நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
57. | சத்திய போதகம் | 10 | |
பலன் | சத்தியத்தின் உண்மையை உணர வேண்டுமா?
|
சத்திய போதகம்
பாடல் - சத்திய போதகம் (கொம்பில்லாக்களை விருத்தம்)
பண் - கெளசிகம்
தேவாரப்பண் - காதலாகி
இராகம் - பைரவி
தாளம் - ஆதி
தண்ண வன்கலை மானச் சனிப்புமால்
நண்ணு சாவு நமக்கணை யாமனீள்
கண்ணன் மாமரு கன்முரு கையனை
அண்ண வாரு மழுங்கல்விட டன்பர்காள். .. 1
நிதிக்கு லம்பல கூட்டினு நீணிலம்
மதிக்க மாளிகை கட்டினு மாயமாம்
துதிக்கு மன்பிலின் பீகுகன் றூத்துதி
அதிர்க்க வாரு மழுங்கல்விட் டன்பர்காள். .. 2
திணையி னாசை யவித்தருட் சீரடித்
துணையி னிற்பவர்க் கீறில் சுகந்தரும்
இணையிலாக்குக னுண்டவ னின்பினை
அணைய வாரு மழுங்கல்விட் டன்பர்காள். .. 3
சிறியர் மானத் தினம்பல காரமும்
வறிய கூழு நுகர்ந்து வருந்தலிர்
நறிய ஞானப் பிழம்பயி னாதனின்நறிய ஞானப் பிழம்பயி னாதனின்
பறிய வாரு மழுங்கல்விட்ட மன்பர்காள். .. 4
விடங்க லன்னவுள் ளுள்ளவர் வீழ்கதி
அடங்கு வாரதை யாரரு ளாற்றலால்
தடங்கல் பண்ணித் தயாமுரு கையனின்
படங்க வாரு மழுங்கல்விட் டன்பர்காள். .. 5
தில்லை நந்தியி னந்தனன் றிண்ணியன்
நல்ல கண்ணர்க ணாடயி லங்கையான்
அல்ல லில்லடி யானசிய னார்க்கலை
இல்ல ரந்தை யனந்தர்க ளில்லையால். .. 6
கதிரை நாயகன் காசினி யாசினி
அதிர நீலண்ட சத்தை நடாத்திறை
கதிர றாநகைக் கானசை யார்க்கடல்
இதர நீட லிடர்த்தளை யில்லையால். .. 7
கச்ச ணிந்த தனத்தியர் காட்டகல்
இச்சை நீத்தயி லீச னிறாக்கழல்
நச்ச ணைந்தநல் லார்க ளறாக்கலி
அச்ச நீங்கிநன் கண்ணிட லாணையால். .. 8
நாட்டத் திற்கினி யான்சிகி நாதன்கால்
காட்டத் தக்ககண் ணாளன் கணக்கில்சீர்
நீட்டத் தக்ககை யானினை நீரர்கள்
ஈட்டத் தன்கதி ரைத்தளி யீசனால். .. 9
அந்தத் தானடி யார்க்கினி யானல்ல
கந்தத் தான்கதிர் காலணி யானகைத்
தந்தத் தானறை தாங்கிய தாரினான்
சந்தத் தானஞர் சாடயி னாதனால். .. 10