நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
56. | குமாரானந்தலகரி | 10 | |
பலன் | மொளன நிலை, மோன நிலை பெற, மழை பெற வேண்டுமா?
|
குமாரானந்தலகரி
பாடல் - குமாரானந்தலகரி
பண் - மேகராகக்குறிஞ்சி
இராகம் - நீலாம்பாரி
கங்கையினீ வந்ததனா லன்றோவக் கங்கைதனிற் படிவார்க் கெல்லாம்
பொங்குகறை போக்கிநறும் புனிதமளித் திடுமாரிய புண்ணி யத்தை
மங்குதலில் லாமலடைந்த தாளெனவே லையவுனை மருவு கின்ற
புங்கவர்க ளறிகின்றா ரெனினினதொள் ளுருமகிமை புகல்வோர் யாரே. .. 1
ஆதியறு பேரொளிநீ கடவுளுக்கு மகனெ னுஞ்சொ லணைந்த தாலே
சாதிபல வாயிருக்கும் பெண்ணுயிர்க ளெல்லாமுந் தவத்தி னாகு
நீதிவழி மலடுதவிர்ந் துய்ந்தனவே யெனவறிவார் நிபுண ரெல்லாம்
வீதிதொறு நினைநாடி நிற்குமெனை யாள்குமர வேளே மன்னோ .. 2
தனதடியி னூபுரமா மணியிரவி களிலொன்றின் சன்னி தானம்
எனுமொளிமுன் னுலகம்விளக் கிடுமிரவி முதலியன விலகா வென்றே
அனகவொளி யுருமுருகன் பகிர்முகம்விட்ட டகமுகம தானா னென்பார்
நினதடியைப் புகழ்புனிதர் குமரகுரு பரனேயென் னினைப்பு ளானே. .. 3
உன்றனடி நூபுரத்தி னொலிதானே பொரியவர்கட் கு¡ரிய பேராய்
நின்றிடுநின் னடிசுமந்த புள்ளுறையு மிடமதுவே நெடிய சொர்க்கம்
என்றறியு மறிவாள ருன்றனிரு தாண்மகிமை யினைத்தென் றோது
கின்றவலி யுள்ளாரு முளரோவென் பார்கருணை கெழுவே லோயே. .. 4
எண்ணாரிய வுயிர்களெலா நீயிருக்கு மூர்த்தமென வியம்பு நூலோர்
தண்ணளிசால் சாமியெனும் பெயருனக்குஞ் சொலியிந்தத் தரணி யோர்க்கும்
விண்ணவர்க்கும் விளம்பிடுதல் சம்புவெனு மிறைமொழியை நாரிக்கு மீப்போம்
வண்ணவிப நாவலுக்கும் வழுத்துதலை யொக்குமென்பார் வடிவே லோயே. .. 5
மும்மூர்த்தி களுமுன்ற னாணைவழி முத்தொழிலும் பு¡ரிகின் றாரென்
றெம்மூர்த்தி களுக்குமுதன் மூர்த்தியா யுளபரம னியம்பி னானென்
றம்மூர்த்தி சாரிதநவில் காந்தமுறை தருமாயி னமர ரெல்லாம்
நம்மூர்த்தி குகனெனவுன் றாள்பணியா தென்பு¡ரிவார் நறிய வேலோய். .. 6
பொருவிலிறை யாமுனது பொரியவிபூ தியிற்சிறிதே புகலவொண்ணாச்
சருவவுல கயிச்சு¡ரிய மெனப்பரம னுரைத்தவுரை தனைமா காந்தச்
சுருதிவிளக் கிடுமாயி னினது திருத் தகைமையணுத் துணையங் கூறு
குரு வெவர்கொன் மூவுலகத் தினுமுலக குருவாய குமர வேளே. .. 7
தவமுடைய தேவர்களைத் தன்னுருவா வுடையசிவன் றானே யுன்னைச்
சிவமெனவுண் மதித்து¡ரிய சீடனென வாயினன்முன் னெனினே னோருள்
எவருனடி வணங்காத பெயரெவரும் வணங்கினவ ரெனவே யாவார்
தவளமலர் முடிமுருகா நினதடிமண் ணவர்பணியத் தடையொன் றுண்டோ. .. 8
சேயெனச்சொன் மழவுருவைப் பரமேச வடிவெனநீ செய்த காலை
மாயனெட்டு விழியன்முதல் விண்ணவரெல் லாருமந்த வடிவு மின்னின்
ஆயிரத்தி னோரமிச மட்டுமறிந் தனரல்லா லதிக மின்றே
பேயகத்த னாயவெனைப் பேணுகுக வதுவென்னாற் பேசற் பாற்றோ. .. 9
சமாதான முடனுன்னை நினைத்தாலென் னுள்ளமெலாந் தண்ணென் றாகும்
உமாதேவி சுதனாமுன் னடிபாடி வணங்கிலென துணர்வுள் ளோங்கிச்
சமாராத னைக்கு¡ரிய வருணகி¡ரி தண்ணளியுந் தானே யேயும்
குமாராய நமவென்னு மாறெழுத்து முச்சாரிப்பார் குருவே .. 10