பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
51. திருத்தணிகைமலை 10
பலன்நோய்கள் நீங்க வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருத்தணிகைமலை

பாடல் - திருத்தணிகைமலை (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பண் - பஞ்சமம்
தேவாரப்பண் - தானெனை முன் படைத்தான்
இராகம் - ஆகிரி
தாளம் - ரூபகம்

பொன்னா ரங்க டாங்கு கொங்கைப் பூவையர் மையலிலே
பன்னா ளும்பட் டீழை கொண்டு படுவனஞ் சேர்முன்னே
தென்னார் வண்டு பாடு தெய்வத் தணிகை நெடுங்கிரிவாழ்
மன்னார் ஞானச் சேய்செம் பாத மலரை வணங்குதுமே.   ..  1

கூனி யாடிக் கோல தூன்றிக் குறுகி நடந்திளைஞர்
பானெ கிழ்ந்த கஞ்சி யுண்டு படவனஞ் சேர்முன்னே
தானி யார்த்தச் செல்வர் சேருந் தணிகை நெடுங்கி¡ரிவாழ்
ஆனி யற்ற சேய்செம் பத்ம வடியை வணங்குதுமே.   ..  2

ஈழை கீர்கீ ரென்றி ழுக்க விரும லெழும்புமுனே
தாழை வாழை யீனும் வண்மைத் தணிகை நெடுங்கிரிவாழ்
ஏழை வள்ளி கொண்கன் மாலுக் கிகல்வளை தந்தபிரான்
மாழை ராம நாதன் பாத மலரை வணங்குதுமே.   ..  3

கண்கண் மங்கிக் காத டங்கிக் கருத்து மயங்குமுனே
தண்கொள் பங்க யங்கள் விள்ளுந் தணிகை நெடுங்கி¡ரி வாழ்
பண்கள் பாடு வாயன் சேயன் பனிமலர் மன்பணிகோ
கண்க ளீரா றெந்தை பாத கமலம் வணங்குதுமே.  ..  4

கேச மெல்லாம் வெண்மை பூத்துக் கீழ்நடை காண்முன்னே
தாசர் பல்லோ ரேத்த வுள்ள தணிகை நெடுங்கிரிவாழ்
ஈச னீசர் பால னாத னிமையவர் கோனம்மான்
வாச மொய்ம்ப னெந்தை பாத மலரை வணங்குதுமே.   ..  5

மூளை குன்றி மாழை கொண்டு முழுது மடங்குமுனே
தாளி தண்டு மல்கு வண்மைத் தணிகை நெடுங்கி¡ரிவாழ்
காளை காளை யான னத்தான் கடவு ணறுந்தகரப்
பாளை யோதி வள்ளி மன்றாட் பதுமம் வணங்குதுமே.   ..  6

கால்கை யோய்ந்து கீன்மு டங்கிக் கவலை யழுந்துமுனே
சால்பு வீங்கு நேச ரேத்துந் தணிகை நெடுங்கிரிவாழ்
வேல்கொள் கையன் புள்ளி ருப்போன் விடவ ரவந்தொழுத
வால்கொள் பாதன் சுந்த ரன்றாண் மலரை வணங்குதுமே.   ..  7

வெள்ளை யாய பல்வி ழுந்து விரைவு தளர்ந்திடுமுன்
வள்ள னம்பன் பிள்ளை யேயெம் மனதை யுணர்ந்தருளும்
தள்ளை யேயென் றன்பி னேத்தித் தணிகை நெடுங்கிரிவாழ்
மள்ளல் வேலன் மாசில் பாத மலரை வணங்குதுமே.   ..  8

பாய்கி டந்து பவ்வீ பெய்து பையல்கள் சீயெனுமுன்
காய்கி ழங்குண் போர்க ணாத கருணை யிரங்கியருள்
தாய்கி ரந்தி நூறை யென்று தணிகை நெடுங்கிரிவாழ்
சேய்கி ளர்ந்த வோரி யந்தாட் டிருவை வணங்குதுமே.   ..  9

உண்ணீ ரன்னஞ் செல்ல லின்றி யுயிரு ளடங்குமுனே
தண்ணீ ரென்று முள்ள வண்மைத் தணிகை நெடுங்கிரிவாழ்
தெண்ணீர் மைச்சு ரேசன் சந்தத் தெருள னிறைஞ்சியகோன்
கண்ணீ ராள ரன்பன் பாத கமலம் வணங்குதுமே.   ..  10

கலியுகம் 5002 சர்வரி (1900) ஆவணி மாதம் 28ஆம் தேதி புதவாரம்