பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
54. கழுகுமலைபாதி கந்தகிரி பாதி 10
பலன்உடனடியாக முருகனின் அருள் பெற வேண்டுமா? அல்லது தன்னம்பிக்கை தைரியம் பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

கழுகுமலைபாதி கந்தகிரி பாதி

பாடல் - கழுகுமலைபாதி கந்தகிரி பாதி (கலி விருத்தம்)

பண் - கொல்லிக்கெளவாணம்
தேவாரப்பண் - தில்லைவாழ்
இராகம் - நவரோ

உலகவெம்மைக் கடல்கடக்கு முறுதியினைத் தாராய்
கலகமிகந் தவர்கருதுங் கழுகுமலை முருகா
விலகலற்ற விருத்தியெற்கு விரைவிலினி தளியாய்
பலகவிஞர் பரசுகந்த பருவதத்துப் பரமே.   ..  1

வருதாவெல் லாங்களைதி மனதினினைப் போர்க்கும
கருதார்க்குங் களிப்புதவுங் கழுகுமலை முருகா
ஒருதாழ்வுஞ் சொலவிசையா வுவப்பிலெனை வையாய்
கிருதார்த்த ருள்குகந்த கிரியிருக்குங் கிளியே.   ..  2

அன்றுசொன்ன படியெனைவந் தாண்டுகொள வேண்டும்
கன்றுதலில் லார்குரங்குங் கழுகுமலை முருகா
என்றுமெனைத் திருவடிக்க ணிருத்தியிட வேண்டும்
குன்றுதலில் லாதகந்த குவடமருங் குருந்தே.   ..  3

தாட்டாம ரைத்திருவிற் றங்கவெனை வையாய்
காட்டார்வ முனிவருள்குங் கழுகுமலை முருகா
வீட்டாசை யேற்கொளுதி விரைவினில்வல் லார்க்கும்
மாட்டார்க்கு நல்லகந்த மலையிருக்கு மணியே.   .. 4

நாதநிலை ஞாங்கரெனை நன்கிருத்தி யாளாய்
காதலொடு நானேத்துங் கழுகுமலை முருகா
பாதகமெல் லாமுருக்கும் பாரிவிலெனை வையாய்
மாதவர்கள் வணங்குகந்த மலையிருக்கு மணியே.   ..  5

எள்ளுதலில் லாநெறியி லெனையிருத்தி யருளாய்
கள்ளுதலுள் ளார்மறந்த கழுகுமலை முருகா
துள்ளுதலில் லாதமதி துலங்கவெனக் களியாய்
பொள்ளுதல்கொள் ளாதகந்த பொருப்பிருக்கும் பொருளே.   ..  6

திடம்பிறங்கு தெருளிலெனைத் தினமுநனி வையாய்
கடம்புமலர் கமழ்வளங்கொள் கழுகுமலை முருகா
விடம்பொருவென் மலமவித்துன் விரையடியைத் தாராய்
தடம்பொழில்கொள் கந்தகிரி தனிலிருக்குந் தகையே.   ..  7

நான்பாடு பாட்டைநவில் பவர்க்குநல நல்காய்
கான்பாடு வண்டறையுங் கழுகுமலை முருகா
தேன்பாகு கண்டெனவந் தென்னுணனி சேராய்
மேன்பாடு மல்குகந்த வெற்பிருக்கும் வேளே.;   ..  8

எனைத்தள்ளி னாலுமெனை நம்பினவர்த் தள்ளேல்
கனைத்தண்டை சிலம்பவருங் கழுகுமலை முருகா
தினைத்தனையு நீங்காத திருவிலெனை வையாய்
நினைத்தவர நல்குகந்த கிரிக்கருணை நிதியே.   ..  9

குருப்புகழர் விரும்புமருட் கூத்தினென்னை யாட்டாய்
கருப்புகழர் காணாரிய கழுகுமலை முருகா
அருப்புகழர் நாடறிவி லனவரத மெனைவை
திருப்புகழர் புகழ்ந்தகந்த சிகாரியுறை சிவமே.   ..  10

கலியுகம் 5002 சார்வரி (1900) புரட்டாதி மாதம் 3ஆம் தேதி மங்களவாரம்