பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » இசை » இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம்

முதற்கண்டம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
7. ஆறெழுத்துண்மை (2) 10
பலன்பகை, அகால மரணம் பயம், பில்லி, சூனியம் முதலியவற்றில் இருந்து உங்களை காத்துக் கொள்ள வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

ஆறெழுத்துண்மை (2)


இசை - ஆறெழுத்துண்மை (2)

பண் - கௌசிகம்
தேவாரப் பாடல் - காதலகி கசிந்து
இராகம் - பைரவி
தாளம் - ஆதி

எண்ணில் பல்வித மாக விருந்திடு
மண்ணொ டைந்து வகைப்படு பூதமும்
பண்ணி வைத்துப் பராபர மாய்நிற்றல்
அண்ண லார்பெய ராறக்க ரங்களே  ..  1

பூரு வந்தக் கிணம்புகழ் வாருணம்
சீரு யர்ந்த வுதக்கடி சேணுநல்
பூர ணச்செய லிற்பொலி வுற்றுள்ள
ஆர ணன்பெய ராறக்க ரங்களே  ..  2

துய்ய மூலமுங் குய்யமுந் தொப்புளும்
மெய்ய னாகத மும்மின் விசுத்தியும்
மைய மான லலாடமு மாய்நிற்கும்
ஐய னார்பெய ராறக்க ரங்களே ..  3

ஓது மாரண மாகம முன்னரும்
கோதி லாத புராண குலங்கணல்
நீதி யாமற நூனிக மங்களும்
ஆதி யின்பெய ராறக்க ரங்களே  ..  4

ஊறி கந்தசைத் தோதி யழுங்கலை
நூறி நல்லக நோன்புறு வார்கட்காம்
கூற ருஞ்சத்த கோடிநன் மந்த்ரமும்
ஆறு ளோன்பெய ராறக்க ரங்களே  ..  5

ஒப்பின் மாவசி யஞ்செவ் வழைப்பொரு
துப்பு றாமோக னந்தம்ப னஞ்சொலத்
தப்பி லாதவுச் சாடன மாரணம்
அப்ப னார்பெய ராறக்க ரங்களே  ..  6

சுத்த மான சுகப்பொரு ளொன்றனைச்
சித்த மீதிருத் தித்தினந் தோறுநல்
பத்தி செய்தவும் பர்க்கரு டந்தவை
அத்த னார்பெய ராறக்க ரங்களே  ..  7

விண்ட லத்துறை விஞ்சையர் கந்தர்வர்
தெண்டு டைத்தெருட் சித்தர் முனீசுரர்
கொண்ட வின்பு பெறற்கருள் கூர்ந்தவை
அண்டர் கோன்பெய ராறக்க ரங்களே ;  ..  8

செம்பொ றிக்கண் விழித்துச் சினந்தடற்
றும்பெ குத்தடி சூலம் பிடித்தெமன்
கெம்பு கிங்கரர் கன்மங் கெடுப்பவை
அம்ப ரன்பெய ராறக்க ரங்களே   ..  9

நீண்ட வாழ்வுடை நித்த வகத்தியன்
பூண்ட மாவனு பூதி புகன்றவன்
காண்டல் கூர்பலர் கண்ணா யிருந்தவை
ஆண்ட வன் பெய ராறக்க ரங்களே  ..  10

கலியுகம் 4995 நந்தன (கி.பி.1893) பங்குனி மாதம் 15ஆம் தேதி ஆதித்தவாரம்