பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
56. குமாரானந்தலகரி 10
பலன்மொளன நிலை, மோன நிலை பெற, மழை பெற வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

குமாரானந்தலகரி

பாடல் - குமாரானந்தலகரி

பண் - மேகராகக்குறிஞ்சி
இராகம் - நீலாம்பாரி

கங்கையினீ வந்ததனா லன்றோவக் கங்கைதனிற் படிவார்க் கெல்லாம்
பொங்குகறை போக்கிநறும் புனிதமளித் திடுமாரிய புண்ணி யத்தை
மங்குதலில் லாமலடைந்த தாளெனவே லையவுனை மருவு கின்ற
புங்கவர்க ளறிகின்றா ரெனினினதொள் ளுருமகிமை புகல்வோர் யாரே.   ..  1

ஆதியறு பேரொளிநீ கடவுளுக்கு மகனெ னுஞ்சொ லணைந்த தாலே
சாதிபல வாயிருக்கும் பெண்ணுயிர்க ளெல்லாமுந் தவத்தி னாகு
நீதிவழி மலடுதவிர்ந் துய்ந்தனவே யெனவறிவார் நிபுண ரெல்லாம்
வீதிதொறு நினைநாடி நிற்குமெனை யாள்குமர வேளே மன்னோ   ..  2

தனதடியி னூபுரமா மணியிரவி களிலொன்றின் சன்னி தானம்
எனுமொளிமுன் னுலகம்விளக் கிடுமிரவி முதலியன விலகா வென்றே
அனகவொளி யுருமுருகன் பகிர்முகம்விட்ட டகமுகம தானா னென்பார்
நினதடியைப் புகழ்புனிதர் குமரகுரு பரனேயென் னினைப்பு ளானே.   ..  3

உன்றனடி நூபுரத்தி னொலிதானே பொரியவர்கட் கு¡ரிய பேராய்
நின்றிடுநின் னடிசுமந்த புள்ளுறையு மிடமதுவே நெடிய சொர்க்கம்
என்றறியு மறிவாள ருன்றனிரு தாண்மகிமை யினைத்தென் றோது
கின்றவலி யுள்ளாரு முளரோவென் பார்கருணை கெழுவே லோயே.   ..  4

எண்ணாரிய வுயிர்களெலா நீயிருக்கு மூர்த்தமென வியம்பு நூலோர்
தண்ணளிசால் சாமியெனும் பெயருனக்குஞ் சொலியிந்தத் தரணி யோர்க்கும்
விண்ணவர்க்கும் விளம்பிடுதல் சம்புவெனு மிறைமொழியை நாரிக்கு மீப்போம்
வண்ணவிப நாவலுக்கும் வழுத்துதலை யொக்குமென்பார் வடிவே லோயே.   ..  5

மும்மூர்த்தி களுமுன்ற னாணைவழி முத்தொழிலும் பு¡ரிகின் றாரென்
றெம்மூர்த்தி களுக்குமுதன் மூர்த்தியா யுளபரம னியம்பி னானென்
றம்மூர்த்தி சாரிதநவில் காந்தமுறை தருமாயி னமர ரெல்லாம்
நம்மூர்த்தி குகனெனவுன் றாள்பணியா தென்பு¡ரிவார் நறிய வேலோய்.   ..  6

பொருவிலிறை யாமுனது பொரியவிபூ தியிற்சிறிதே புகலவொண்ணாச்
சருவவுல கயிச்சு¡ரிய மெனப்பரம னுரைத்தவுரை தனைமா காந்தச்
சுருதிவிளக் கிடுமாயி னினது திருத் தகைமையணுத் துணையங் கூறு
குரு வெவர்கொன் மூவுலகத் தினுமுலக குருவாய குமர வேளே.  ..  7

தவமுடைய தேவர்களைத் தன்னுருவா வுடையசிவன் றானே யுன்னைச்
சிவமெனவுண் மதித்து¡ரிய சீடனென வாயினன்முன் னெனினே னோருள்
எவருனடி வணங்காத பெயரெவரும் வணங்கினவ ரெனவே யாவார்
தவளமலர் முடிமுருகா நினதடிமண் ணவர்பணியத் தடையொன் றுண்டோ.   ..  8

சேயெனச்சொன் மழவுருவைப் பரமேச வடிவெனநீ செய்த காலை
மாயனெட்டு விழியன்முதல் விண்ணவரெல் லாருமந்த வடிவு மின்னின்
ஆயிரத்தி னோரமிச மட்டுமறிந் தனரல்லா லதிக மின்றே
பேயகத்த னாயவெனைப் பேணுகுக வதுவென்னாற் பேசற் பாற்றோ.   ..  9

சமாதான முடனுன்னை நினைத்தாலென் னுள்ளமெலாந் தண்ணென் றாகும்
உமாதேவி சுதனாமுன் னடிபாடி வணங்கிலென துணர்வுள் ளோங்கிச்
சமாராத னைக்கு¡ரிய வருணகி¡ரி தண்ணளியுந் தானே யேயும்
குமாராய நமவென்னு மாறெழுத்து முச்சாரிப்பார் குருவே   ..  10

கலியுகம் 5002 சார்வரி (1900) புரட்டாதி மாதம் 11ஆம் தேதி புதவாரம்