற்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே.   ..  6

மட்டில் சிதம்பரந் தில்லைபொ னம்பல மன்று நடக்கோயில்
தட்டி னறும்புண்ட ரீகபு ரந்தக ராலய மாவிதயம்
இ ட்டர் தொழும்பிர மப்புரஞ் சிற்சபை யென்னும் புலியூ¡ரில்
நிட்டை தருங்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே.   ..  7

தகர மணக்கு நெடுங்குழன் மாதருஞ் சந்த மணிமார்புக்
குமரர் குழுக்களுங் கந்தசு வாமி குகேச வெனக்கூவிச்
சிகரம் வளைத்துவந் திக்கு நறுந்தொழில் சேரும் புலியூ¡ரில்
நிகாரி லருட்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே.   ..  8

பலமுய ரச்சுதன் பங்கய னத்திரம் பங்க முறவுண்டே
உலவிய வச்சிர வேலர சேமிடி யோட்டி யெமையாளும்
வலமுயர் முத்தைய காவென வேத்துநர் மல்கு புலியூரில்
நிலவு மயிற்குக னென்மன தைக்கவர் நீர்மை யறியேனே.   ..  9

பொன்றிக ழுங்குய மான்மகள் வான்மகள் புந்தி களிகூர
என்று மியங்குமெம் மான்புகழ்க் கோனிறை யென்று துதிபாடு
கின்றவர் வெங்கவ னீங்கி நலங்கொளக் கேடில் புலியூரில்
செல்வனேத்து தேவைவேளென் சிந்தையைக்கொள் கள்வனே.   ..  10

கலியுகம் 5002 சர்வரி (கி.பி 1900) ஆவணி மாதம் 21ஆம் தேதி புதவாரம்