பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
55. திருவுடுப்பை 10
பலன்சகல தேர்வகளுடைய அருள் பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

திருவுடுப்பை

  பாடல் - திருவுடுப்பை (கலிநிளைத்துரை)

பண் - இந்தளம்
தேவாரப்பண் - பித்தா பிறைசூடி
இராகம் - நாதநாமக்ரியா
தாளம் - ரூபகம்

மலையெ லாம்விளை யாடரு ளான்மலை மாமகள்
தலைவ னார்தலை மாமுளை தம்பி தவத்தினார்
அலைவி லாவித யாசன மீதம ராண்டவன்
உலைவி லாவடி வேல னிருப்ப துடுப்பையே.   ..  1

தேவ சேனையை வேடர் குலத்துயர் செல்வியை
ஆவ லோடு மணந்துயிர் நன்மை யனைத்துமோர்
தாவி லாது பயந்து நிதம்பிரம சாரியும்
ஓவ லில்லியு மானவன் வாச முடுப்பையே.   ..  2

சரைகொ ளாத சதாகதி சாரதி யாயமர்
புரையி லாயிர நூறு பெரும்பாரி பூட்டிய
இரத மேலயி லேந்திறை யாக விருந்தமெய்
உரையி னான்பல வாடல்செய் தான முடுப்பையே.   ..  3

பிரம னாரருள் பேணிமுன் வைத்திடு பாதுகை
சரண நன்கு சுமக்க நடாவிய சாமியே
பரம னேயெமை யாள்கெனு நல்லவர் பாலுலாம்
உரமு ளானெனை யாள்குகன் வாச முடுப்பையே.   ..  4

இந்தி ரன்றிகழ் சாமர மேந்தி யிரட்டவொண்
சந்தி ராதபர் வெண்டர ளக்குடை தாங்கமால்
அந்த ணன்மலர் மாரி சொரிந்திட வங்கைவேல்
உந்து சீரொ டெழுந்தவன் கோவி லுடுப்பையே.   ..  5

எ¡ரியின் மன்பகல் வத்தி பிடித்திட வேமனார்
காரிகை யேந்திட முக்கணன் மூவிலை தூக்கவால்
நிருதி காகள மூத வெழுந்தவ னீடொளி
உருவு ளான்மயி லீச னிருக்கை யுடுப்பையே.   ..  6

அளகை யாளி யடைப்பை சுமக்கவு மங்ஙனே
கிளரு நீரிறை கேடில் படிக்கம தேந்தவும்
வளரு மேனையர் பீலி பிடிக்கவும் வந்தவார்ப்
புளர்சி லம்படி வேல னிருக்கை யுடுப்பையே.   ..  7

மாட்டி லேறு மகேசுரர் தந்தவொர் மாமணீ
காட்டி னாலறி வோமரு ளென்பவர் கட்டிடர்
வாட்டி யாள்கும ரேச னெனாது மயக்கெலாம்
ஓட்டி யாளரு ளாள னிருக்கை யுடுப்பையே.   ..  8

நாங்க ணின்னடி நம்பிய வாவிக ளாயினாம்
ஈங்கெ மக்கருள் வாரில ரேணயி லீசனே
தாங்கி யாளென முன்னுநர் வாதை தபுத்துவாழ்
வோங்க வேசெயு மெந்தை யிருக்கை யுடுப்பையே.  ..  9

நீறு மேலணி நேயர்க ணித்தலு மேத்துமோர்
ஆறு மாமுக னன்பரு ணைப்பெய ராரியன்
கூறு மாதுதி கொண்ட பிரானொரு கோதிலான்
ஊறி லானுயிர் நாத னிருக்கை யுடுப்பையே.   ..  10

கலியுகம் 5002 சார்வரி (1900) புரட்டாதி மாதம் 8ஆம் தேதி ஆதித்தவாரம்