நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
5. | துக்கரகித பிரார்த்தனை | 10 | |
பலன் | உங்களுடைய துயரம் எதுவாக இருந்தாலும் அத்துயரத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமா?
|
துக்கரகித பிரார்த்தனை
பாடல் - துக்கரகித பிரார்த்தனை
பண் - பழம்பஞ்சுரம்
தேவாரப் பாடல் - முத்தா முத்தி தரவல்ல
இராகம் - சங்கராபரணம்
தாளம் - ரூபகம்
முந்நா னயனா முந்நா லாரியா மொழிசேர் மறைநாவா
இன்னா வணுகா விறைவா குரவா விறையோர் பணிபாதா
மன்னார் மயிலில் வருமா பாலா மடியா வாழ்வாளா
அன்னே யயனே யெனுமென் கவலை யறநீ யருள்வாயே .. 1
ஒழியா விசதப் பொடியாய் பொடியா வுரையார் பொற்கழலாய்
பழிசேர் சிதடத் தனுவோர் பகைஞா பகல்சேர் வேற்கையா
பொழிலார் பழநிப் பதியாய் நிதியாய்புனிதா மாப்பொறையா
அழியா மொழியா வென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 2
சொல்லுஞ் சுருதிப் பொருளே யருளே சுடர்சேர் மெய்ம்மெய்யா
செல்வங் கட்குயர் செல்வக் கயிலைச் சிவமே செவ்வேளே
நல்லந் திகழுங் கேதா ரமிசை நடனஞ் செய்யேறே
அல்லும் பகலும் படுமென் கவலை யறநீ யருள்வாயே .. 3
மாலும் விதியும் பரவுஞ் சரணா வளர்சங் கப்புலவா
வேலுங் குளிரு மிளிர்செங் கையா விரையா ரணிமார்பா
சேலும் வசியு நாணுங் கணினாள் சேயா தண்ணளியா
ஆலுந் தளையா வென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 4
முத்தே மணியே முழுமா நிதியே முதிரா யெளவனமே
சத்தே ரசமே தனியின் னமுதே தவமே தவப்பேறே
வித்தே முளையே முளையுள் ளுயிரே விபுவாய் விரிசோதீ
அத்தா வயில்வே லவனே கவலை யறநீ யருள்வாயே .. 5
தாதா நீபத் தொடரா குமரா சரணா யுததுவசா
போதார் முடியா புனிதா தனியா புயமுந் நாலீசா
வேதா வடிதாழ் விமலா சபலா மிறலார் வேளாளா
ஆதா ரவையா வென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 6
புனலார் கங்கைக் கிடையோர் புதல்வா பொன்னார் கண்ணாளா
எனையா டண்டைச் சரணா புரணா விகல்சேர் சகநாதா
தினைசேர் குன்றக் குறமா னினியைச் சேரும் பவுள்சரளா
அனலார் மெய்யா வென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 7
முட்டா வாட்டா மொழியா நாத்தே முடியாச் சிவலோகா
கட்டா ரறிஞா கருதா மனசா கருணா கரவேலா
எட்டா நிலையா விறையோர் தலைவா விருளெல் லில்லாதோய்
அட்டா வடிவா வென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 8
எஞ்சா வடியார் தொடர்பா வடல்சே ரிறைவா சட்கிரீவா
துஞ்சா வெழிற்கே கயமூர் குழகா சுகுர்தா சுயஞ்சோதீ
பஞ்சா ரடிச்சேல் விழியா டனயா பரிபூ ரணபாதா
அஞ்சா விறலோ யென்றன் கவலை யறநீ யருள்வாயே .. 9
விண்ணா டுறைநா ரதனா சிரியா வியன்வா ருணியீசா
மண்ணார் முசுமன் னனையாள் சிவனே மதியீ புண்ணியனே
பண்ணார் புகழ்பா டினவன் பதியே பரனார் குருநாதா
அண்ணா வடிபே ணியவென் கவலை யறநீ யருள்வாயே
..10