பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
52. மயிலமலை 10
பலன்பொய்யும், வினையும் நீங்க வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

மயிலமலை

பாடல் - மயிலமலை (வெண்டளையான் வந்த தரவுகோச்சகக்களிப்பா)

பண் - பஞ்சமம்
தேவாரப்பண் - தானெனை முன் படைத்தான்
இராகம் - ஆகிரி
தாளம் - ரூபகம்

சீரார் தெருளாக்கச் சேவடியே சேர்வேனென்
றூரார் மனைவிமகா ருற்றாரெல் லாமகன்றேன்
நாரார் மனத்திடை நீ நல்லன்பு வையாயேல்
வாராதோ கண்ணீர் மயிலமலை வாழ்குகனே.   ..  1

நன்றுகறை யெண்ணா நிடூதனர்போ னாளுமுயிர்
கொன்றுபுசித் தோருமிழி கொங்குகுடித் தோருமென்றும்
பொன்றுதலி லாவுனைச்சூழ் புண்ணியத்தி னுய்ந்தார்நான்
மன்றுபட்டு மெய்த்தேன் மயிலமலை வாழ்குகனே.   ..  2

கட்டுரையில் லாதாருங் காமிகளுங் கள்வருநற்
சிட்டரென வானாருன் சேவடிபா வித்தளவில்
நெட்டுலகி னின்னடியே நெஞ்சிருத்தி யுன்னொருநான்
மட்டுமலை கின்றேன் மயிலைமலை வாழ்குகனே.   ..  3

நல்காவன் னெஞ்சருநன் ஞாயம் பிறழ்ந்தவரும்
செல்கால மெய்துமுனுன் சேவடிசிந் தித்துய்ந்தார்
பல்காலு நின்னடியைப் பாடுமெனக் குன்னருடான்
மல்காத தென்னே மயிலமலை வாழ்குகனே.   ..  4

ஆராய வொண்ணா வதிபாவ மேபுரிந்த
நீராரு நின்னுருவை நெஞ்சிருத்தி யுய்ந்தார்கள்
தாராள மாவுனிரு தாடுதிக்கு மெற்குனருள்
வாராத தென்னே மயிலமலை வாழ்குகனே.   ..  5

பாழ்வேட நம்பிப் பதிதரென நின்றோரும்
சூழ்வேக முள்ளோருந் தோத்திரித்து வாழ்ந்ததுண்டு
தாழ்வேது மில்லாவுன் றன்னைநனி கூடினல்லால்
வாழ்வேனோ நான்றான் மயிலமலை வாழ்குகனே.   ..  6

காட்டார்க்கு நாட்டார்க்குங் காசில் கருணையினால்
தாட்டா மரைகொடுத்தாய் தாள்பழிச்சு மென்னைவினை
ஆட்டாது பேரருளா லாட்டி யளாவவர
மாட்டாயோ மாண்பார் மயிலமலை வாழ்குகனே.   ..  7

வெண்பாவுஞ் செம்பாவும் வித்தாரப் பொன்பாவும்
பண்பார் கரும்பாவு நின்போரிற் பாடிடுவேன்
கண்பார்வை வந்தெனது கம்பலையைக் காதியருள்
வண்பாத வஞ்சான் மயிலமலை வாழ்குகனே.  ..  8

நின்னைமிகப் பொச்சாந்து நீளுலகி னில்லாமல்
தென்னிளமை யிற்றானே சேரவந்த பாக்கியநீ
என்னையிது நாண்மறக்க ஞாயமிலை யெங்கணுமாய்
மன்னுமதி தாராய் மயிலமலை வாழ்குகனே.   ..  9

சிந்தைமயங் காமலெனைச் சித்தாந்த வீட்டிடைவை
கந்தமணி தெய வமகள் காட்டார் மகள்கொழுநா
சந்தமுனி நெஞ்சத் தடங்கமல மேயமுதால்
மந்திகுதி கொள்ளு மயிலமலை வாழ்குகனே.   ..  10

கலியுகம் 5002 சர்வரி (1900) ஆவணி மாதம் 29ஆம் தேதி குருவாரம்