நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
50. | திருப்போரூர் | 10 | |
பலன் | கல்வி, கவிதை, செல்வம், ஞானம் பெற வேண்டுமா?
|
திருப்போரூர்
பாடல் - திருப்போரூர்
பண் - சீகாமரம்
இராகம் - நாதநாமகிரியா
தாளம் - ஆதி
சொல்வி லாசம றாத நான்மறை
தூய சோதியென் றோது மாகதி
நல்கி யாளவெனு ணட மாட வாவாரிய
கல்வி கேள்வியி னால வாவலி
காதி மேலடி பாடு மாதமிழ்ச்
செல்வர் நாயகனே திருப் போரூ ரம்மானே. .. 1
மூவர் சூழ்முத லாய வோர்சிவன்
மூல வோமுரு கோனென் றானதை
யாவர் தாமறிவா ரடி யார லாமலுயர்
நாவர் பாடுன தேசி லாவடி
ஞான மீகுதி கானல் வேலவ
தேவர் நாயகனே திருப் போரூ ரம்மானே. .. 2
பாட்டி லேபுக ழேழை யேன்மிடி
பாற வோரருள் கூர்தி மாமலை
ஆட்டி காதலனே யற வோர்சி காமணியே
நாட்டு மூடரு மாரி போலிசை
பாட வேயவர் நாவி லேவாரி
தீட்டு நாயகனே திருப் போரூ ரம்மானே. .. 3
கருப்பு காநிலை கூட வேயிரு
காலை யேகரு தேழை யேனொரு
விருப்பு மேன்மையுற விரை யார்ப தந்தாராய்
இருப்பு மாதவ ரீச னேகும
ரேச னேயடி சேரு மாறுயிர்
திருப்பு நாயகனே திருப்போரூ ரம்மானே. .. 4
மாண்டு சூதக மேவு பாசறை
மாற வேநினை யேழை யேனனி
வேண்டு மீசுரனே விரை யார்ப தந்தாராய்
ஆண்டு சேர்மதி வார மோரையி
லாத பூரண வாசி லாவுயிர்
தீண்டு நாயகனே திருப் போரூ ரம்மானே. .. 5
சீரு லாமடி சேர வேயரு
டேவ னேயெனு மேழை யேனுளம்
ஒரு மீசுரனே யெனக் கோகை யோடருளாய்
ஏரு லாமயி லீச கானவ
ரேழை பூவணி யேறு தோளது
சேரு நாயகனே திருப் போரூ ரம்மானே. .. 6
புருட னானதுன் பால தாகவெ
னானி னைந்திடு போத னேனகத்
குருடு தானறவே யருள் கூரி ளங்கோவே
முருட ரூரிடை யோரி ராவெழின்
மூல நாயக மான மானினைத்
திருடு நாயகனே திருப் போரூ ரம்மானே. .. 7
குறுக்க நீடலி லாவு னேரருள்
கோட லேகதி யாமெ னாநினை
சிறுக்க னேனைவிடா தடி சோரி ளங்கோவே
நறுக்கொ ணாவுர னால றாவயி
னாத காவென வோது வார்வினை
செறுக்கு நாயகனே திருப் போரூ ரம்மானே. .. 8
நீர்க்கு ளேதிரி வாளை பாய்விரி
தாழை நீள்கமு கோதி சூழ்வளம்
ஆர்க்கும் வேதகிரி யர னார்தி ருச்சேயே
பார்க்கு ளேதிரி யேழை யேன்வினை
பாற வேயருள் பாடு வார்துயர்
தீர்க்கு நாயகனே திருப் போரூ ரம்மானே. .. 9
பொய்த வாவுரை யேனை மேனிலை
போக வேயருள் கூர்தென் மாகவி
பெய்த ஞானவெளிப் பெய ரானு ளத்தேவே
பைத லாலிரு தேவர் தேடிய
பார மாதிரப் பேரன் மாதுதி
செய்த நாயகனே திருப் போரூ ரம்மானே. .. 10