நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம்
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
8. | திருப்பரங்கிரி | 10 | |
பலன் | முருகனுக்கு அடிமையாக தன்னை மாற்றிக் கொண்டால் நமக்கு என்ன நன்மை?
|
திருப்பரங்கிரி
'பாம்பன்'
ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
திருவலங்க திரட்டு
- முதற்கண்டம்* -
இசைத்தமிழ் (இரண்டாம் மண்டலம்)
பாடல் - திருப்பரங்கிரி
பாடல் - திருப்பரங்கிரி
பண் - பஞ்சமம்
தேவாரப் பாடல் - தானெனை முன்படைத்தான்
இராகம் - ஆகிரி
தாளம் - ரூபகம்
எந்தையே யிறையே யிணையரு ளிலையே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
சிந்தைசேர் வானே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
பந்தமே போக்கிப் பதவரு ளாக்கிப்
பகலிர வணவிடா நிலையிற்
சந்ததஞ் சேர்க்கத் தயவுசெய் யாயோ
சரவண சுயம்பெரு மாளே .. 1
ஏசுறா வருளா மிதநல மிலையே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
தேசுசே ரெழிலே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
பாசமே போக்கிப் பதவரு ளாக்கிப்
பரபரி பூரண நிலையில்
நேசமாய் நிலைக்கச் செயும்வகை புரியாய்
நிகழயிற் சுயம்பெரு மாளே .. 2
இன்றுநா ளையெனலி லாவருளிலையே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
சென்றுதே யாவை திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
அன்றுநீ சொனவா றடிமையை யழைத்துன்
னடித்தொழும் பாயுறும் வேலை
ஒன்றையே விதிப்பா யயிற்படை பிடித்தே
யொளிர்சுப சுயம்பொரு மாளே .. 3
எங்கணா யகநீ யிடுமரு ளிலையே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
திங்களா னனனே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
கங்குல்போ லுளவா ணவமல மறவே
கருணைசெய் தேயெனை யாளாய்
அங்கணா புரணா வணியலர்ச் சரணா
வயிலுடைச் சுயம்பெரு மாளே .. 4
இசையியல் கூத்தென் றுளதமிழ் நாதா
விங்கியா னுய்ந்திலே னந்தோ
திசைப்புக ழாதீ திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
வசைதரு மாமும் மலமற நீதான்
வருவது கடினமெ னாதே
உசிதமொ டுதடுத் தாள்வது கடன்கா
ணுயரயிற் சுயம்பெரு மாளே .. 5
இச்சையான் மறற்கே றடிமையென் றானா
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
செச்சைசேர் பிணையாய் திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
பட்சமே யுரித்தாய் பழமல மகற்றிப்
பகரரு மானந்த நிலையில்
நிச்சயா திக்கமா நிறுத்தவா ராயோ
நெடுமயிற் சுயம்பெரு மாளே .. 6
என்னையாள் வானே யேரரு ளிலையே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
தென்னர்மா கூற்றே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
இன்னலா மைவகைப் பாசவல் லொழித்துன்
னிணையடி யென்முடி சூட்டி
நன்னலங் கொளற்குப் பன்னவா ராயோ
நறுமயிற் சுயம்பெரு மாளே .. 7
எம்பிரா னேயுன் னன்பனாக் காயே
லிங்கியா னுய்ந்திலே னந்தோ
செம்பொருட் கடலே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
நம்பினே னுனையே நைந்தறா மாயை
நலிவுறத் தடுத்தா ளாயோ
உம்பர்கா வலனே யுமையவள் சுதனே
யுணர்வயிற் சுயம்பெருமாளே .. 8
இஞ்சையா ணவப்பாம் பின்னமுங் கறிக்கி
னிங்கியா னுய்ந்திலே னந்தோ
செஞ்சடா னனனே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
அஞ்சிடா யெனவே யாதா¢த் தணைத்துன்
னடித்தொழும் பாக்கவா ராயோ
மஞ்சுவாழ் கயப்பெண் மயன்மண வாளா
வடிவயிற் சுயம்பெரு மாளே .. 9
இட்டமா மருடா னில்லையே யாயி
னிங்கியா னுய்ந்திலே னந்தோ
சிட்டர்பா லனனே திகழ்விழுப் பொருளே
திருப்பரங் கிரியுறை சிவனே
கட்டுமா ணவமாங் கயிற்றனை யறுத்தென்
கவலையின் றிறங்கடி யாயோ
மட்டிலா வகுப்பை யுரைத்தவ னிறைவா
மதியயிற் சுயம்பெரு மாளே .. 10