பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
50. திருப்போரூர் 10
பலன்கல்வி, கவிதை, செல்வம், ஞானம் பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருப்போரூர்

பாடல் - திருப்போரூர்

பண் - சீகாமரம்

இராகம் - நாதநாமகிரியா
தாளம் - ஆதி

சொல்வி லாசம றாத நான்மறை
தூய சோதியென் றோது மாகதி
நல்கி யாளவெனு ணட மாட வாவாரிய
கல்வி கேள்வியி னால வாவலி
காதி மேலடி பாடு மாதமிழ்ச்
செல்வர் நாயகனே திருப் போரூ ரம்மானே.   ..  1

மூவர் சூழ்முத லாய வோர்சிவன்
மூல வோமுரு கோனென் றானதை
யாவர் தாமறிவா ரடி யார லாமலுயர்
நாவர் பாடுன தேசி லாவடி
ஞான மீகுதி கானல் வேலவ
தேவர் நாயகனே திருப் போரூ ரம்மானே.   ..  2

பாட்டி லேபுக ழேழை யேன்மிடி
பாற வோரருள் கூர்தி மாமலை
ஆட்டி காதலனே யற வோர்சி காமணியே
நாட்டு மூடரு மாரி போலிசை
பாட வேயவர் நாவி லேவாரி
தீட்டு நாயகனே திருப் போரூ ரம்மானே.   ..  3

கருப்பு காநிலை கூட வேயிரு
காலை யேகரு தேழை யேனொரு
விருப்பு மேன்மையுற விரை யார்ப தந்தாராய்
இருப்பு மாதவ ரீச னேகும
ரேச னேயடி சேரு மாறுயிர்
திருப்பு நாயகனே திருப்போரூ ரம்மானே.   ..  4

மாண்டு சூதக மேவு பாசறை
மாற வேநினை யேழை யேனனி
வேண்டு மீசுரனே விரை யார்ப தந்தாராய்
ஆண்டு சேர்மதி வார மோரையி
லாத பூரண வாசி லாவுயிர்
தீண்டு நாயகனே திருப் போரூ ரம்மானே.   ..  5

சீரு லாமடி சேர வேயரு
டேவ னேயெனு மேழை யேனுளம்
ஒரு மீசுரனே யெனக் கோகை யோடருளாய்
ஏரு லாமயி லீச கானவ
ரேழை பூவணி யேறு தோளது
சேரு நாயகனே திருப் போரூ ரம்மானே.   .. 6

புருட னானதுன் பால தாகவெ
னானி னைந்திடு போத னேனகத்
குருடு தானறவே யருள் கூரி ளங்கோவே
முருட ரூரிடை யோரி ராவெழின்
மூல நாயக மான மானினைத்
திருடு நாயகனே திருப் போரூ ரம்மானே.   ..  7

குறுக்க நீடலி லாவு னேரருள்
கோட லேகதி யாமெ னாநினை
சிறுக்க னேனைவிடா தடி சோரி ளங்கோவே
நறுக்கொ ணாவுர னால றாவயி
னாத காவென வோது வார்வினை
செறுக்கு நாயகனே திருப் போரூ ரம்மானே.   ..  8

நீர்க்கு ளேதிரி வாளை பாய்விரி
தாழை நீள்கமு கோதி சூழ்வளம்
ஆர்க்கும் வேதகிரி யர னார்தி ருச்சேயே
பார்க்கு ளேதிரி யேழை யேன்வினை
பாற வேயருள் பாடு வார்துயர்
தீர்க்கு நாயகனே திருப் போரூ ரம்மானே.  ..  9

பொய்த வாவுரை யேனை மேனிலை
போக வேயருள் கூர்தென் மாகவி
பெய்த ஞானவெளிப் பெய ரானு ளத்தேவே
பைத லாலிரு தேவர் தேடிய
பார மாதிரப் பேரன் மாதுதி
செய்த நாயகனே திருப் போரூ ரம்மானே.   ..  10

கலியுகம் 5002 சர்வரி (1900) ஆவணி மாதம் 22ஆம் தேதி குருவாரம்