நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
53. | திருச்செங்கோடு | 10 | |
பலன் | திருத்தல தரிசன வாய்ப்பு பெற வேண்டுமா?
|
திருச்செங்கோடு
பாடல் - திருச்செங்கோடு (திருவிளையாடத்ர் புகழ்ச்சி - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பண் - நட்டராகம்
தேவாரப்பண் - என்ன புண்ணியம் செய்தனை
இராகம் - பந்துவராளி
தாளம் - ரூபகம்
சநீரு லாநெடு வேணியன் மேல்விழி நின்றெழு சுடராகிச்
சீரு லாம்வர கங்கைப டிந்தறு தொரிவையர் முகையுண்டே
ஏரு லாமுரு வம்பல காட்டிமெய் யிறைவியின் பாலருந்திச்
சூரி லான்மலை சென்றவ னாலயஞ் சுடர்திருச் செங்கோட. .. 1
இரவி யேழ்பசுங் கொய்யுளை சந்திர னிரதமென் பவைகளிலும்
நிருதி வாயுகு பேரனு தாசன னீரிறை யிந்திரன்மா
தரும னீடுகைம் மாக்களி லும்பல சாரி புரிந்தகுகன்
கருது வார்க்கருள் செய்பதி நன்மணங் கமழ்திருச் செங்கோடே. .. 2
சார்த்தூ லத்திலும் யாட்டெழி லேற்றிலுஞ் சரபவி ராசனிலும்
ஏர்ச்சீ யத்திலு மான்கரு டன்சுசி யெகினமென் பவைகளிலும்
பார்த்தோர் விம்மிதங் கூரவி ருந்துபல் பவனி புரிந்தகுகன்
சீர்த்தூ யன்பரை யாள்பதி நல்லறஞ் சேர்திருச் செங்கோடே. .. 3
ஒப்பி லாச்சிறு பிள்ளையென் றாகியெவ் வுலகவஞ் சியராலும்
தப்பி லாசையி னாலெடுத் தெக்கழுத் தங்கொளவவரவர்முன்
செப்ப மோடுசென் றேபினர் மூப்புயர் தேகியைப் போலாகிக்
கப்பி லாத்தடி யூன்றிநின் றோன்சின கரந்திருச் செங்கோடே. .. 4
பட்ட தாரு துளிர்த்திடக் கானுறை பருவிலங் கெல்லாமும்
கிட்ட வந்திசை கேட்டவ சங்கொளக் கின்னர நனிமீட்டி
வட்ட மாமுகை யார்விர கங்கொள வார்குழ லினிதூதி
மட்டி லாவிளை யாட்டயர் சேயுறை மலைதிருச் செங்கோடே. .. 5
எண்ணி லாமுக மெண்ணறு காதுக ளெண்ணறு நறுநாக்கள்
எண்ணி லாவிழி யெண்ணறு நாசிக ளெண்ணறு கரதலங்கள்
எண்ணி லாவடி வுள்ளகு கேசுர னெண்ணறு கருணையினால்
எண்ணி லாவடி யார்க்கருள் செய்பதி யெழிறிருச் செங்கோடே. .. 6
பன்னா ளும்பல துன்பினை யேதரு பகைஞர் குழாமறுத்தே
என்னோ டண்டரெ லாரையு மாண்டரு ளென்றாரி வேண்டினகால்
நன்னார் மிக்குடை யீர்சொன வாறினி நாமருள் செய்துமெனாச்
சொன்னோ னன்பரை யாள்பதி யம்பொழில் சூழ்திருச் செங்கோடே. .. 7
நம்ப னீபடை வேந்தினை வாங்கிவிண் ணாடருஞ் சிவகணமும்
கும்ப லாவெழு தரப்புவி வந்தொரு குன்றையும் வலிசான்ற
தும்பி மாமுகன் றன்னையு மாய்த்துயர் சூரன தூர்போந்த
எம்பி ரான்றளி யாவது நீர்வள மெழுதிருச் செங்கோடே. .. 8
சிங்க மாமுகன் பானுமு னிந்தவன் சிரமறுப் புண்டபின்னர்த்
துங்க வேல்கொடு சூரனை யீர்ந்துயர் துசம்பாரி யெனவாக்கிப்
பொங்கு வீரர்க ளோடுசெ யந்திபுக் கிருந்துப ராசலம்போந்
தங்க ணாறற வோர்குரு வானவ னமர்பதி செங்கோடே. .. 9
மாறி லாக்க நாயகி தன்னைநன் மணம்புரிந் திந்திரற்கோர்
ஊறி லாமுடி சூட்டுபு வள்ளியை யுவப்பொடு கைப்பிடித்துக்
காறி லாப்புகழ் பாடிய வெந்தையின் கருத்தினை நிறைவேற்றி
ஈறி லாதொளிர் கின்றவ னன்கிருப் பதுதிருச் செங்கோடே. .. 10