பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
57. சத்திய போதகம் 10
பலன்சத்தியத்தின் உண்மையை உணர வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

சத்திய போதகம்

பாடல் - சத்திய போதகம் (கொம்பில்லாக்களை விருத்தம்)

பண் - கெளசிகம்
தேவாரப்பண் - காதலாகி
இராகம் - பைரவி
தாளம் - ஆதி

தண்ண வன்கலை மானச் சனிப்புமால்
நண்ணு சாவு நமக்கணை யாமனீள்
கண்ணன் மாமரு கன்முரு கையனை
அண்ண வாரு மழுங்கல்விட டன்பர்காள்.   ..  1

நிதிக்கு லம்பல கூட்டினு நீணிலம்
மதிக்க மாளிகை கட்டினு மாயமாம்
துதிக்கு மன்பிலின் பீகுகன் றூத்துதி
அதிர்க்க வாரு மழுங்கல்விட் டன்பர்காள்.   ..  2

திணையி னாசை யவித்தருட் சீரடித்
துணையி னிற்பவர்க் கீறில் சுகந்தரும்
இணையிலாக்குக னுண்டவ னின்பினை
அணைய வாரு மழுங்கல்விட் டன்பர்காள்.   ..  3

சிறியர் மானத் தினம்பல காரமும்
வறிய கூழு நுகர்ந்து வருந்தலிர்
நறிய ஞானப் பிழம்பயி னாதனின்நறிய ஞானப் பிழம்பயி னாதனின்
பறிய வாரு மழுங்கல்விட்ட மன்பர்காள்.   ..  4

விடங்க லன்னவுள் ளுள்ளவர் வீழ்கதி
அடங்கு வாரதை யாரரு ளாற்றலால்
தடங்கல் பண்ணித் தயாமுரு கையனின்
படங்க வாரு மழுங்கல்விட் டன்பர்காள்.   ..  5

தில்லை நந்தியி னந்தனன் றிண்ணியன்
நல்ல கண்ணர்க ணாடயி லங்கையான்
அல்ல லில்லடி யானசிய னார்க்கலை
இல்ல ரந்தை யனந்தர்க ளில்லையால்.   ..  6

கதிரை நாயகன் காசினி யாசினி
அதிர நீலண்ட சத்தை நடாத்திறை
கதிர றாநகைக் கானசை யார்க்கடல்
இதர நீட லிடர்த்தளை யில்லையால்.   ..  7

கச்ச ணிந்த தனத்தியர் காட்டகல்
இச்சை நீத்தயி லீச னிறாக்கழல்
நச்ச ணைந்தநல் லார்க ளறாக்கலி
அச்ச நீங்கிநன் கண்ணிட லாணையால்.   ..  8

நாட்டத் திற்கினி யான்சிகி நாதன்கால்
காட்டத் தக்ககண் ணாளன் கணக்கில்சீர்
நீட்டத் தக்ககை யானினை நீரர்கள்
ஈட்டத் தன்கதி ரைத்தளி யீசனால்.  ..  9

அந்தத் தானடி யார்க்கினி யானல்ல
கந்தத் தான்கதிர் காலணி யானகைத்
தந்தத் தானறை தாங்கிய தாரினான்
சந்தத் தானஞர் சாடயி னாதனால்.  ..  10

கலியுகம் 5002 சார்வரி (1900) புரட்டாதி மாதம் 15ஆம் தேதி ஆதித்தவாரம்